Monday, December 30, 2019

ரன்னிங் டைரி -44

25-12-2019 15:30
கிழக்கு கடற்கரை பூங்கா

பல காரணங்களால் பல நாட்கள் ஓட முடியவில்லை. இன்று காலையே ஓடியே ஆக வேண்டுமென்று முடிவெடுத்துவிட்டேன். மெதுவாக ஓடினேன். இரண்டு கிலோமீட்டர்களுக்கு பிறகு என்னை அறியாமலேயே என்னுடைய வேகத்தில் ஓட ஆரம்பித்தேன். கிழக்கு கடற்கரை பூங்கா  மக்கள் வெள்ளத்தில் மிதந்தது . எங்கு திரும்பினாலும் கூட்டம் கூட்டமாக மனிதர்கள். பல தடவை நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மக்களைப் பார்த்துக் கொண்டே ஓடி முடித்தேன்.


Wednesday, December 18, 2019

கடவுச்சீட்டு - வி.ஜீவகுமாரன்


வசித்து முடித்த இரவு தூக்கமில்லாமல்  என் மனதில் பலவகையான சிந்தனைகள். ஏனோ தெரியவில்லை இன்னும் தமிழ் மற்றும் சுபா  அவர்கள் இருவரின் குழந்தைகளைப் பற்றிய பயமும் கவலையும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. பெரும் கனவு சிதைந்து மீண்டும் அகதிகளாக வீடு திரும்பும் காட்சி என்னை விட்டு அகலாமல் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது .

வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டு இலங்கையை விட்டு டென்மார்க் செல்லும் தமிழ் மற்றும் சுபாவின் கதை இது. பாஸ்ப்போர்ட்டை கிழித்தெறிந்து விட்டு ஜெர்மனியில் வந்து இறக்கும் அவர்கள் முதலில் ஒரு அகதிகள் முகாமில் தங்கவைக்க படுகிறார்கள் அங்கிருந்து தப்பித்து பன்றி ஏற்றிச் செல்லும் வண்டியில் டென்மார்க்கை அடைகிறார்கள் அங்கும் அவர்கள் ஒரு அகதிகள் முகாமில் தங்கவைக்க படுகிறார்கள். அங்குதான் அவர்களின் இடம்பெயர்ந்த வாழ்க்கை தொடங்குகிறது.

தங்களின் படிப்பை முடிக்கிறார்கள்.குழந்தைகள் பிறக்கிறது. இரண்டு மகள்கள் ஒரு மகன். பெற்றோர்களும் அனைத்தையும் மறந்து தங்களின் பேரன் பேத்திகளுக்கு அனைத்தையும் சிறப்பாக செய்கிறார்கள். தங்கள் மறு வாழ்வின் முதல் அடி தங்களின் முதல் மகள் பதின் வயதில் கர்ப்பமானது. அதை அவர்கள் இருவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.தமிழ் தன்மகளை முதன்முதலாக அடிக்கிறான் அதற்கு அவன் இழந்தது பெரிது. மகளை சிறுவர்கள் இல்லத்தில் சேர்கிறது அரசு.

சில வருடங்கள் கழித்து இரண்டாவது மகள் தனக்கு விருப்பமானவரை தனது பெற்றோர்கள் திருமணம் செய்ய தடையாக இருக்கிறார்கள் என்று போலீசில் புகார் செய்து அவர்களை விட்டுச் செல்கிறாள். மகன் மட்டுமே படித்து முடிக்கிறான். அவனிடம் தனக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ் என்று சொல்லிவிட்டு மீண்டும் இலங்கைக்கே செல்கிறார்கள். அங்கு சென்று இறங்கியவுடன் தமிழ் இருவரின் பாஸ்ப்போர்ட்டையும் கிழித்தெறிவதோடு கதை முடிகிறது .

புலம்பெயர் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் ஜீவகுமாரன். தமிழர்கள் எங்கு சென்றாலும் சாதியையும் கொண்டு செல்கிறார்கள். அதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். கலாச்சார வித்யாசங்கள் எப்படி இரு தலைமுறைகளை பாதிக்கின்றன என்பதை மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறார் ஜீவகுமாரன். வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் குடும்பங்களுக்கு இது பெரிய பிரச்சன்னை.  பிள்ளைகளை பதின் வயதில் ஊருக்கு அனுப்புவதா வேண்டாமா என்ற கேள்வியுடன் பெற்றோர்கள் பேசுவதை நான் இங்கு சிங்கப்பூரில் பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். மிகவும் கடினமான முடிவுகளில் ஒன்று.

வாசிப்பதற்கு தடையில்லா மொழிநடை.பெரிதும் இலங்கை தமிழ் இல்லாதது என்  போன்ற வாசர்களுக்கு வாசிப்பை எளிதாக்கியது. வாசிக்க வேண்டிய புத்தகம் .

Tuesday, December 3, 2019

ரன்னிங் டைரி -43

30-11-2019 18:20
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் சிங்கப்பூர் மாரத்தான்

நான் 42 கிலோ மீட்டர் ஓடவில்லை. நான் ஓடியது 21 கிலோ மீட்டர் தான். இந்த பந்தயத்தில் நான் திட்டமிட்டபடி எதுவுமே நடக்கவில்லை. 42 மற்றும் 21 கிலோ மீட்டர் ஓட்டம் ஒரே நேரத்தில் தொடங்கியது.சரியான கூட்டம். முந்தி செல்வதென்பது ஒரு போராட்டமாக இருந்தது. பதினாறு கிலோமீட்டர் வரை எதையுமே நினைக்காமல் முன்னால் ஓடியவர்கள் கால்களில் மட்டுமே கவனம் இருந்தது. ஆனால் நான் எப்போதும் ஓடும் வேகத்தில் ஓடவில்லை மிக மெதுவாகத்தான் ஓட முடிந்தது.

பதினாறு கிலோமீட்டருக்கு பிறகுதான் கவனம் ஓடிக்கொண்டிருந்த பாடலில் சென்றது. ஓடிக் கொண்டிருந்தது "கண்ணே கலைமானே". என்ன கொடுமடா என்று நினைத்துக் கொண்டேன்.இருந்தாலும் பாட்டை மாற்றவில்லை. பலவிதமான மனித முகங்கள். மற்ற வீரர்களை கவனிக்க ஆரம்பித்தேன். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு பல்வேறு வகையான உடைகள் சூக்கள் ,சாக்ஸ் மற்றும் ஓடும் ஸ்டைல். அப்படியே அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே 21 கிலோமீட்டரை ஓடி முடித்தேன்.

Thanks to wonderful volunteers.

Thursday, November 28, 2019

The Costliest Pearl - Bertil Lintner


சீனா எப்படி இந்தியப்  பெருங்கடலைச் சுற்றி பாதுகாப்பு மையங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றிய புத்தகம்.அதிபர் சீயின் கனவான "Belt and Road Initiative" திட்டத்தின்படி சீனா மிக விரைவாக அனைத்து துறையிலும் குறிப்பாக வெளிவுறவில் முன்னேரி வருகிறது. கிட்டத்தட்ட தெற்கு சீன கடல் முழுவதையும் சீனா தன்னுடையதாகிக் கொண்டது. அடுத்து இந்திய பெருங்கடல்.

காலங்காலமாக இந்தியாவிற்கு இந்திய பெருங்கடல் தனக்குத்தான் என்பதில்  எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் சமீப காலமாக சீனா இந்தியப் பெருங்கடலில் உள்ள  சிறு தீவு நாடுகளை தனது பண மற்றும் கட்டுமான உதவிகள் மூலம்தன் பக்கம் ஈர்த்துக் கொண்டிருக்கிறது.சீனா எந்தொரு நாட்டிற்கும் எதையும் இலவசமாக செய்யாது. ஏர்போர்ட் ,பள்ளிகள் , மருத்துவமனைகள் சாலைகள் இப்படி பல பணிகள் செய்வதற்கு கடன் மட்டும் கொடுக்காமல் அவைகளை செய்வதற்கு சீனர்களை மட்டும்தான் பயன்படுத்துகிறது.மற்றொரு முக்கியமான விசயம் சீனா தான் காட்ட உதவும்  ஏர்போர்ட் மற்றும் துறைமுகங்களின் நிருவாகத்தை 80% சதவீதத்தை தன் கையில் வைத்துக் கொள்கிறது.

இந்திய பெருங்கடலில் உள்ள பெரும்பான்மையான சிறிய நாடுகள் வறுமையில் உள்ளன அதிலும் நிலையான அரசில்லாமலும் இருக்கிறது. இந்த சூழ்நிலையை சீனா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. சீனா "Debt-trap diplomacy" மூலம் பல நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. அதற்கு நல்ல உதாரணம் இலங்கையில் உள்ள ஹம்பன்தோட்டா (Hambantota) துறைமுகம். இலங்கை கடனைத் திருப்பிக் கொடுக்காதலால் தற்போது சீனா அந்த துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு எடுத்துக்கொண்டது. இது போல பல ஆப்ரிக்க நாடுகள் சீனாவின் பிடியில் சிக்கியுள்ளது.

பெர்டில் இந்திய பெருங்கடலில் உள்ள ஒவ்வொரு நாடுகளையும்  அதன்  இந்திய சீன உறவுவின் அடிப்படையில் விளக்குகிறார்.வெகுகாலமாக இந்தியாவின் பக்கம் இருந்த மியான்மார் மெதுவாக சீனாவின் பக்கம் எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பதை வாசிக்கும்போது ராஜதந்திரம் என்றால் இப்படித்தான் இருக்கும்போல என்று யோசிக்க வைக்கிறது. இந்தியா மியன்மாரின் ஒரு இனக் குழுவிற்கு ஆயுதம் வழங்கியது என்பது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. மாலத்தீவிலும் சீனா இந்தியாவின் ஆதிக்கத்தை உரசி  பார்க்க ஆரம்பித்துவிட்டது.

இந்தியா சீனாவின் "Belt and Road Initiative" திட்டத்தை எதிர்க்கிறது ஆனால் குஜராத்தில் சீனா தொழிற் பூங்காவை தொடங்கவிருக்கிறது!  இதற்கு எப்படி அரசு அனுமதி அளித்தது என்பது புரியாத புதிர். மொரீசியஸ் மற்றும் ஸ்கைசெல்ஸ் இன்னும் இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நாடுகள்தான் ஆனால் அது எவ்வளவு காலத்திற்கு என்று இப்போது கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன.  இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு பெரிய  ராணுவ முகாம் இல்லை. இந்த இரண்டு நாடுகளில் ஒன்றில் இந்தியா ராணுவ முகாம் தொடங்க பெரும் முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சீனாவோ டிஜிபோட்டியில் (Djibouti) அமெரிக்க இராணுவ முகாமிற்கு அருகிலேயே தனது நவீன இராணுவ முகமை 2017-ல் தொடங்கியுள்ளது.

சீனாவின் இந்திய பெருங்கடல் நடவடிக்கைகளை எதிர் கொள்வதற்கு இந்திய "சாகர் மாலா " என்ற திட்டத்தைத் தீட்டி இந்திய கடல் எல்லைகளை பலப்படுத்த ஆரம்பித்திருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தில் என்ன பிரச்சன்னை என்றால் இந்த திட்டத்தால் வரும் இழப்புகளை மக்களிடம் சொல்லாமலிருப்பதுதான். பல லட்ச மக்கள் வாழ்வாதாரம் கடலை நம்பியுள்ளது ஆனால் இந்திய அரசோ அவர்களிடம் எதையும் கேட்டதாக தெரியவில்லை. பாதிக்கப்படும் மக்களிடம் கேட்காமல் முடிவு செய்தல் என்ன மாதிரி விளைவு வரும் என்பதற்கு பல நாடுகளில் நடக்கும் சீன எதிர்ப்பே நல்ல உதாரணம்.

பெர்டில் இந்த பட்டு பாதை (silk route) என்ற சொல்லே சமீபத்தில் தான் உபோயகத்தில் வந்தது என்கிறார். "Belt and Road Initiative" திட்டத்தை பிரபலப் படுத்துவதற்கும் அந்த திட்டம் சரிதான் என்பதற்கும் சீனா இந்த தவறான பிரச்சாரத்தை மேற்கொள்கிறது என்கிறார்.Silk Route என்ற வார்த்தை ஐரோப்பியர்களால் தான் பிரபலப் படுத்தப்பட்டது என்கிறார்.அது "seidenstrassen" என்ற  ஜெர்மன் வார்த்தையின் மொழிபெரியர்ப்பு என்கிறார். இது எல்லாவற்றிற்கும் மேலாக இப்போது சீனா சொல்லும் "Maritime Silk Route " என்பதற்கு வரலாற்று பூர்வமான எந்த ஆதாரமும் இல்லை. சீனாவின் ஒரே பழங்காலப் கடல் பயணம் ஷெங் ஹி (Zheng He) என்பவரால் மேற்கொள்ளப்பட்டது தான் என்கிறார். அவரும் இப்போது சீனா கூறும் அனைத்து பகுதிகளுக்கும் சென்றவர் அல்ல.சீயின் கனவு நிறைவேறுமா? இந்தியா இந்திய பெருங்கடலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்குமா?
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

ரன்னிங் டைரி -42

28-11-2019 08:14
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

இன்று ஓட ஆரம்பித்ததே வேகமாகத்தான். எதையுமே நினைக்காமல் ஓடிய  நாள். கவனம் முழுவதும் சுவாசத்தில் இருந்தது.

ரன்னிங் டைரி -41

27-11-2019 18:22
அலுவகத்திலிருந்து வீடுவரை

நேற்றுபோல் இன்றும் எந்த வழியில் ஓடுவது என்ற கேள்வியுடன் ஓட  ஆரம்பித்தேன்.ஊர் ஞாபகம் வந்தது. நல்ல மழையாம். அக்காமார்கள் இருக்கும் தெரு மிதந்து கொண்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். எந்த நோயும் பரவக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன். நேராக நூலகத்தில் நுழைந்தேன் இரண்டு நிமிடங்கள் அங்கு செலவழித்தேன். பிறகு மீண்டும் ஓட ஆரம்பித்தேன் .திடீரென்று ஒரு எண்ணம் வந்தது ஏன் புத்தகக்கடைக்கு சென்று "Mekong Review " வாங்கக்கூடாது .ஒடனே திரும்பி  112 கத்தோங்  ஷாப்பிங் மாலிற்கு ஓடினேன். அங்கு ஐந்து நிமிடம் அந்த புத்தகத்தைத் தேடினேன் ஆனால் அது கிடைக்கவில்லை.மீண்டும் ஓட ஆரம்பித்தேன். வெறெங்கு அந்த புத்தகம் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, November 27, 2019

ரன்னிங் டைரி -40

26-11-2019 18:22
அலுவகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் எந்த வழியில் ஓட வேண்டுமென்று யோசித்துக் கொண்டே எந்த முடிவும் எடுக்காமல் ஓடினேன்.வேகமாக ஓடினேன். யுனோஸ் சிக்னல் வந்தவுடன் என்னை அறியாமலேயே வலது பக்கம் திரும்பினேன்.இந்த வழி என் வீட்டிற்கு சற்று தூரம் குறைவானது. அடுத்த வருடம் மாரத்தான் அல்லது 21 கி மீ  ஓடக்கூடாது என்று எண்ணிக் கொண்டேன். பத்து கி மீ மட்டும் தான் ஓட வேண்டும் அதுவும் நேரத்தைக் குறைத்து ஓட வேண்டும் என்றும் எண்ணிக் கொண்டேன். தற்போது நான் பத்து கி மீ  ஓட கிட்டத்தட்ட 40 முதல் 46 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறேன் . பலதடவை 50 நிமிடங்களுக்கு மேல் எடுத்துள்ளேன். இதை குறைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

Tuesday, November 26, 2019

ரன்னிங் டைரி -39

26-11-2019 08:12
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

சரியான வெய்யில் . "Constitution Day"ஞாபகத்தில் வந்தது. எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் "WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens;  JUSTICE, social, economic and political;  LIBERTY of thought, expression, belief, faith and worship; EQUALITY of status and of opportunity; and to promote among them all
 FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;
 IN OUR CONSTITUENT ASSEMBLY this  26th day of November 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION."  (இது முழுவதும் ஞாபகத்தில் வரவில்லை) . நமக்கு பள்ளியில் இந்திய அரசியலமைபைப் பற்றி  ஏன் சொல்லிக் கொடுக்கவில்லை என்று யோசித்துக்கொண்டே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்திய அரசியலமைப்பு முழுவதும் தெரியுமா என்ற கேள்வியுடன் அலுவலகம் அடைந்தேன்.

Monday, November 25, 2019

ரன்னிங் டைரி -38

23-11-2019 05:04
வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட ஆரம்பித்தவுடன் கவனித்து இருளைத்தான்.கும்மிருட்டு. "காட்டுக்குயிலு.." பாடல் ஆரம்பித்தது. மிகவும் மெதுவாக ஓடினேன். கடற்கரையை நெருங்கியவுடன் உறவினர் ஒருவரின் இறப்புதான். நான் அவருடன் நெருங்கி பழகியதில்லை. அவரின் சொத்து பிரச்சனைகளைப்  பற்றி நண்பர்கள் கூறியதுதான். பணம் தான் எல்லாம். நான் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணுபவன் ஆனால் கடந்த பத்து வருடங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளைக் கேட்கும் போது மக்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள் என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.

கிழக்கு கடற்கரை பூங்காவில்  புது சைக்கிள் பார்க் திறக்கப்பட்டுள்ளது. எதார்த்தமாக திரும்பியபோது கவனித்தேன். புதிது புதிதாக எதையாவது செய்து கொண்டே இருக்கிறது சிங்கப்பூர் அரசு. கிழக்கு கடற்கரை பூங்காவில் எவ்வளவு மாற்றம். காலையில் இந்த பூங்காவின் அழகே தனி. ஏனோ தனியாக ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு உணர்வு. அடுத்த வாரம் 21 கிலோமீட்டர் பந்தயம் உள்ளது அதனால் இந்த வாரம் கண்டிப்பாக பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். அதைப் பற்றி யோசித்துக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி -37

21-11-2019 18:20
அலுவலகத்திலிருந்து வீடுவரை

எதுவுமே எண்ணாமல் ஓடிய நாள். எந்தெந்த பாட்டு ஓடியது என்று கூட  நினைவில் இல்லை.

Thursday, November 21, 2019

ரன்னிங் டைரி -36

20-11-2019 18:22
அலுவலகத்திலிருந்து வீடுவரை

மழை மேகம். குளிர் காற்று. ஓட ஆரம்பித்தவுடன் ஈரக் காற்று முகத்தில் அறைந்தது. ஓடிய கொஞ்ச நேரத்திலேயே இன்று இரவு செய்ய வேண்டிய அப்டேட் பற்றிய எண்ணம் வந்தது. இந்த கஸ்டமர் எப்பவுமே ஐந்து மணிக்கு மேல்தான் இதை செய் அதை செய்யென்று சொல்வார்கள். மற்றொரு இம்சை அவர்கள் ஆறு மணிக்குமேல் எந்த கேள்விக்கும் பதில் சொல்லமாட்டார்கள். அதனாலேயே வேகமாக ஓடினேன்.

எந்த எந்த புத்தகங்களை நூலகத்திற்கு திருப்பிக் கொடுக்க வேண்டுமென்று எண்ணம் வந்தது. பல புத்தகங்களைப் படித்தாயிற்று இன்னும் இரண்டு புத்தகங்களைப்  படிக்க வேண்டும். ரஸ்யா பற்றிய இரண்டு புத்தங்கள் அப்படியே உள்ளன. கண்டிப்பாக படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேவீட்டை அடைந்தேன்.

Tuesday, November 19, 2019

ரன்னிங் டைரி -35

19-11-2019 08:14
வீட்டிலிருந்து அலுவலகம்வரை 

நேற்று ஓடவில்லை .ஞாயிறு இரவு முழுவதும் அலுவலக வேலை. ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது இரண்டு விசயங்கள். முதலாவது "Why the slowdown is in the Mind " என்று தலைப்பில் விவேக் கவுல் எழுதிய கட்டுரைதான். கிட்டத்தட்ட அனைத்து தொழில்களிலும் தொய்வு.  விவேக் கவுல் ஒவ்வொரு துறையாக அலசுகிறார். எக்கனாமிக்ஸ் தெரியாத எனக்கே ஓரளவு இந்த கட்டுரை புரிந்தது. என்னதான் அரசு செய்து கொண்டிருக்கிறது?! அவர் கூறுவது போல slowdown சென்று சொல்லியே slowdown ஆகியது என்று ஒருசில துறைகளைத் தான் சொல்லமுடியும்.

இரண்டாவது "The Telecom Tain Wreck" என்ற தலைப்பில் நவதா பாண்டே எழுதிய கட்டுரை. ஒரு துறையை எப்படியெல்லாம் வழிநடத்தக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தியா டெலிகாம் இண்டஸ்ட்ரி தான். எப்படி அடுத்தடுத்து அரசுகள் தவறு மேல் தவறு செய்திருக்கிறார்கள் .இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இத்துறை ஒரு எடுத்துக்காட்டு. இந்த இரண்டு கட்டுரைகளும் mint asia பத்திரிக்கையில் வந்துள்ளது. இந்த பத்திரிக்கையை முழுவதும் வாசிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

Friday, November 15, 2019

ரன்னிங் டைரி -34

14-11-2019 08:14
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது மலையாள இயக்குநர் ஜெயராஜ் தான். அவருடைய பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். ஏனோ அவரின் மற்ற படங்களையும் பார்க்க வேண்டுமென்று தோன்றியது. தமிழ் படங்களை விட மலையாளப் படங்கள் எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தோன்றுகிறது. "The Great Smog Of India" புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன். அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்று யோசித்துக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

Wednesday, November 13, 2019

ரன்னிங் டைரி -33

13-11-2019 08:21
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

சர்ச் அருகில் வந்தவுடன் "The Synod of Bishops for the Pan-Amazon region" ஞாபகத்தில் வந்தது. ஏன் இந்த அமெரிக்க conservative catholics இவ்வளவு பிரச்னை பண்ணுகிறார்கள் என்றே புரியவில்லை. சில விசயங்கள் ஓகே. ஒரு சாரார் இந்த போப்யை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறார்கள். திருச்சபைக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. அதை எல்லாம் விட்டுவிட்டு ... என்னத்த சொல்ல. அப்படியே அமர்த்தியா சென் ஞாபகம் வந்தது. அவரின் புத்தகங்களை படிக்க வேண்டுமென்று ஓடிக்கொண்டே முடிவு செய்தேன். அப்படியே அலுவலகத்தை அடைந்தேன்.

ரன்னிங் டைரி -32

12-11-2019 18:17
அலுவகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது "Data is Money" என்ற வாக்கியம் தான். ஏனென்றால் நேற்று கஸ்டமர் ஒருவர் எல்லா transaction-யும் பேக்கப் எடுத்து  ஈமெயிலில் அனுப்ப முடியுமா என்று கேட்டதுதான். ஏற்கனவே இரண்டு பேக்கப் அந்த அப்பிளிகேஷனில் உள்ளது. நாங்கள் அப்பிளிகேஷன் டிசைன் செய்யும் போதே பேக்கப் மற்றும் ரெஸ்டோர் பற்றி யோசித்து எங்களின் solution-ஐ அவர்களுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் சம்மதத்தையும் பெற்ற பின்னர்தான் அதை implement செய்தோம். என்னத்த சொல்ல ! எல்லாவற்றையும் அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னர் தான் நாங்கள் செய்தோம் ஆனால் அவர்கள் மீண்டும் மீண்டும் மாற்றங்கள் செய்ய சொல்கிறார்கள். அதையே யோசித்துக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

Tuesday, November 12, 2019

ரன்னிங் டைரி -31

12-11-2019 08:21
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஆரம்பித்ததே வேகமாக ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் கடந்து பிறகு சிக்னல் வந்தது. நின்று கண்ணாடியை மாட்டிக்கொண்டேன் . அலுவலகம் வரும் வரை எதையும் யோசிக்கவில்லை. என்றும்  எதையும் யோசிக்காமல் ஸ்வாசத்தை மாட்டும் எண்ணத்தில் நிறுத்திக் கொண்டு முழு ஓட்டத்தையும் நிறைவு செய்ய வேண்டும். ஒருசில நாட்கள் அப்படி நடந்ததுண்டு.பார்ப்போம் .

ரன்னிங் டைரி -30

12-11-2019 18:21
அலுவகளத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் மனதில் தோன்றியது அயோத்தி தீர்ப்புதான் . தீர்ப்பை முழுவதுமாக இன்னும் படிக்கவில்லை.படிக்க வேண்டும்."A People's Constitution - Rohit De" என்ற புத்தகம்தான்  ஞாபகத்தில் வந்தது. இன்னும் முழுவதும் படிக்கவில்லை. சிக்னலில் நின்றிருக்கும் போது ஒரு பெண் சிவப்பு விளக்கு வந்த பிறகு வேகமாக ஓடிக் கடந்தார். நான் திருத்திரு என்று பார்த்துக் கொண்டிருந்தேன். சிக்னல் மாறிய பிறகு நான் அவரைக் கடந்து சென்றேன். அவர் என்னைப் பார்த்து கைகட்டிச் சிரித்தார். எதற்கு சிரித்தார் என்றே தெரியவில்லை. டிராபிக் விதியை மதித்ததற்கா என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

ரன்னிங் டைரி -29

09-11-2019 05:18
கிழக்கு கடற்கரை பூங்கா

நேற்றே இன்று கண்டிப்பாக ஓட வேண்டுமென்று முடிவு செய்துவிட்டேன். ஓட தொடங்கியபோது "முத்து மணி மாலை" ஆரம்பித்தது. எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அப்படியே "சின்ன கவுண்டர்" படம் மனதில் தோன்றியது. நான் எப்போது அந்த படம் முதலில் பார்த்தேன் என்று ஞாபகமில்லை. இப்போது இந்த படம் மனதில் வரக் காரணம் ஏதோ ஒரு சேனலில் "சின்ன கவுண்டர்" ,"தேவர் மகன் " போன்ற படங்களுக்கு பெரிதாக ஏதும் எதிர்ப்பு வரவில்லை ஆனால் "அசுரன்" பரியேறும் பெருமாள்" போன்ற படங்களுக்கு ஏன் பெரிய எதிர்ப்பு வருகிறது என்று ஒருவர்  கேட்டார். உண்மைதானே!  அசுரன் படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி மனதில் ஓடியது. என்ன ஒரு வெறித்தனம். அந்த மனிதனின் வாழ்நாள் கோபம்.தனுஷ் ஒரு மகா நடிகன்.

பெடோக் ஜெட்டியை (jetty) தாண்டும்போதுதான் கவனித்தேன் என்னை தொடர்ந்து ஒருவர் என் பின்னால்  ஓடி வந்து கொண்டிருந்தார். நான் வேகத்தைக் அதிகரித்தேன்.அவரும் அதிகரித்தார்.இப்படியே அடுத்த நான்கு கிலோமீட்டர் ஓடினோம். நான் அவர் என்னைத் தாண்டி ஓடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தேன்.முடிவில் அவர் நின்றுவிட்டார். நான் திரும்பி வரும்போது அவரைப் பார்த்து கை அசைத்தேன் அவரும் திரும்பி சிரித்தார். நன்றாக விடிந்துவிட்டது. பெரும் எண்ணிக்கையில் மக்கள் ஓடிக்கொண்டிருந்தனர். கிழக்கு கடற்கரை பூங்காவில்  வரவர கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வேறு எங்கு சென்று ஓடலாம் என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

Friday, November 8, 2019

The Great Derangement - Amitav Ghosh


Contrary to what I might like to think,my life is not guided by reason;it is ruled rather by the inertia of habitual motion.
பூமி வெப்பமடைதல் பற்றிய புத்தகம். Stories ,History  மற்றும் Politics  என்று  மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.இதில் Stories மட்டும் புத்தகத்தின் பாதி. பூமி வெப்பமடைதல் பற்றி ஏன் தற்போதைய புனைவுகளில் அதிகம் வரவில்லை என்ற கேள்வி எழுப்புகிறார். பூமி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணம்  இயற்கையை புரிந்து கொள்ளாமல் மனிதன் நடந்து கொள்வதுதான் என்கிறார். நமக்கும் இயற்கைக்கும் இருக்கும் உறவை நாம் கண்டிப்பாக கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம் என்கிறார்.
The great, irreplaceable potentiality of fiction is that it makes possible the imagining of possibilities.
ஒரு பக்கம் பூமியின் வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்தபோது எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தில் படிப்படியாக இயற்கைப் பற்றிய விவரங்களைக்  குறைக்க  ஆரம்பித்தார்கள்.தெரிந்தோ தெரியாமலோ இப்படி ஆனது. ஆனால் நம் கண்முன்னால் காணுவத்தைக் கூட எழுதாதது வருத்தமளிக்கிறது என்கிறார் கோஷ். அப்படி எழுதினாலும் அதை அறிவியல் புனைவு(sci-fi ) அல்லது cli-fi பிரிவில் சேர்த்துவிடுகிறார்கள் அதனால் அதிகபேர் படிக்க முடிவதில்லை.  முதல் பகுதியில் கோஷ் பயன்படுத்தும் வார்த்தைகள் என்னமோ நான் ஏதோ சயின்ஸ் கிளாசில் இருப்பதுபோல் இருந்தது. பாதி புரிந்தும் பாதி புரியாமலும். பிறகுதான் தெரிந்தது இந்த புத்தகம் ஒரு லெச்சரை விரிவாக எழுதியது என்று.
Capitalist trade and industry cannot thrive without access to military and political power. State interventions have always been critical to its advancement.
History பகுதியில் பூமியின் இன்றைய நிலைமைக்கு முக்கிய  காரணம் முதலாளித்துவம் அல்ல மாறாக பேரரசுகள் அதிலும் பிரித்தானிய காலனித்துவம் என்கிறார். பிரித்தானிய அரசின் கொள்ளைதான் காலனிய நாடுகளில் பெரும் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்தியது.அதன் மூலம் பிரித்தானிய தொழில்மயமாக்கலில் பெரும் வளர்ச்சியடைந்தது.அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் சுட்டிக் காட்டுகிறார் கோஷ்.ஆனால் அதில் ஒரு பயனும் இருக்கிறது என்கிறார்.அதாவது பிரித்தானியாவில் இருந்து விடுபட்ட ஆசிய மற்றும் ஆப்பிரிக்க காலனிய  நாடுகள் தொழில்மயமாக்கலுக்குள் கிட்டத்தட்ட நூறாண்டுகளுக்குப் பிறகுதான் வந்தது. அதனால் சுற்றுப்புற சீரழிவு தாமதமாகத்தான் வந்தது என்கிறார்.சட்டென்று மனதுக்கு சரியென்று படுகிறது ஆனால் ஆனால் மக்கள்தொகை மற்றும் ஏற்றத்தாழ்வு நூறாண்டுகளுக்கு முன் இப்போது போல அல்ல. ஏனோ அதை பற்றி கோஷ் ஏதும் சொல்லவில்லை.ஆசியாவின் பங்களிப்புதான் பூமி வெப்பமடைதலில் மிக முக்கியம் ஏனென்றால் அங்குதான் அதிக மக்கள் பாதிக்கப்படும் சாத்தியம் அதிகம் என்கிறார். அது உண்மைதான் நான் வாசித்த பல்வேறு அறிக்கைகளில் அதுவே கூறப்பட்டுள்ளது .
If whole societies and polities are to adapt then the necessary decisions will need to be made collectively, within political institutions, as happens in wartime or national emergencies. After all, isn’t that what politics, in its most fundamental form, is about? Collective survival and the preservation of the body politic?
Politics பகுதியில் பெயரைப் போலவே பூமி வெப்பமடைதல் பற்றிய அரசியலைப் பேசுகிறார் கோஷ்.பூமி வெப்பமடைதல் பற்றி நம்மளிடையே ஒருமித்த கருத்து இல்லாதது  எந்த முடிவு  எடுப்பதற்கும் ஒரு பெரிய தடையாக இருக்கிறது என்கிறார். பாரிஸ் ஒப்பந்தத்திற்கும் போப் பிரான்சிஸின் "Laudato Si"  கடிதத்திற்கு உள்ள பெரும் வித்தியாசத்தை எடுத்துக்காட்டி இப்படி மத நிறுவனங்கள் தான் மக்களை பெரிதாகவும் விரைவாகவும் இணைக்க முடியும் என்கிறார்.போப் பிரான்சிஸின் "Laudato Si"  கண்டிப்பாக வாசிக்க வேண்டிய ஆவணம். போப் அனைத்தையும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் எல்லோருக்கும் புரியும் மாதிரி எழுதியுள்ளார் ஆனால் பாரிஸ் ஒப்பந்தமோ ஏதோ corporate ஒப்பந்தம் மாதிரி எவருக்கும் புரியாத அளவுக்கு உள்ளது.பூமி வெப்பமடைதல் பற்றி ஒரு புதிய கோணத்தைக் வாசகருக்கு அளிக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Thursday, November 7, 2019

ரன்னிங் டைரி -28

07-11-2019 08:14
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

நல்ல வெய்யில்.ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது டெல்லியின் காற்று மாசு பற்றி படித்ததுதான். எம்மாடியோவ் ! என்னதான் அரசு பண்ணுகிச்சுனு தெரியல. இவ்வளவு மோசமா ?! நான் நான்கு முறை டெல்லி  சென்றிருக்கிறேன் நான்கு முறையும் அதை கவனித்திருக்கிறேன். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் மூக்கில் கைக்குட்டையை கட்டிவிடுவேன். டெல்லி மக்களின் துயரைப் படிக்கவே வருத்தமாக இருந்தது. அப்படியே சிங்கப்பூரைப் பற்றி யோசனை வந்தது. வருடாவருடம் இங்கும் haze பிரச்சனை. இந்த வருடம் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேல் வெளிப்புற நடவடிக்கைகள் ஏதும் செய்ய முடியவில்லை. ஒரு வாரத்திற்கே இப்படியென்றால் பாவம் டெல்லி மக்கள்.

ஏன் நம் மக்கள் இயற்கையை விட்டு பிரிந்து கொண்டே இருக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

Wednesday, November 6, 2019

ரன்னிங் டைரி -27

05-11-2019 18:14
அலுவகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் இன்று நடந்த ஒரு உரையாடல்தான் ஞாபகம் வந்தது. அவர் ஒரு வடஇந்தியர் பத்து வருடத்திற்கும் மேலாக IT  அலுவலக மேலாளர். அலுவலகத்தில் எவருடைய பேச்சையும் கேட்காதவர். திடீரென்று இன்று என்னை போனில் அழைத்தார். யாரும் தன்னிடம் ஏதும் சொல்லவில்லை என்றார். நான் அவரிடம் எத்தனை நாள் அவர் அலுவலகம் செல்கிறார் என்று கேட்டான். எப்போதாவது என்றார். நான் அது தான் அவர்கள் யாரும் அவரிடம் ஏதும் பேசாததற்கு கரணம் என்றேன். அவர்கள் தேவைப்படும் போது இவர் அங்கு இல்லை அதனால் அவர்களும் இவரை மெதுவாக ஒதுக்க ஆரம்பித்தனர். நான் இதை அவரிடம் சொன்னபோது அவர் என்னிடம் ஏதும் பேசவில்லை.

எண்ணம் அவரிடம் இருந்து  அப்படியே தென்னாபிரிக்கா ரக்பி அணியின் கேப்டன் சியா கோலிசியிடம் சென்றது.மனுசன் எவ்வளவு கஸ்டப்பட்டு இந்த நிலைமைக்கு வந்திருக்காரு நினைக்கும்போதே பிரம்மிக்க வைக்கிறது. இன்று அவர் உலகக் கோப்பையை ஏந்தும்  முதல் black கேப்டன். அவரின் சிரிப்போடு வீட்டை சென்றடைந்தேன்.

Tuesday, November 5, 2019

ரன்னிங் டைரி -26

05-11-2019 08:10
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓடுவதற்கு ரெடியாகுமுன்பே heart rate monitor-ஐ பைக்குள் வைத்து விட்டேன். இன்றும் வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. மெதுவாகதான் ஓடவேண்டும் என்று முடிவெடுத்து மிக மெதுவாக ஓடினேன். "ஹவா ஹவா "  பாடல் ஆரம்பித்தவுடன் ஒரு புத்துணர்வு தொற்றிக்கொண்டது. வேகம் என்னை அறியாமலேயே கூடியது.பாட்டு முடியும் போது புளியம்தோப்பு பழனியின் பாடல்கள்தான் மனதில் வந்தது. இந்த இரு குரல்களுக்கும் ஒருவிதமான வசீகரம். சிறுவயதில் எங்கள் பெரியப்பா புளியம்தோப்பு பழனியின் பாடல்களை கேசட் பிளேயரில் அடிக்கடி போடுவார்.அப்படியே பெரியாப்பாவின் ஞாபகம் வந்தது. என் பெற்றோரை அடுத்து அதிகம் நேசிக்கும் முந்தின தலைமுறை நபர். அப்பாவின் பெரியம்மா பையன்.பெரும் ரசனைக்காரர். அனைத்தையும் ரசித்து செய்பவர்.பெரியப்பா பாடுவதை கேட்பது ஒரு சுகம். எனக்கு தெரிந்து ஊரில் புத்தகம் படிக்கும் சிலரில் பெரியப்பாவும் ஒருவர். பெரியப்பா மூலம் தான் இந்தியா டுடே ,தமிழன் எக்ஸ்பிரஸ் மற்றும் பல மாத/வார பத்திரிகைகள் அறிமுகமானது.மீனவர்கள் பற்றிய ஏராளமான புத்தகங்களை வைத்திருப்பார்.  ஊருக்கு எப்போது சென்றாலும் முதலில் போகும் வீடு பெரியப்பா வீடுதான். பெரியப்பாவை நினைத்துக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

கல் மேல் நடந்த காலம் - தியடோர் பாஸ்கரன்


தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து புத்தகங்களையும் படிக்க வேண்டுமென்ற ஆசை.அதனால் இந்த புத்தகத்தையும் நூலகத்தில் இருந்து எடுத்தேன்.இது அவரது வரலாறு சார்ந்த கட்டுரைகளைக் கொண்ட புத்தகம். இதில் அவர் எழுதியுள்ள பல விசயங்கள் எனக்கு இதற்கு முன் தெரியாது. நம் கலாச்சாரத்தையும் வரலாறையும் தெரியாதது எவ்வளவு மோசமான விசயம். ஏனோ பாடப்புத்தகத்தில் படித்த வரலாற்று நிகழ்வுகள் சாதாரணமாக தெரிந்தது ஆனால் அவற்றையே கொஞ்சம் விரிவாகவும் சுவாரசியமாக எழுதினால் வசிப்பதற்கு விருப்பம் வருகிறது. இந்த புத்தகம் அப்படிப்பட்ட புத்தகம்.
"தஞ்சாவூர் பெரியகோவில் கல்வெட்டுகள்" என்ற தலைப்பில் உள்ள கட்டுரை பெரியகோவிலைப் பற்றி ஒரு ஆழமான  அறிமுகத்தைக் கொடுக்கிறது என்றால் மிகையாகாது. படித்தவுடன் தோன்றியது ஏன் இந்த கோவிலின் கட்டுமான பணிகளை வைத்து பெருமளவு நாவல்கள் வரவில்லை என்றுதான்.  இருந்தாலும் இருக்கும் ஆனால் எனக்கு இன்னும் அறிமுகமாகவில்லை."ஏழு கன்னிமார்கள்: கலையும் கதையும்" கட்டுரையில் சப்தமாதர்களின் வழிபாடு இந்தியா முழுவதும் இருந்தாலும் அவர்களுக்கு கோவில்கள் எழுப்பும் வழக்கம் தென்னிந்தியாவில் தான் உள்ளது என்கிறார். சப்தமாதர்களின் கதை  மிகவும் சுவாரசியமானது.

"வேட்டை நாயும் தக்கோலாப் போரும்" கட்டுரையில் வரும் ஆதகூர் நடுகல் பற்றிய குறிப்பு வியப்பை அளிக்கிறது. ஒரு பேரரசன் வேட்டை நாய் ஒன்றை போற்றி வளர்த்தும் பின்னர் அவனது தளபதி அந்த நாயை கோவில் வளாகத்திலலேயே அடக்கம் செய்தது மட்டுமால்லாமல் தினசரி பூசை செய்ய ஏற்பாடு செய்ததும் பெரும் வியப்பு. குதிரைகளும் யானைகளும் தான் பொதுவாக கல்வெட்டுகளில் இருக்கும் ஆனால் இங்கு ஒரு நாய் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது."திராவிடச் சான்று: தாமஸ் டிரவுட்மன் நேர்காணல் " இந்த புத்தகத்தில் இந்த நேர்காணல் மிக முக்கியமானது மற்றொன்று அஸ்கோ பார்ப்பொலாவின் நேர்காணல்.இரண்டும் கண்டிப்பாக வாசிக்க வேண்டியவை.

இப்படி பல வரலாற்று நிகழ்வுகளை வாசிப்பதற்கு எளிமையாக எழுதியுள்ளார்  தியடோர் பாஸ்கரன் அவர்கள். கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

ரன்னிங் டைரி -25

04-11-2019 18:10
அலுவலகத்திலிருந்து வீடுவரை

வெகுநாட்களுக்குப் பிறகு இன்று "heart rate monitor" அணிந்து கொண்டு ஓடினேன். இந்த மாதிரி devices அணிந்து கொண்டு ஓடினால் நம்மை அறியாமல் நாம் அடிக்கடி அதை பார்ப்போம். நானும் அப்படிதான். ஓடிய சிறிது நேரத்தில் ஒரு வகையான uneasiness தொற்றிக்கொண்டது. மீண்டும் மீண்டும் heart rate monitor-ன் strap-ஐ சரிசெய்து கொண்டேன்.  இதயத் துடிப்பு சரியாக இருக்கிறதா என்ற யோசனையிலேயே ஐந்து கிலோமீட்டர் ஓடிவிட்டேன். இனிமேல் வாட்ச்சை பார்க்க கூடாது என்று முடிவு செய்து மீதி தூரத்தைப் வாட்ச்சை பார்க்காமலேயே ஓடி முடித்தேன். என்னுடைய வாட்ச் "Polar RC3 GPS". ஓட்டப் பந்தய வீரருக்கு மிகவும் தேவையான ஒன்று. அனைத்து விதமான statistics இதில் அறியலாம். ஆனால் இது எனக்கு தேவையா என்றால் தேவையில்லைதான். தெரிந்தவர் ஒருவர் நான் தினமும் ஓடுவதை பார்த்து எனக்கு இந்த வாட்ச்சைக் கொடுத்தார். இந்த ஓட்டம் முழுவதும் எண்ணம்  இந்த வாட்சில் தான் இருந்தது.

Monday, November 4, 2019

பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை - பெருமாள்முருகன்


“தன்மக்களை எந்தக்கணத்திலும் எதிரிகளாக்கி, துரோகிகளாக்கும் வல்லமை படைத்தது அரசாங்கம்”.
பெருமாள்முருகனின் பத்தாவது நாவல் பூனாச்சி. தலைப்பைப் போல இது ஆடுகளின் கதை. கிழவனுக்கு ஒரு ஆட்டுக்குட்டி "பனைமரம்" உயரமுள்ள ஒருவனால் கொடுப்போதோடு கதை தொடுங்குகிறது.கிழவனும் கிழவியும் அதற்கு "பூனாச்சி" என்று பெயர் சூட்டுகின்றனர்.  இந்த நாவல் பூனாச்சியின் பார்வையில் விரிகிறது.

கிழவி பூனாச்சியை மகளாக வளர்கிறாள்.பூனாச்சியும் அவர்களில் ஒருவளாக கருதுகிறாள். இக்கதையில் ஆடுகள்தான் அதிகம் பேசுகின்றன. கதை நடக்கும் இடம் அசுரலோகம்.பூனாச்சியின் பாசம் ,பயம் காதல் ,ஏக்கம் ,பிரிவு தாய்மை என்று அனைத்து உணர்ச்சிகளும் இக்கதையில் இடம்பெற்றுள்ளது. அவள் வளர வளர கிழவனும் கிழவியும் பஞ்சத்தில் அடிப்பட்டு உணவுக்கே திண்டாட்டம் வர ஆரம்பிக்கிறது. பூனாச்சி ஏழு குட்டிகள் ஈன்றாள்.ஆனால் ஒன்றைக் கூட அவளால் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு அதை விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை. ஏழு குட்டிகளின் பிறப்பு ஒரு பெரும் நிகழ்வாக கொண்டாடப்படுகிறது. 
வாயிருப்பது மூடிக்கொள்ள, கையிருப்பது கும்பிடுபோட, காலிருப்பது மண்டியிட, முதுகிருப்பது குனிய, உடலிருப்பது ஒடுங்க .
 ஏழை எளியவரைத்தான் அதிகாரிகள் அதிகம் துன்புறுத்துவார்கள் என்பதை மிக அழகாக குட்டிகள் பிறந்த பிறகு நடக்கும் நிகழிச்சிகளால் எடுத்துக்காட்டியுள்ளார். அதுவும் ஊடகங்களின் நடத்தையை இதைவிட யாரும் பகடி செய்ய முடியாது.ஆடுகள் தங்களுக்கென்று ஒரு வாழ்க்கை வாழ விரும்புகிறது  ஆனால் வாழ முடியவில்லை அதேதான் மனிதர்களும் விரும்புகிறார்கள் ஆனால் அவர்களும் தாங்கள் விருப்பம்போல் வாழ முடியவில்லை. செல்வம் கொண்டுவந்த பூனாச்சி வறட்சியின் காரணத்தால் என்ன ஆனாள் என்பது தான் முடிவு.
மொத்த நாவலுமே பகடி எனலாம். பலவிதமான கதாபாத்திரங்கள் பலரை நினைவு படுத்துகிறது. ஆடுகளுக்கு இணை தேடுவது ,கிழவன் கிழவியின் உரையாடல்கள் அதிகாரிகளின் உரையாடல்கள் என அனைத்தும் ஒரு விதமான பகடி . பெருமாள்முருகனின் அதே சுவாரசியமான எழுத்து வாசிப்பை எளிதாக்குகிறது. வாசிக்கலாம்.

ரன்னிங் டைரி -24

01-11-2019 08:17
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

மாதத்தின் முதல்நாள்  கண்டிப்பாக ஓட வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன். அதே போல் ஓடினேன். மழை மேகம் குளிர்ந்த காற்று ஓட்டத்தை ராம்மியமாக்கியது. மித வேகத்துடன் ஓடினேன். லோதல்/ரோதல் அல்வா ஞாபகத்தில் வந்தது. சாப்பிட்டு பல வருடங்கள் ஆயிற்று.நேற்று சாப்பிட்டேன். அமிர்தம்! ஒரு பிரத்யோக சுவை. ஊரில் இருந்து வந்திருக்கும் அம்மா அப்பா வாங்கி வந்திருந்தார்கள். நாவில் எச்சி ஊறியது! சிறு வயதில் பாட்டி ஒருவர் கூடையில் வீற்றுக் கொண்டு வருவார். கீழக்கரை லோதல்/ரோதல் மிகவும் பிரபலம். அபார சுவையாக இருக்கும்.என்னுடன் வேலைப் பார்பவர்களிடம் இது கீழக்கரையில் செய்தது என்று சொல்லிவிட்டேன் ஆனால் அம்மாவிடம் கேட்டப் போது அது பாம்பனில் தயாரித்தது என்றார். amazing!

 லோதல்/ரோதல் சுவையுடன் நினைப்பிலேயே ஓடி முடித்தேன்.

ரன்னிங் டைரி -23

31-10-2019 18:25
அலுவலகத்திலிருந்து வீடுவரை

எதுமே எண்ணாமல் ஓடிய ஒரு ஓட்டம். கவனம் முழுவதும் சுவாசத்தில்தான் இருந்தது. 

Friday, November 1, 2019

ரன்னிங் டைரி -22

31-10-2019 8:17
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

வரும் ஞாயிற்றுக் கிழமை 18 கிலோமீட்டர் பந்தயம் உள்ளது அதற்காக இன்று காலையும் சாயங்காலமும் ஓட வேண்டுமென்று முடிவெடுத்து இன்று காலையில் ஓடினேன். ஓட ஆரம்பித்தவுடன் "இஸ்ராயேலின் நாதனாய்" என்ற பாடல் ஒலித்தது. அற்புதமான பாடல். பாடலில் மெய்மறந்து ஓடினேன்.இதமான வெய்யில். திடீரென்று கூகிள் அனலிடிக்ஸ் ஞாபகத்தில் வந்தது. அது எண்ணத்தில் வருவதற்கு ஒரு காரணம் உண்டு. அந்த கஸ்டமருக்கு நான் கூகிள் அனலிடிக்ஸ் செட் செய்து கொடுத்தேன். எனக்கு கூகிள் அனலிடிக்ஸ் பற்றி ஒன்றும் தெரியாது இரண்டு இரவு உட்கார்ந்து இன்டர்நெட்டில் படித்தேன். அதற்கு அவர்கள் எங்களுக்கு தனியாக pay பண்ணவில்லை. இன்றும் அவர் கூகிள் அனலிடிக்ஸ் பற்றிக் கேட்பார் என்று என் மனதில் பட்டது. ஓடிக்கொண்டிருக்கும் போதே நான் அவரிடம் என்ன சொல்லவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். பெரிய நிறுவனங்கள்தான்  இப்படி maintenance என்ற பெயரில் அனைத்தையும் செய்ய சொல்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

Thursday, October 31, 2019

ரன்னிங் டைரி -21

30-10-2019 18:35
அலுவகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பிக்கும் சற்று முன் ஒரு போன் கால் வந்தது. எங்கள் கஸ்டமர் ஒருவர் தங்களது வெப்சைடில் சில மாற்றங்கள் செய்யவேண்டுமென்று என்னிடம் எவ்வளவு நேரம் எடுக்கும் என்று கேட்டார். நான் அவருக்கு maintenance என்றால் என்ன என்று ஒரு பெரும் உரையை நிகழ்த்திவிட்டு ஓட ஆரம்பித்தேன்.ஓடும்போதும் அந்த கஸ்டமரைப் பற்றியே யோசனை. இந்த ப்ராஜெக்ட் தொடக்கம் முதல் முடியும் வரை ஒரேயொரு டீமோடுதான் எங்களுக்கு தொடர்பு கடந்த வாரம் அந்த மொத்த டீமே மாறிற்று. இப்போது சம்பந்தமே இல்லாதவர்களோடு தொடர்பில் இருக்கவேண்டும் . ஒவ்வொருமுறையும்  அனைத்தையும் அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். எங்களின் நேரத்தைப் பற்றி அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை.நாளைக்கு என்ன செய்ய வேண்டுமென்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

Wednesday, October 30, 2019

ரன்னிங் டைரி -20

29-10-2019 18:16
அலுவலகத்திலிருந்து வீடுவரை

நான்கு நாட்களுக்குப் பிறகு மீண்டும் இன்று ஓடினேன். ஓட ஆரம்பித்த உடன் உடம்பில் எங்காவது வலிக்கிறதா என்று கவனமாக கண்காணித்தேன். வழக்கமாக வலிக்கும் இடங்களில்தான் கொஞ்சம் வலித்தது. எப்போதும் அப்படிதான் கொஞ்ச நாட்கள் ஓடவில்லை என்றால் சில இடங்களில் வலிக்கும்.மிக வேகமாக ஓடினேன். எதையும் யோசித்த ஞாபகமில்லை. மூன்றாவது சிக்னலில் வைத்து ஒரு பெண் சைக்கிளில் என்னை முந்திச் சென்றார். நானும் அதே வேகத்தில் ஓட வேண்டுமென்று முடிவெடுத்து சிக்னல் மாறியவுடன் வேகத்தைக் அதிகரித்தேன்.ஒரு நிமிடத்திற்குக்குள் அவரை முந்திச் சென்றேன். என்னைப் பார்த்த அவர் மேலும் வேகமாக சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தார். எங்களுக்குள் பேசாத ஒரு பந்தயம். இருவரும் ஒருவரை ஒருவர் முந்தி முன்னேறினோம்.  நூலகத்தை நெருக்கும்போது  அவர் மற்றொரு ரோட்டுக்குள் சென்றார். நான் அதே வேகத்தில் வீட்டை அடைந்தேன்.

Tuesday, October 29, 2019

ரன்னிங் டைரி -19

24-10-2019 08:15
வீட்டிலிருந்து அலுவலகம் வரை

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது மலையாள திரைப்படங்கள் தான். ஏனென்றால் தீபாவளியையொட்டி அனைத்து டிவி சேனல்களும் இலவசம். வீட்டிலிருந்து கிளம்பும் முன் ஏதோ மலையாள படம் ஓடிக்கொண்டிருந்தது அதன் தொடர்ச்சிதான் ஓடும்போது வந்த எண்ணம். கல்லூரி படிக்கும்போதுதான் முதன்முதலில் மலையாள படங்கள் பார்க்க தொடங்கியது. அதன் பிறகு நான் அதிகம் பார்த்தது மலையாள படங்கள்தான். 2015 முதல் 2017 வரை மலையாள படங்கள் பார்க்காத நாட்களே இல்லையெனலாம். தேடித் தேடி பார்த்தேன். என்னை முதலில் வசீகரித்தது கதை நடக்கும் இடம்தான். எந்த ஒரு அலங்காரமும் இல்லாத வீடுகளும் கிராமங்களும் என்னை மலையாள படங்களை ரசிக்க வைத்தன. சண்டேஷம் படத்தின் காமெடியைத் எண்ணிக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

Friday, October 25, 2019

ரன்னிங் டைரி -18

24-10-2019 08:20
வீட்டிலிருந்து அலுவலகம் வரை

ஓட தொடங்கும் ஒருசில நிமிடத்திற்கு முன் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த Raspberry Pi ப்ராஜெக்ட் பற்றி என் பாஸ் என்னிடம் சில தகவல்களைக்  கேட்டார். அத்தோடு எனக்கு ஓட மனமில்லாமல் போனது. இருந்தாலும் ஒடித்தான் ஆகவேண்டும்.  மொபைலை கையில் வைத்துக் கொண்டே ஓடினேன். நான் எப்போதும் அப்படி ஓடியது கிடையாது. அதுவே ஒரு அசுகை. இரண்டு கிலோமீட்டர் ஓடிய பிறகு அருகிலிருந்த பேருந்து நிலயத்தில் பேருந்து பிடித்து அலுவலகம் சென்றேன். 

ரன்னிங் டைரி -17

22-10-2019 18:20
அலுவதிலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது குர்து மக்கள்தான். எல்லா பக்கங்களிலும் தாக்குதல். உலகத் தலைவர்கள் பெரும்பாலும் மக்களின் விருப்பங்களைக் கேட்பதில்லை.அப்படியே ராஜன்குறை மற்றும் யமுனா ராஜேந்திரனின் முகநூல் சண்டை ஞாபகத்தில் வந்தது. தேவையில்லாத ஒன்று. "ராஜராஜ சோழன் நான் " பாடல் ஒலிக்க ஆரம்பித்தபோது கவனம் அதில் சென்றது அப்படியே "Alex in Wonderland" ஜேசுதாஸ் பற்றிய யூடுப் வீடியோ ஞாபகத்தில் வந்தது. அலெஸ் ஒரு நல்ல மேடை நகைச்சுவை பேச்சாளர்.  நான் சிங்கப்பூர் வந்த பிறகுதான் இந்த மாதிரி  ஸ்டண்ட் அப் காமெடி பார்க்க ஆரம்பித்தேன். Kevin Hart, Russel Peters ,Joe Wong , Eddie Murphy மற்றும் பலரின் வீடியோவை பார்க்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்திற்கு மேல் ஒரு கூட்டத்தைக் சிரிக்க வைப்பது எளிதல்ல. இவர்கள் அதை அழகாக செய்கிறார்கள். Alex in Wonderland முழுவதும் பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே வீட்டைச் சென்றடைந்தேன்.

Wednesday, October 23, 2019

கையிலிருக்கும் பூமி - தியடோர் பாஸ்கரன்


எனக்கு இந்த புத்தகம் பர்வீன் சுல்தானா அவர்களின் youtube நூல் ஆய்வு உரையின் மூலம் தான் அறிமுகம். அந்த பேச்சைக் கேட்டவுடன் கண்டிப்பாக வாசிக்க வேண்டுமென்று முடிவு செய்தேன். ஆனால் இவ்வளவு விரைவில் இந்த புத்தகம் கிடைக்குமென்று நான் நினைக்கவே இல்லை. பூகிஸ் (Bugis) தேசிய நூலத்தில் கிடைத்தது. எடுத்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன்.

தியடோர் பாஸ்கரன் அவர்களின் இயற்கை சார்ந்த கட்டுரைத் தொகுப்பு இந்த புத்தகம். எண்ணிலடங்கா தகவல்கள். நம் நாட்டில் இவ்வளவு இயற்கை வளங்கள் உள்ளதா ? என்று கேள்வி கேட்கும் அளவுக்கு இயற்கையை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் தியடோர் பாஸ்கரன். புத்தகம் பல பிரிவுகளாக உள்ளது ஒரு பெரும் வசதி. ஏனென்றால் வாசகர் எந்த பகுதியிலும் எந்த கட்டுரையையும் வாசிக்க தொடங்கலாம். நான் நேர்கோடாக படிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்து முடித்தேன்.

ஏறு தழுவுதல் என்ற கட்டுரையில் " இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வளர்ந்த பாரம்பரியம்.நகரங்களில் குளுகுளு அறைக்குள் அமர்ந்து கணினியைத் தட்டிக் கொண்டிருக்கும் நாம், கால்நடைகளை எவ்வாறு பேண வேண்டும் என்று குடியானவர்களுக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை" என்கிறார். எவ்வளவு உண்மை.தெருநாய்களும் வெறிநாய்களும் கட்டுரையில் காந்தி எவ்வாறு வெறிநாய்களை சுட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்தார் என்பதை படிக்கும் பொது ஆச்சிரியமாக இருக்கிறது. பங்களிப்பாளர்கள் பகுதியில் பல தெரியாத ஆளுமைகளைப் பற்றி மிகவும் தெளிவாக அவர்களின் நிறை குறை இரண்டையும் எழுதியுள்ளார். நான் ஸ்டீவ் எர்வினின் ரசிகன்.எங்கள் வீட்டில் அனைவரும் அவரது "crocodile hunter" நிகழிச்சியின் ரசிகர்கள்.அவரைப் பற்றியும் தியடோர் பாஸ்கரன் எழுதியுள்ளார்.இந்த பகுதியில் குமரப்பா , மா.கிருஷ்ணன்,ஜிம் கார்பெட்,A.O ஹ்யூம்,கே.எம் மேத்யூ, ராமுலஸ் விட்டக்கேர்,உல்லாஸ் கரந்த் ,மசனொபு புகோக்கோ ஆகியோரைப் பற்றியும் கட்டுரைகள் உள்ளன. இந்த அனைத்து கட்டுரைகளும் வாசகனை இந்த ஆளுமைகளைத்  தேடிப் படிக்க வேண்டுமென்ற ஆர்வத்தைக் ஏற்படுத்துகிறது.

தமிழில் இந்த மாதிரி புத்தகங்கள் அதிகம் வரவேண்டும். அறிவியல் மற்றும் வனவிலங்குகளின் பெயர்கள் மீண்டும் தமிழில் பொது வெளியில் மக்களால் பேசப்பட வேண்டும். தியடோர் பாஸ்கரன் அய்யா கூறுவது போல சங்ககாலம் தொட்டே தமிழில் இயற்கை சார்ந்த வாழ்வுமுறையும் மொழியும் இருந்து வருகிறது ஆனால் நாம்தான் இந்த இரண்டையும் விட்டு விலகி வந்துகொண்டே இருக்கிறோம்.  இதற்கு ஊடகங்களில் வரும் விலங்குகள் பெயர்களே சாட்சி.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

இந்த தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில புத்தகங்கள் கீழே உள்ள லிங்கில் கிடைக்கும் :

Noah's Ark Method 
The Deer And The Tiger A Study Of Wildlife In India - George Schaller 
Botanical Survey of India
An Ode to an Engineer
The Elephant in Tamil Land - Varadharaja Aiyar
The Bookf of Indian Birds - Salim Ali
Flora Of Madras Presidency - Gamble
The Madura Country : A Manual - Nelson
Stray Feathers - Hume
The Rifle and Hound in Ceylon - Samuel Baker
Thirteen years Among the wild beasts of India - Sanderson
Walden-Henry David Thoreau
சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்  - A L  சாமி 
தமிழ்  கலைக்களஞ்சியம் 

மற்ற புத்தகங்கள் :

மூதாதையரைத் தேடி  - சு.கி. ஜெயகரன்
யானைகள் :அழியும் பேருயிர்கள்  - ச.முகமது அலி & க.யோகானந்த்
தமிழ் நாட்டுப் பறவைகள் - க.ரத்தினம்
நம் நாட்டு பாம்புகள்  - ராஜேந்திரன்
பாம்பு என்றால் ... - முகமது அலி
கடல்வாழ் பாலூட்டிகள் - Whales and Dolphins Conservation Society
நீலகிரி ஆர்கிட்கள் - ஜோசப்

The Song of the Dodo - David Quammen
A Concise of Field Guide to Indian Insects & Arachnids - Meenatchi
On A Trial with Ants. A Handbook of Ants Of Peninsular India - Ajay Narendra & Sunil Kumar
Wetland Birds of Tamil Nadu - Robert & Shailaja
The Story of Asia's Lions - Divyabhanu
Origin of Species - Charles Darvwin
The Beak of the Finch -  Jonathan Weiner
SPIDERS: An Introduction
Climb every mountain- Dorothy Wilson
Pain:The Gift Nobody Wants-Paul Brand
Toda Grammar and Text - Emeneau
Animal liberation - Peter Singer
Large Dams in India : Environmental Social & Economic Impacts -Shekar Singh & Pranab Banerji
Maneater of Yelagiri - Anderson
Carpet Sahib: A Life of Jim Corbett
Forster and Further: The Tradition of Anglo-Indian Fiction - Sujith Mukerjee
Lord of the Flies  - William Holding
The Great Arc - John Keay
The Exotic Flora of Kodaikanal Hills- K.M Mathew
Materials for a Flora of the Tamilnadu Carnatic-K.M Mathew
Illustrations on the Flora of Tamilnadu Carnatic-K.M Mathew
The Flora of Tamilnadu Carnatic-K.M Mathew

புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திரைப்படங்கள் :

Final Solution
In the Name of the Father
An Inconvenient Truth
The Artist
Rabbit-Proof Fence

Tuesday, October 22, 2019

ரன்னிங் டைரி -16

21-10-2019 18:15
அலுவதிலிருந்து வீடுவரை

மெதுவாக ஓடவேண்டுமென்று முடிவெடுத்து மிகவும் மெதுவாக ஓட ஆரம்பித்தேன். முதல் சிக்கினலில் நின்றேன் அதன்பின் என்னை அறியாமலேயே எனது வழக்கமான வேகத்தில் ஓட ஆரம்பித்தேன். யூனுஸ் பாலத்தைக் கடக்கும்போது இன்று வாசித்த கட்டுரை ஒன்று நினைவில் வந்தது. "Science-Backed Strategies to PR Your Next Marathon" இதில் குறிப்பிட்டுள்ள பல விசயங்கள் நான் செய்ததே கிடையாது. முயற்சி செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

திடீரென்று "global warming " என்ற வார்த்தை எண்ணத்தில் வந்தது. மகளுக்கு global warming பற்றி இரண்டு நிமிடம் பேசுவதற்கு material தயார் செய்ய வேண்டும் அதனால்தான் அதைப் பற்றி எண்ணம் இப்போது வந்தது.அப்படியே "foldscope" பற்றி எண்ணம் தோன்றியது. மகளுக்கு இந்த வருட பிறந்தநாளுக்கு நாங்கள்  இதைத் தான் பரிசளித்தோம் . இன்னும் முழுவதுமாக fit பின்னவில்லை. இது அபாரமான கண்டுபிடிப்பு. ஒரு telescope வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டே வீட்டைச் சென்றடைந்தேன்.

Sunday, October 20, 2019

ரன்னிங் டைரி -15

19-10-2019 18:15
கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட தொடங்கியவுடன் எதிரே பச்சை வெள்ளை டி சேர்ட் அணிந்த சிறுவன் ஒருவன் அவனது பெற்றோர்களுடன் வந்து கொண்டிருந்ததை  கவனித்தேன் .டி சேர்ட்டில் அயர்லாந்து என்று எழுதியிருந்தது. அப்போதுதான் இன்றைய உலக கோப்பை ரக்பி காலிறுதி போட்டி  ஞாபத்தில் வந்தது. நியூசிலாந்து அயர்லாந்து மோதுகிறது. அப்படியே எனது எண்ணங்கள் நியூசிலாந்து அணியின் பக்கம் சென்றது. எப்போது அந்த அணியின் விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தேன் என்ற ஞாபகம் இல்லை. ஆனால் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேல் அவர்கள் விளையாடிய அனைத்து போட்டிகளையும் பார்த்திருக்கின்றேன். ஒரு விளையாட்டுக் குழு விளையாட்டிலும் சரி தங்களின் நடத்தையிலும் சரி இவ்வளவு ரசிக்கும் படி இருந்ததாக எனக்கு தெரியவில்லை . ஸ்டீவ் வாக்கின் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அனைத்தையும் வென்றார்கள் ஆனால் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களுக்கு அவர்களைப் பிடிக்காது. அதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்தையும் வென்றார்கள் ஆனால் அப்போது நான் பிறக்கவே இல்லை.ஆல் பிளக்ஸ் (ALL BLACKS ) என்று அழைக்கப்படும் நியூசிலாந்து ரக்பி அணி  ஒரு விளையாட்டு குழு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

எனக்கு  இன்று  அவர்கள் தோல்வி அடைவார்கள் என்ற எண்ணம் வந்து கொண்டே இருந்தது. கடவுளிடம் வேண்டிக்கொண்டேன் அவர்கள் வெற்றி அடைய வேண்டுமென்று. சட்டென்று எனது கவனம் திசைமாறி எதிரே ஓடிக்கொண்டிருந்த இருவர் மீது சென்றது. இருவரும்  "200 Runners ,2000 Kilometers , 200 Years " என்று அச்சிட்ட டி சேர்ட் அணிந்திருந்தார்கள். சற்றே வயதானவர்கள் போன்ற தோற்றம்.  ஆனால் அவர்களின் ஓட்டம் அவர்கள் அனுபவசாலிகள் என்று காட்டியது. அவர்களைத் தொடர்ந்து ஒரு கிலோமீட்டருக்கும் மேல் சென்றேன்.அவர்களைத் கடந்து சென்ற போது எதிரே ஒரு தமிழ் குடும்பம் வந்தது. "சீமான் சொன்னது தப்புதான்" என்று ஒருவர் சொன்னார். மற்றொருவர் "வர வர அரசியலே பேசாதபடி பண்ணிருவாய்ங்க போல " என்றார்.இருவரும் பயங்கர சத்தமாக பேசிக்கொண்டு சென்றனர். பொது இடத்தில் சத்தமாக  பேசுவதில் தமிழருக்கு இணை வேறு யாரும் கிடையாது.

இரண்டு சைக்கிள்கள்   சிவப்பு லைட் போட்டுக்கொண்டு என்னை கடந்து சென்றது பின்னால் ஒருவர் மிக விரைவாக ஓடி வந்து கொண்டிருந்தார். எதோ ஓட்டப் பந்தயம்போல. தொடர்ந்து வீரர்கள் ஓடிக்கொண்டே வந்தனர்.அவர்களை பார்ப்பது அழகு.நான் பந்தயம் முடியும் இடத்தை அடைந்தபோது தான் தெரிந்தது அது ஒரு biathlon - நீண்ட தூர ஓட்டமும் நீச்சலும். பல வருடங்களாக என்னுடை குறிக்கோள் ironman போட்டியில் பங்கேற்பதுதான் ஆனால் அது அவ்வளவு எளிதானது அல்ல என்பது எனக்கு மிக விரைவில் தெரிந்ததும் அந்த எண்ணத்தையே விட்டுவிட்டேன் . அதற்கு முக்கிய காரணம் எனக்கு நீச்சல் அப்போது தெரியாது. கடந்த வருடம்தான் ஒழுங்காக நீச்சல் அடிக்க கற்றுக்கொண்டேன் .அதையே யோசித்துக்கொண்டு அந்த வீரர்களை பின் தொடர்ந்து ஓட்டத்தை முடித்தேன்.

ரன்னிங் டைரி -14

18-10-2019 08:10
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்ததிலிருந்து புது ப்ராஜெக்ட் பற்றிய நினைப்பே வந்தது. ரெம்ப சின்ன ப்ராஜெக்ட்தான் ஆனால் எங்களை புரட்டிப் போட்டுக்கொண்டிருக்கிறது. எனக்கு basic எலக்ட்ரானிக்சே மறந்து விட்டது. இது raspberry pi கொண்டு செய்யப்படும் ப்ராஜெக்ட். எங்கள் அலுவலகத்தில் யாருக்கும் raspberry pi அறிமுகமில்லை. சுவாரசியமாக இருந்தாலும் அதைப் புரிந்து கொள்வதற்கு சில நாட்கள் தேவை. ஆனால் அந்த நாட்கள்தான்  எங்களிடம் இல்லை. குறிப்பிட்ட நாட்களுக்குள் ப்ராஜெக்டை முடித்துக்கொடுக்க வேண்டும். இதற்கு முன் Wiegand என்றால் என்னவென்றே தெரியாது. இப்போது சற்று தெரியும் ஆனால் அதை வைத்து இந்த ப்ராஜெக்டை முடிக்க முடியாது.என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு ஓடி முடித்தேன்.

Saturday, October 19, 2019

ரன்னிங் டைரி -13

23-10-2019 08:16
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

இன்று முதல்முறையாக ரூடி ப்ராஜெக்ட் (Rudy Project) பிராண்டின் லேட்டஸ்ட் கண்ணாடியைப் அணிந்து கொண்டு ஓடினேன். எனது கவனம் முழுவதும் கண்ணாடியில் தான் இருந்தது. என்னிடம் இந்த புதிய கண்ணாடியாத் தவிர மூன்று ரூடி ப்ராஜெக்ட் கண்ணாடிகள்என்னிடம் உள்ளன. அவற்றை அணிந்த போது இல்லத ஒரு குளிர்ச்சி இந்த கண்ணாடியில் உணர்ந்தேன். காற்று உள்ளே வருவதற்கு frame-ல் ஓட்டைகள் உள்ளன .நான் வெய்யிலில் ஓடினேன். வெய்யிலேயே உணரவில்லை . முதல் கண்ணடி கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு முன்னால் கிடைத்தது. சிவப்பு கண்ணாடி. அதை அணிவதற்கு எனக்கு வெட்கம்.இரண்டு வருடங்களுக்கு மேல்  தலையில் வைத்துக் கொண்டுதான் ஓடினேன். அதை அணிந்து ஓடுவது ஒரு அழகு. வேர்வை நெற்றியைத் தாண்டி வரவே வராது.எனக்கு மிகவும் பிடித்த கண்ணாடி அதுதான்.இந்த புதிய கண்ணாடியில் நான் பார்க்க எப்படி இருப்பேன் என்று நினைத்துக் கொண்டே ஓடி முடித்தேன்.

Tuesday, October 15, 2019

ரன்னிங் டைரி -12

14-10-2019 18:25
அலுவதிலிருந்து வீடுவரை

இன்றும் ஓட ஆரம்பித்தவுடன் கிப்சோகேவின் முகம்தான் மனதில் வந்தது. இனிமேல் அவரை நினைக்காமல் ஓட முடியாதென்று நினைக்கிறேன். சிக்னலில் ஒருவர் கையில் சிகப்பு கயிறு கட்டிருந்தார் அதைப் பார்த்தவுடன் சமீபத்தில் பார்த்த டாக்குமெண்டரிதான் ஞாபகத்தில் வந்தது. என்ன கொடுமை.சிறுவயதிலிருந்து நமக்கு சாதியைப் பற்றி எதுவுமே சொல்லிக்கொடுக்கவில்லை, அப்படியொன்றே இல்லை என்றளவுக்குதான் எனக்கெல்லாம் சொல்லிக்கொடுக்கப்பட்டது. இனி யார் சிகப்பு கயிறு கட்டிருந்தாலும் இப்படித்தான் தோன்றும்.

திடீரென்று பாடலில் பக்கம் கவனம் சென்றது 'காதல் கசக்குதய்யா' ஓடிக்கொண்டிருந்தது. இளையராஜா இளைஞர்களுக்கு அட்வைஸ் சொல்லிக்கொண்டிருந்தார். அப்படியே "Wonder Woman " திரைப்படம் ஞாபகத்தில் வந்தது நேற்றுதான் நான் அந்த படத்தைப் பார்த்தேன். என் மகள் படத்தின் முதல் இருபது நிமிடத்திலேயே 'எனக்கு புடிக்கவில்லை" என்றாள். எனக்கும் சுத்தமாக படம் பிடிக்கவில்லை. எனக்கு சூப்பர் ஹீரோ படங்களே பிடிப்பதில்லை. ஆனால் காமிக் புத்தங்கள் பிடிக்கும். ஏன் நமது உணவு வகைகளைப் பற்றி ஒரு காமிக் எழுதக்கூடாது என்று எண்ணிக்கொண்டே இன்று எப்படியும் அசைவம் சாப்பிட வேண்டுமென்று நினைத்து வீட்டை அடைந்தேன். வீட்டினுள் சென்றவுடன் பொறித்த கோழிக்கறி வாடை (Old Chang Kee  Chicken Wings ).. நன்றி கடவுளே என்று சொல்லிக்கொண்டேன்.

Monday, October 14, 2019

ரன்னிங் டைரி -11

12-10-2019  19:35
கிழக்கு கடற்கரை பூங்கா

கடந்த சில நாட்களாக ஓடவில்லை. வீட்டில் மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும் அலுவலக வேலையும் சேர்ந்து ஓட முடியாமல் செய்தது. ஆனால் இன்று எலியட் கிப்சோகேவின் பெரும் சாதனை என்னை அவருக்கு மரியாதை செய்யும் விதத்தில் ஓட வைத்தது. நீண்ட தூர ஓட்ட வீரர்களுக்குத் தெரியும் இது எவ்வளவு பெரிய சாதனை என்று. 

ஓட ஆரம்பித்தவுடன் கிப்சோகேவின் சிரித்த முகம்தான் மனதில் வந்தது. அழகு!  கடற்கரையை அடைந்தவுடன் மனது நிலவை நோக்கி சென்றது. கிட்டத்தட்ட முழுநிலவு இன்று. கடலில் நிலாவைப் பார்ப்பது ஒருவிதமான பரவசம். கடலை கையை உயரே உயர்த்தி வணங்குவது என் இயல்பு. இன்றும் அப்படியே செய்து விட்ட ஓட்டத்தைத் தொடர்ந்தேன். சனிக்கிழமை இரவில் ஓடுவது அதுவும் கிழக்கு  கடற்கரையில் ஓடுவது கடினமானது. மக்கள் கூட்டம். இங்கும் அங்குமாக குழந்தைகள் ஓடிக்கொண்டே இருப்பார்கள் இன்றும் அப்படித்தான்.ஒரே வேகத்தில் ஓட முடியவில்லை.

வாக்மேனில் "உயிரின் நாதனே" மலையாள பாடல் ஓட ஆரம்பித்தது. எனக்கு மிகவும் புடித்த பாடல். என்னை அறியாமல் வேகத்தை கூட்டினேன். பங்களாதேசி இளைஞர்கள் சிலர் ஹிந்தி பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தனர். சுற்றிருந்த அனைவரும் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தனர், சற்று தூரத்தில் இரண்டு மூன்று இந்திய குடும்பங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். கோழிக்கறியின் மணம் மூக்கையைத் துளைத்தது. ஒரு ஆணும் பெண்ணும் மாமல்லபுர சந்திப்பைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். சீனா அரசியலை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு தெரியும் அவர்கள் இந்த மாதிரி சந்திப்புக்களை எவ்வாறு பயன்படுத்திக்கொள்வார்கள் என்று.சீனாவை பற்றி யோசித்துக் கொண்டே ஓடி முடித்தேன்.

Monday, October 7, 2019

ஆப்பிளுக்கு முன் -சி. சரவணகார்த்திகேயன்


படித்து முடித்ததும் தோன்றியது எவ்வளவு  பொருத்தமான தலைப்பு என்றுதான். ஏவாள் ஆப்பிளை கடிப்பதற்கு முன் நிர்வாணம் ஒரு பொருட்டே இல்லை. அதைத்தான் காந்திஜி தன் சோதனையின் மூலம் அடைந்தார். அவரின் அந்த கடின சோதனையின் ஒரு பகுதிதான் இந்த கதை.
உறவுக்கு தான் பரஸ்பர சம்மதம் தேவை துறவுக்கு அல்ல
இந்தியாவில் காந்திஜி  அளவுக்கு  எந்த தலைவரும் விமரிசனங்களை எதிர்கொண்டவர்கள் இல்லை. இந்த பிரம்மச்சரிய முயற்சி அதன் உச்சம். அவரின் நண்பர்கள் அனைவரும் அந்த முயற்சியை கைவிட சொன்னார்கள். ஆனால் அவர் இறுதிவரை கைவிடவில்லை. "My life is my message " என்று சொல்வதற்கு பெரும் தைரியம் வேண்டும், காந்திஜி அதை செய்து காட்டினார். இந்த நாவல் காந்தி மற்றும் மநுவின் உறவைப் பற்றியது.

"என் பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் நோக்கம் ஆண், பெண் உடல்களுக்கிடையேயான வேறுபாட்டைக் களைவதே. இது எதிர்பாலின உடல் என்ற எண்ணமெழாத நிலைக்குப் போவது. மனதில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே பிரம்மச்சரியம் என்று கொள்ள முடியாது. ஒரு பெண்ணுடன் நிர்வாணமாகப் படுத்திருக்கும் உணர்வே இல்லாமல் போகும்போதுதான் பிரம்மச்சரியம் பூர்த்தியடையும் 

மநு கஸ்தூரிபாவிற்கு உதவியாக இருப்பதற்கு அங்கு வருகிறாள். வயதிற்கு மீறிய பக்குவம் அநுவிற்கு . அவள் அங்கு வந்த சில மாதங்களில் கஸ்தூரிபா இறந்து விடுகிறார். அங்கு வந்த முதலே காந்திஜி மநுவை  மெல்ல மெல்ல தன்வசப் படித்துக்கொள்கிறார்.மநுவிற்கு முன் பத்திற்கும் மேற்பட்ட பெண்களுடன் இந்த சோதனையை(நிர்வாணமாக படுப்பது) செய்திருக்கிறார்.ஆனால் மநு அளவிற்கு யாரும் தங்களை ஒப்புக்கொடுக்கவில்லை. அதனால் மநுவை பெரிதும் அன்பு செய்கிறார் .தான் அவருக்கு அன்னை என்கிறார். அவளும் காந்திஜி தான் தனக்கு எல்லாம் என்று வாழ்கிறார்.

அவர்களது உறவு மற்ற பெண்களிடம் பொறாமையை ஏற்படுத்துகிறது. அதிலும் சுசீலா வெளிப்படையாகவே பொறாமை கொள்கிறாள். மநு வருவதற்கு முன் அவள்தான் காந்திக்கு எல்லாம். அவர்களது அந்த உறவு படிப்படியாக ஆசிரமத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. பல்வேறு வழிகளில் அவர்களது இந்த பரிசோதனைகளை நிறுத்தப் பார்கிறார்கள்.அதில் தக்கர் பாபா முக்கிய பங்கு வகிக்கிறார். இந்த புத்தகத்தின் சாராம்சமே தக்கர் பாபாவிற்கும் காந்திஜிக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள்தான்.நாம் கேட்க நினைக்கும் அனைத்து கேள்விகளையும் பாபா காந்தியிடம் கேட்கிறார் காந்தியும் எல்லாவற்றிற்கும் பொறுமையாக பதிலளிக்கிறார். சில பதில்கள் எனக்கு புரியவில்லை. காந்தி தான் எடுத்த விசயத்தில் பின்வாங்குபவர் அல்ல.  பாபா காந்தியின் மனதை மாற்ற முடியவில்லை. அதனால் அவர் மநுவிடம் எடுத்துச் சொல்லி அவரை சம்மதிக்க வைக்கிறார். இறுதியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

உலக தலைவர்களில் காந்தியைப் போல வெளிப்படையாக இருந்தவர்கள் எவரும் இல்லை.இறுதிவரை தான் எடுத்த முடிவில் பின்வாங்காதவர். காந்தியின்  இந்த சோதனைகளை பற்றி எழுத தைரியம் வேண்டும். எடுத்த விசயத்தை எந்த ஒரு சமரசம் இல்லாமல் எழுதி இருக்கிறார் சரவணகார்த்திகேயன்.  காந்தியின் இன்னொரு பரிமாணம் இது.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.


Wednesday, October 2, 2019

ரன்னிங் டைரி -10

01-10-2019 (18:25)
அலுவதிலிருந்து நூலகம் வரை

மழை வருமா  என்ற கேள்வியுடன் வானத்தைப் பார்த்துக்கொண்டே ஓட ஆரம்பித்தேன். ட்ராபிக் சிக்னல் வந்தவுடன்தான் எந்த பாட்டு ஓடிக்கொண்டிருக்கிறது என்று கவனித்தேன். "கேளடி கண்மணி" ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று காபி ஞாபகம் வந்தது. இன்று "சர்வதேச காபி நாள்". காபி என்றவுடன் எனக்கு "தையல்நாயகி " என்ற பெயர்தான் முதலில் ஞாபகத்தில் வரும். தையல்நாயகி ஒரு உணவகம். கோயம்புத்தூர் சூலூரில் உள்ளது. அங்கு காபி பிரபலம். 2003 முதல் 2005 வரை சூலூரில் வீடெடுத்து நாங்கள் தங்கி இருந்தோம். வீட்டிற்கு பக்கத்தில்தான் தையல்நாயகி உள்ளது. அங்கு காபி குடிப்பதென்பது எங்களுக்கு ஒரு ஆடம்பர நிகழ்வு. பலதடவை எங்கள் வீட்டிற்குமேல் தங்கி இருந்த எங்கள் professors தான் வாங்கிக் கொடுப்பார்கள்.

அப்படியே அங்கிருந்து சிங்கப்பூர் காபி ஞாபகம் வந்தது. மாமா வீட்டில் அத்தை பில்டர் காபி போடுவார்கள். அது ஒரு தனி ருசி. அலுவலகத்தில் 3 in 1 காபிதான். முதலில் Nescafe அடுத்து Owl brand 2 in 1 . Nescafe-யை விட Owl brand பலமடங்கு better .சிங்கப்பூரில் பாலுக்கு பதிலாக condensed milk தான் .எனக்கு முதலில் பிடிக்கவில்லை . சிங்கப்பூர் kopitiam களில் ஓரளவு காபி நான்றாக இருக்கும். நாங்கள் தம்பினீஸில் இருக்கும்போது Toastbox காபி அருமையாக இருந்தது இன்று அந்த சுவை இல்லை. எனக்கு favourite என்றால் தமிபின்ஸ் wet மார்க்கெட்டில் இருக்கும் ஒரு காபி கடையும் haigh road food courtல் இருக்கும் "Coffee Boy" கடையின் காபிதான். "Coffee Boy" கடை ஐயா காபி போடுவதே ஒரு அழகு.அவரையே நினைத்துக் கொண்டு நூலகத்தை அடைந்தேன். அங்கு சென்று புத்தகத்தை return பண்ணிக்கொண்டிருக்கும் போது அருகிலிருந்த கஃபேவிலிருந்து காபி மனம் வந்துகொண்டிருந்தது. புத்தகத்தை return பண்ணிவிட்டு ஒரு காபி குடித்துவிட்டு பேருந்தில் வீடு திரும்பினேன் .

Tuesday, October 1, 2019

The Empire And The Five Kings - Bernard Henri Levy


We are in a situation when our leader of the free world, Donald Trump, plays muscles, but the real strength is on the side, alas alas alas alas, of the five kings: Chinese, Arabs, Iranians, Ottomans (Turks) and Russians.
இந்த புத்தகம் எப்படி அமெரிக்கா தனது அதிகாரத்தை மெதுவாக இழந்து வருகிறது என்றும் இந்த சூழ்நிலையை மற்ற நாடுகள் அதிலும் குறிப்பாக சீனா, ரஷ்யா,ஈரான் ,துருக்கி மற்றும் அரபு நாடுகள் உபயோகப் படுத்திக்கொள்கிறார்கள் என்பதைப்  பற்றி விவரிக்கிறது. இப்புத்தகம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி அமெரிக்கா எவ்வாறு வல்லரசானது என்றும் இரண்டாவது அது எப்படி பலவீனமாகி வருகிறதென்றும் பெர்னார்ட் விவரிக்கிறார்.
“A time is coming that is no longer the time that emerged from the death of communism, from the triumph of liberal values, and from the pronounced “end of history,” an ending to which I never subscribed but that was beginning to take on a truly sinister face.” 
எனக்கு இந்த எழுத்தாளரை இதற்கு முன் தெரியாது. யார் இவர்? கூகிளில் தேடியபோது இவர் ஒரு பன்முகம் கொண்டவர் என்பது தெரியவந்தது. Philosopher, டாக்குமெண்டரி இயக்குநர் ,activist மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர். இந்த புத்தகம் குர்து(kurd)  இன படுகொலையைத் தொடர்ந்து எழுதப்பட்டது. இவர் அந்த போராட்டத்தில் நேரடியாக பங்குபெற்றவர்.  பல அரபு நாடுகள் இவரைத் தடை செய்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பா கண்டமே புத்துயிர் பேர போராடிய சூழ்நிலையில் எந்த நாடு அதைக் காப்பாற்ற போகிறது என்பது பெரும் குழப்பமாக இருந்தது. பிரான்ஸ் ,ரஷ்யா மற்றும் இங்கிலாந்து தலைமை ஏற்க முடியவில்லை அதற்கு பெர்னார்ட் கூறும் காரணம் அவற்றின் வரலாறு. இந்த தலைமைப் பொறுப்பு அமெரிக்காவிடம் சென்றது. அதை அவர்கள் தேடிச் செல்லவில்லை("involuntary Romans "). ஆனால் பொறுப்பு வந்தவுடன் அதை இறுக்கிப் பிடித்து தங்களை முன்னிறுத்தி உலகையே ஆள ஆரம்பித்தனர் (Pax  Americana) . அமெரிக்கர்கள்  இந்த பொறுப்பு தங்களின் உரிமை (American Exceptionalism) என்று எண்ணினர் அது மட்டுமல்லாமல் அதற்கு அவர்கள் வரலாற்றைக்  காரணமாக எடுத்துக்கொண்டனர். அமெரிக்கா பல ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை தன் காலனி மாதிரி வைத்திருந்தது என்றால் மிகையாகாது.இருந்தாலும் தங்களின் "openness" மற்றும் "transparency" மூலம் ஒரு ஜனநாயக ஆட்சியைக் கொடுக்க முடியம் என்ற நம்பிக்கையை மற்ற நாடுகளிடம் விதைத்தனர். அடங்காத நாடுகளை இராணுவம் கொண்டு அடக்கினர். இப்படித்தான் அமெரிக்கா வல்லரசானது என்கிறார் பெர்னார்ட். சிரியாவில் ஒபாமா தலையீடாதது ,குர்திஸ்தானை டிரம்ப் கைவிட்டது இப்படி சில விஷயங்களால் அமெரிக்கா அதிகாரம் சரிந்து வருகிறது என்கிறார் பெர்னார்ட் . என்னை கேட்டல் ட்ரம்பின் தேர்தல் வெற்றியே சர்வதேச அளவில் அமெரிக்காவின் தோல்வி.

குர்து இன மக்களின் போராட்டத்தை எவ்வாறு அமெரிக்கா மற்றும் மேற்கூறிய மற்ற ஐந்து நாடுகள் எதிர்கொண்டனர் என்பதிலிருந்து அவர்களின் நோக்கம் என்ன என்பதை விவரிக்கிறார்.அல் கொய்தவிற்கு அனைத்து உதவிகளையும் சவுதி அரேபியா செய்தது என்று அவர்களே ஒத்துக்கொண்ட பின்னரும் அவர்களுடன் அமெரிக்கா நல்லுறவை நீடித்தது.துருக்கிக்கும் ,ரஷ்யாவிற்கும்  ஐரோப்பா நாடுகளுக்கும் பிரச்சன்னைதான். ஆனால் அமெரிக்க எதிர்ப்பு என்ற பேரில் துருக்கியும் ரஷ்யாவும் ஒன்று சேர்ந்தனர். ஈரான் புரட்சிக்கு பிறகு அமெரிக்காவை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. சீனா வேகமாக வளர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக அனைத்து துறைகளிலும் சவால்விடுகிறது.இந்த ஐந்து நாடுகளுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. ஐந்துமே ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பிரதமர்களையும் ஜனாதிபதிகளையும் (autocratic) கொண்டுள்ளது. சீனா ஒரு கம்யூனிச நாடு ஆனால் சீ பிங்கை அந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்கிறார் பெர்னார்ட். இந்த ஐந்து நாடுகளையும் விவிலியத்தில் வரும் ஐந்து அரசர்களோடு (Joshua 10)ஒப்பிடுகிறார்.

மற்றொரு ஒற்றுமை இந்த ஐந்து நாடுகளுக்கும் உள்ளது. அது அவர்களின் வரலாறு. ஐந்துமே ஒரு காலத்தில் பலம்வாய்ந்த பேரரசாக இருந்தது. இந்த ஐந்து நாட்டு தலைவர்களும் பழம்பெருமை பேசுபவர்கள். மீண்டும் அந்த பழைய பெருமையை மீட்டெடுக்க வேண்டுமென்று மக்களிடம் சொல்பவர்கள். ஆனால் பெர்னார்ட் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை இன்றும் அமெரிக்காதான் வல்லரசு ஆனால் அது தனது அதிகாரத்தை மீட்டெடுக்கவில்லை(Western Civilization , liberty , Democracy ) என்றால் உலகமே மாறிவிடும் என்று கூறி இந்த புத்தகத்தை முடிக்கிறார் இடையில் ஏன் சமூக வலைத்தளங்கள் பற்றி எழுதினார் என்று தெரியவில்லை. May be, எனக்கு புரியாமல் இருக்கலாம்.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Monday, September 30, 2019

ரன்னிங் டைரி -9

29-09-2019 (05:30)
The Straits Times Run


காலை 3:50 மணிக்கே கண் முழித்துவிட்டேன்.ஒரு black காபி போட்டு குடித்துவிட்டு ஓட்டத்திற்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தேன். ஓட்டம் நடக்கும் இடத்திற்கு நடந்தே சென்றேன்.குளிர்ந்த காற்று காற்றில் புகை இல்லை. ஓடுவதற்கு ஏற்ற climate.

ஓட்டம்  சற்று தாமதமாக துவங்கியது. வாக்மேனை on செய்தபோது "கல்யாண மாலை" பாட ஆரம்பித்தது. முன்னாள் ஓடியவரின் கால்களைத் தவிர எதையும் பார்க்காமலும் யோசிக்காமலும் ஒரு சீரான வேகத்தில் ஓட ஆரம்பித்தேன்.கிட்டத்தட்ட 10 கி மீ  அப்படியே ஓடினேன் .  அப்புறம் சற்று வேகத்தை கூட்டினேன் ஆனால் வெகுதூரம் அந்த வேகத்தில் ஓட முடியவில்லை. பயிற்சி போதாது. திடீரென்று என்னை தாண்டி ஒரு பெண் ஓடினார்.அவருக்கு ஒரு கால் நீளம் சற்றுக் குறைவு. நான் அவரை அடுத்த 4 கி மீ பின் தொடர்ந்தேன். நானும் அவரும் ஒரே வேகத்தில் ஓடினோம். வேறு எதையும் எண்ணவில்லை. ஒரு கிலோமீட்டர் மீதம் இருக்கையில் நான் அவரை கடந்த சென்றேன். வழக்கத்தைவிட மெதுவாகத்தான் இந்த போட்டியை முடித்தேன். போட்டியை முடித்துவிட்டு வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அதே பெண் என்னை கடந்து நடந்து சென்றார். அப்போதுதான் முகத்தைப் பார்த்தேன். எப்படியும் ஐம்பதிற்கும் மேல் இருக்கும். ஓட்டத்திற்கு வயது ஒரு தடை இல்லை.

நான் எதிர்பார்த்த மாதிரி இந்த ஓட்டம் அமையவில்லை. இருந்தாலும் இவ்வளவு பேருடன் ஓடியது ஒரு பெரும் அனுபவம். எடுத்து சென்ற energy gel-ஐ தொடவே இல்லை. எந்தெந்த பாடல்கள் ஒலித்தன என்றும் தெரியவில்லை ஆனால் ஓட்டம்  முடிந்து வாக்மேனை off செய்யும்போது கவனித்தேன் "கண்ணே கலைமானே " ஓடிக்கொண்டிருந்தது.

The Weather Machine - Andrew Blum


வானிலை பற்றிய சிறிய புத்தகம். இப்புத்தகம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தந்தி கண்டுபிடிப்பு வானிலை கணக்கிடுவதை எவ்வாறு மாற்றியதை படிக்கும்போது "Convergence" புத்தகம்தான் மனதில் வந்தது. வெய்யில் காற்றின் வேகம் மற்றும் திசை  மற்றும் மழையின் அளவு இந்த நான்கும் அளவுகள் தான் வானிலை கணக்கிடுவதற்கு முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்றோ எனக்கு தெரிந்தே  முப்பதிற்கும் மேற்பட்ட அளவுகள் உள்ளன.

அதுவரை மேல பார்த்து வானிலையை கணக்கிட்ட மனிதன் செயற்கைகோள் வந்தவுடன் கீழே பார்த்து வானிலையைக் கணக்கிட ஆரம்பித்தான். வானிலை செயற்கைகோள் என்று சொல்லி இராணுவத்திற்குதான் அதை பயன்படுத்தினார்கள். முதல் செய்யக்கைகோளிற்கும் நாஜிகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது V-2 ராக்கெட் என்ஜின் தான். இந்த என்ஜின் நாஜி என்ஜினீயர் ஒருவரால் உருவாக்கப்பட்டது.இந்த என்ஜினை பார்த்துதான் அனைத்து செயற்கைகோள்களின் என்ஜினும் வடிவமைக்கப்பட்டது.  இன்று அனைத்து நாடுகளும் தங்களுக்கென்று தனி வானிலை செயற்கைகோள்கள் வைத்துள்ளனர். இந்தியாவும்  பல  வானிலை செயற்கைகோள்களை செலுத்தியுள்ளது. 

எவ்வாறு வானிலை  predictive models வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை ECMWF சென்று அங்கு நடப்பவை மூலம் விவரித்துள்ளார் ஆண்ட்ரு. வானிலை ஆராய்ச்சி என்பது உலகலாவியது மற்றும் கூட்டு முயறிச்சி. இதுவரை பெரிய நாடுகள் சிறிய நாடுகளுக்கு இலவசமாக வானிலை செய்திகளை பகிர்ந்தனர் ஆனால் அது படிப்படியாக ஒரு ஆயுதமாக பெரிய நாடுகள் பயன் படுத்துவார்கள் என்ற எண்ணம் எனக்கு வருகிறது. இன்றைய உலகில் "Data is weapon " அதுவும் வானிலை கண்காணிப்பு மிகவும் முக்கியமானது.இயற்கை பேரழிவில் இருந்து ஓரளவு நம்மை பாதுகாத்துக் கொள்ள வானிலை கண்காணிப்பும் ஆராய்ச்சியும் மிகவும் முக்கியம். சுவாரசியமான புத்தகம்.


Tuesday, September 24, 2019

ரன்னிங் டைரி -8

23-09-2019 18:20
அலுவதிலிருந்து வீடுவரை

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிங்கப்பூர் புகையால் சூழ்ந்துள்ளது. இந்தோனேசியாவில் எரியும் காட்டிலிருந்து வரும் புகை தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளது. வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென்று சிங்கப்பூர் அரசு அறிவித்திருக்கிறது.இன்று ஓடலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டே ஓட ஆரம்பித்தேன். புகை அப்படியொன்றும் மோசமில்லை ஆனால் நினைத்த தூரம் ஓடவில்லை.

ஓட ஆரம்பித்தவுடன் "Hawdy Modi!" தான். எங்க போய் முடியும்னு தெரியல. ஆனால் ஒரு விசயம் இந்திய அரசு எந்த காரணத்தைக் கொண்டும் டிரம்ப நம்பக்கூடாது. அவர்கள் அவர் சொல்வதையெல்லாம் சந்தோசமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.என்னத்த சொல்ல.  அப்படியே கிரேட்டா தன்பர்க் பக்கம் எண்ணம் சென்றது. இந்த பெண்ணை பாராட்டிதான் ஆக வேண்டும். அமெரிக்க குடியரசு கட்சி செனட்டர்கள் பலஇந்த சிறுமியைக் கண்டு அஞ்சுவதாக படித்த ஞாபகம். குழந்தைகள்தான் இயற்கையை அப்படியே ரசிப்பவர்கள். நூலகம் வந்தவுடன் ஓடுவதை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.
                                                                                                                                    
எந்தெந்த பாடல்கள் ஒலித்தன என்று ஞாபகமே இல்லை.                                                                                                                                                                                                                                                                                                               


Monday, September 23, 2019

கடல் அடி - சி. பெர்லின்


போன வாரம் நூலகத்திற்கு சென்றபோது ஒரு இன்ப அதிர்ச்சி ஏராளமான புதிய தமிழ் புத்தகங்கள். எட்டு புத்தகங்கள் எடுத்தேன்.அதில் ஒன்று இந்த புத்தகம். இந்த புத்தகத்தை எடுத்ததற்கு முதல் காரணம் இது மீனவர்கள் வாழ்க்கை பற்றியது.

தன் மனைவியை அடித்த சேவியரை அடித்தே ஆகவேண்டும் என்று அடிகம்போடு கடற்கரையில் வெறியோடு நிற்கும் இன்னாசி சேவியரை என்ன செய்தான் என்பதுதான் கதை. இதுதான் கதை என்றாலும் இடையே வரும் பல சம்பவங்கள் முக்கியமானது. அதிலும் மணல் கொள்ளை பற்றிய விவரிப்பும் அதன் தாக்கமும் மிக மிக அவசியமானது.

"காலங்காலமா மலைகளில் இருந்து தாதுக்களையும் , கனிமங்களையும் ஆத்துத் தண்ணி இழுத்திண்டு வந்து கடல்ல சேக்குது. கடலு அந்த தாதுக்களையும் , கனிமங்களையும்கடற்கரையில் அடிச்சு ஒதுக்குது.இப்படி பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்குத மணலுல கதிரியக்கப் பாதிப்புகள் அதிகம் இருக்குமாம்.அதுல ஆல்பா கதிர் ,பீட்டா கதிர் , காமா கதிர் இப்பிடி கதிரியக்கம் இருக்குமாம். அந்தக் கதிரியக்கம் மணலுக்குள்ள இருக்குறதுவர எந்தப் பாதிப்பும் இல்லையாம். அது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பா இருக்குமாம்.ஒரு சென்டிமீட்டர் மணல் சேர நூறு வருசமாகும். அந்த கனிமங்களும், தாதுக்களும் கலந்த மணலைத் தோண்டி எடுக்கும்ப கதிரியக்கம் வெளிப்படும்...... அப்படி வெளியாகக்கூடிய கதிரியிக்கத்துனால மனுச ஒடம்புல கேன்சர் பரவுதாம்."
இன்னாசி பயங்கர கோபக்காரன். ஊர் வேலையில் முன்னில் நிற்பவன்.இன்னாசிக்கு கடல்தான் எல்லாமே. சம்பாரித்த அனைத்தையும் கடல் தொழிலேயே செலவழிகிறான். நிர்மலா அவனை காதலித்து வீட்டை எதிர்த்து  திருமணம் செய்கிறாள். அவள் அவனின் தைரியத்தை மட்டுமே நம்பி அவனுடன் செல்கிறாள்.ஒரு பஞ்சாயத்தை மூன்றாக பிரித்ததால் பல பிரச்சன்னைகள் அப்படிதான் அன்று தண்ணீர் பிடிப்பதில் பெண்களுக்கிடையே கடும் வாக்குவாதம் கைகலப்பில் வந்து நின்றது.

இன்னாசி கட்டுமரத்தை செய்ததையும்  பராமரிப்பதையும் மிக அழகாக எழுதியுள்ளார். IT மொழியில் சொல்லனும்னா technical details and jargons. எனக்கு பல வார்த்தைகள் புரியவில்லை நல்லவேளையாக "கடலோர கலைச் சொற்கள்" என்ற பட்டியல் புத்தகத்தின் பின் உள்ளது.இந்த புத்தகத்தில் நான் வாய்விட்டு சத்தமாக சிரித்த ஓரிடம் உள்ளது - அது சூசை சிலுவையின் பாவ சங்கீர்தன நிகழ்வு . சிலுவை " பாவீ நான் சாமியாரா இருக்கிறேன். என்னை ஆசீர்வதியும்" - இதைப் படித்ததும் வெடித்துச் சிரித்தேன். அருகில் உட்கார்ந்து இருந்தவர் என்னை ஒரு விதமாக பார்த்தார்.அவர் ஆங்கிலத்தில் "oh from the book ?" என்றார். நான் ஆமாம் என்றேன்.

கதையின் இறுதி திரைப்படங்களில் வருவது போல வாசகனை ஒருவித தத்தளிப்பிற்கு கொண்டு சொல்கிறது. எவ்வளவு கோபமாக இருந்தாலும் கடலில் ஒருவனுக்கு ஆபத்து என்றால் எல்லாத்தையும் மறந்து உதவக்கூடியவன் மீனவன்தான். இக்கதையில் இன்னாசியும் அப்படித்தான்.மொத்த பக்கங்கள் தொண்ணூற்றி ஒன்பதுதான் ஒரே அமர்வில் படித்து முடித்துவிட்டேன். பெர்லின் வாசகனை கடற்கரைக்கே கூட்டிச் செல்கிறார். வாசிக்க வேண்டியே புத்தகம்.  

ரன்னிங் டைரி -7

19-09-2019 17:30
கிழக்கு கடற்கரை பூங்கா

இன்று அலுவலகம் செல்லவில்லை. மகளுக்கு சிங்கப்பூர் பள்ளியில் சேர நடக்கும் நுழைவு தேர்வு இன்று.  தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் walkman-ஐ எடுத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். லேசாக வெய்யில் அடித்தது. ஓட ஆரம்பித்ததிலிருந்து அந்த நுழைவுத்தேர்வுப் பற்றியே எண்ணம்.  பிள்ளைகள் எக்ஸாம் ஹாலை விட்டு  வெளிய வந்தவுடன் பெற்றோர்கள் அவர்களை கேள்விகளால் துளைத்து எடுத்தனர்.   எனக்கு ஏனோ கோபம்.இந்தியாவின் அனைத்து மொழிகளையும் அங்கு கேட்டேன். நான் என் மகளிடம்  "had fun?" என்று கேட்டேன். அவளும் சிரித்துக் கொண்டே தலையை ஆட்டினாள். அதன் பிறகு அவளிடம் அந்த தேர்வைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.

திடீரென்று எதிரே வருபவர் தெரிந்தவர் மாதிரி தெரிந்தது. ஆம் தெரிந்தவர்தான். எங்களோடு கைப்பந்து விளையாட வருபவர். ஹலோ சொல்லிவிட்டு ஓடிச்சென்றேன்.  எண்ணங்கள் அப்படியே கைப்பந்து மேல் சென்றது. பாம்பனில் கைப்பந்து விளையாடுவது ஒரு பெரும் அனுபவம். விளையாடுபவர்கள் அனைவரும் என் உறவினர்கள்தான் ஆனால் அதட்டலும் கெட்ட வார்த்தைகளும் அனல் பறக்கும். அந்த மைதானமே ஒரு திகில் தரக்கூடியது .volleyball court தவிர மற்ற இடங்கள் எல்லாம் மலம் தான். மலத்தில் படாமல் பந்தைப் துரத்துவத்துவதிலேயே tired-ஆகி விடுவோம்.அங்கிருந்து மாறி ஆலமர திடலுக்கு மாறினோம். அங்கு காற்றோடு விளையாடியதுதான் அதிகம். அது ஒரு அழகிய நிலாக் காலம். அப்படியே நினைவு பாட்டில் திரும்பியபோது "The Litany of the Saints" ஓடிக் கொண்டிருந்தது. அந்த அமைதியிலேயே வீடு திரும்பினேன்.

Friday, September 20, 2019

ரன்னிங் டைரி -6

17-09-2018 18:27
அலுவதிலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்து கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் எதையும் எண்ணவில்லை. சிக்னலில் நிற்கும் போது ஊரைப் பற்றிய எண்ணம்  வந்தது. எம்மக்கள் எதையும் ஒற்றுமையாக செய்ததாக எனக்கு ஞாபகமில்லை. எதற்கெடுத்தாலும் அடுத்தவரைக் குறை சொல்வது. அப்படியே பெரியப்பா நினைவில் வந்தார். என் அப்பாவின் பெரியம்மா மகன்.  ஊரைப் பற்றி எண்ணம் வரும்போதெல்லாம் வரும் முகம் பெரியப்பாவுடையது. பெரியாப்பாவை ஊர் மக்கள் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. உண்மைகளை சட்டென்று சொல்லிவிடுவார் அதனால்தான். ஆனால் பெரியப்பாவால் வாழ்க்கை அடைந்தவர் பல நூறு.  பலமுறை பெரியப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதுகொண்டே  நன்றி சொல்லிய அம்மாக்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஏனோ எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் நினைவில் வந்தார்.  அவரது facebook போஸ்ட் தான் காரணம் என்று நினைக்கிறேன்.  அப்படியே தனுஸ்க்கோடி நினைவில் ஓடி முடித்தேன்.

Tuesday, September 17, 2019

ரன்னிங் டைரி -5

16-09-2019 18:53
அலுவகத்திலிருந்து வீடுவரை

வாக்மேனை on செய்தவுடன்  ஒலித்த பாட்டு "ஊரு சனம் தூங்கிருச்சு" பாட்டு முடியும்வரை ஜானகி அம்மாளின் முகமும் MSV-ன் முகமும் மாறி மாறி மனதில் தோன்றியது. சிக்னலில்இருவர் ஹிந்தியில் பேசிக்கொண்டிருந்தனர். சிக்னல் மாறியவுடன் இருவரும் இருவேறு திசைகளில் சென்றனர்.  என் எண்ணம் கிரண் பேடி அவர்கள் மேல் சென்றது. அவருக்கு புதுச்சேரி மக்களுடன் பேசுவதற்கு மொழிபெயர்ப்பாளர் தேவைப்படுகிறதாம். கடினம்தான்! புரிந்து கொள்ளமுடிகிறது.  ஆனால் அதற்காக மக்கள் அனைவரும் ஹிந்தி கற்க வேண்டுமென்று சொல்வதை  - என்னத்த சொல்ல!!

சமந்தமேயில்லாமல் காந்திஜி நினைவில் வந்தார். அவர் இப்ப இருந்திருந்தா என்ன செய்து கொண்டு இருப்பார் ஒரு எண்ணம். நம்மவர்கள் இவரைவிட வேறு யாரையும் தவறுதலாக கொண்டதாக எனக்கு தெரியவில்லை. காந்திஜியின் ட்விட்டர் பெயர் என்னவாக இருக்கும் @gandhi அல்லது @ahimsa  இந்த இரண்டில் ஒன்றைத்தான் அவர் வைத்திருப்பர் என்பது என் உறுதியான நம்பிக்கை.சிரித்துக் கொன்டே அவரை எப்படியெல்லாம் troll செய்வார்கள் என்று எண்ணினேன். மீண்டும் மீண்டும் சிரிப்பு வந்தந்து.

மெரின் பரேட் நூலகத்தின் அருகில் வந்தவுடன் உள்ளே செல்லலாமா சென்ற யோசனை வந்தது.உள்ளே போனால் உடனே வருவது சிரமம் அதனால் ஓட்டத்தைத் தொடர்ந்தேன். சிங்கப்பூர் போல் இந்தியாவில் நூலகங்கள்  எப்போது வரும் என்ற ஏக்கத்துடன் வீடு வந்தடைந்தேன்.

Monday, September 16, 2019

ரன்னிங் டைரி -4

14-09-2019 05:50
கிழக்கு கடற்கரை பூங்கா

சனிக் கிழமைகளில் பொதுவாக காலை 4:30 மணிக்கே ஓட ஆரம்பித்து விடுவேன். ஆனால் இன்று தாமதமாகியது. குளிர் காற்று.கிழக்கு கடற்கரை பூங்கா எனக்கு மற்றொரு வீடு மாதிரி. வீடு மற்றும் அலுவலகத்திற்கு பிறகு நான் அதிகமாக நேரம் செலவழிக்கும் இடம் . வீட்டிலிருந்து பூங்கா செல்லும்வரை மழை பெய்யுமா பெய்யாதா என்று கேட்டுக்கொண்டிருந்தேன். பூங்காவை அடைந்தவுடன் கடல் காற்று என்றும் கொடுக்கும் ஒருவிதமான புத்துணர்வை கொடுத்தது.கடல் தாயை கையெடுத்து வணங்கிவிட்டு ஓட்டத்தைத் தொடர்ந்தேன்.


ஏனோ தெரியவில்லை அம்மாச்சி ஞாபகம் திடீரென்று வந்தது. தூங்கும் முன் கதை சொல்லும்  அம்மாச்சி அப்பத்தா எங்கள் யாருக்கும் அமையவில்லை. அப்பத்தா நான் சிறுவனாக இருக்கும் போதே இறந்துவிட்டார். பாட்டி என்றால் அம்மாச்சி மட்டும்தான். அம்மாச்சி பல டாக்டர்களுக்கு சமம். அம்மாச்சி எனக்கு எப்போ உடம்பு சரியில்லையென்றாலும் உடனே வருபவர். இன்னுமே  எனக்கு உடம்பு சரியில்லாமல் போகும்போதெல்லாம் வரும் முகங்கள்  அம்மாச்சி மற்றும் அம்மாவுடையது.

அம்மாச்சியின் ஞாபகத்திலிருந்து பாம்பன் கடற்கரை ஞாபகம் வந்தது. இதுவரை ஊர் கடற்கரையில் ஓடியதில்லை. இந்த முறை பாம்பன் பாலத்தில் ஓடியது மறக்க முடியாதது. நான் சென்ற அனைத்து  நாடுகளிலும் ஓடி இருக்கின்றேன் ஆனால் சொந்த ஊரில் ஓடியது இந்த வருடம்தான்.பாம்பன் பாலத்தின் பராமரிப்பையும் கிழக்கு கடற்கரை பூங்காவின் பராமரிப்பையும் நினைத்து ஒரு நிமிடம் நின்றே விட்டேன். ஒரு விதமான சோகம் என்னைப் பற்றிக்கொண்டது. நல்லவேளை எனக்கு மிகவும் பிடித்த பாடலான "மாங்குயிலே பூங்குயிலே" பாடல் ஒலிக்க ஆரம்பித்தது அந்த சோர்விலிருந்து மீண்டேன். இந்த பாடல் ஒலிக்கும்போதெல்லாம் நானே இளையராஜா நானே எஸ்பிபி நானே ஜானகி நானே ராமராஜன் நானே கனகா! என்னை அறியாமலேயே என் கைகள் இசைக்கேற்ப அசைய ஆரம்பித்துவிட்டன .இது எப்போதும் நடப்பவைதான். பலபேர் என்னை நிறுத்தி என்ன பாட்டு கேட்டுகிட்டு இருக்கீங்க? என்று கேட்டதுண்டு. நானும் சிரித்துக்கொண்டே பதில் கூறுவேன். இன்று யாரும் அப்படி கேட்கவில்லை. என்ன இசை! ராஜா ராஜாதான்!

லேசாக வெளிச்சம் வர ஆரம்பித்தது.  வயதானவர்கள் தாய் சீ (Tai chi) மற்றும் qigong பயிற்ச்சி செய்ய தொடங்கினர். அவர்களது உடல் அசைவு ஓர் ஓவியம் போன்றது. மெதுவான கை கால்கள் அசைவு. பல தடவை என் ஓட்ட வேகத்தை குறைத்து அதை ரசித்ததுண்டு. இன்று அவ்வாறு செய்யவில்லை. பெடோக் jetty-யைத் கடக்கும்போது மெஸ்ஸியின் ஞாபகம் வந்தது . மெஸ்ஸியில்லாமல் வார இறுதி football-லே interest இல்லை."நிகரா  தன் நிகரா " என்ற பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. வினீத் ஸ்ரீனிவாசனின் குரலோ குரல் . திடீரென்று ஒரு பெண்கள் குரூப் பிங்க் கலர் டீ-ஷர்ட் மற்றும் பிங்க் கலர் ஷூவிலும் side வழியிலிருந்து என் முன்னே ஓடினர். நான் அவர்களின் shoes-ஐ பார்த்து சிரித்துக்கொண்டே அவர்களுக்கு ஈடாக எனது வேகத்தை அதிகரித்தேன். சற்று தூரம் கடந்தவுடன் மற்றொரு பெண்கள் குரூப் அதே பிங்க் கலர் டீ-ஷர்ட்ல். ஏதோ போட்டி என்று எண்ணிக்கொண்டேன். அப்படியே எண்ணங்கள் அடங்கி மூச்சில் வந்து நின்றது வீடு வரும்வரை எதையும் எண்ணியதாக ஞாபகமில்லை.

Thursday, September 12, 2019

ரன்னிங் டைரி -3

12/09/2019 08:10
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

வாக் மேனை எடுக்க மறந்து விட்டேன். அருமையான காலை. வெய்யில் லேசாக அடித்துக்கொண்டிருந்தது. வாரநாட்களில் காலையில் ஓடினாள் சில காட்சிகளை ஒவ்வொரு நாளும் காணலாம். இரண்டு இந்திய பள்ளிக் குழந்தைகள் அவசர அவசரமாக பேருந்து எண் 30-ஐ பிடிக்க ஓடுவார்கள். இன்றும் அதே நடந்தது. எப்பவும் யோசிப்பது போல் இன்றும் அதே யோசனை அவர்களின் பெற்றோர்கள் ஏன் அவர்களை சற்று நேரம் முன்பாக பேருந்து நிலையத்திற்கு போக சொல்லக் கூடாது?? இந்த மொபைல் அப்ளிகேசனால் வருகின்ற வினை.

சர்ச்க்குள் ஒரு ஐயா இரண்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு புரட்டி பார்த்துக்கொண்டிருந்தார். ஒரு "அருள் நிறைந்த மரியே" சொல்லிக்கொண்டே கடந்து ஓடினேன்.யூனுஸ் மேம்பாலம் வரை என்ன எண்ணினேன் என்று ஞாபகமில்லை. திடீரென்று அமெரிக்கா ஏன்  குர்டிஸ்தானை கைவிட்டது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு காரணம் நேற்று தான்  "The Empire And Five Kings" புத்தகத்தைப் வாசிக்க ஆரம்பித்தேன். சிவப்பு  சிக்னல் வந்தது அதில் ஒரு இந்தியர் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார் என்னை உற்றுப் பார்த்தார் நான் ஹலோ என்றேன். "என்னண்ணே DMK கலர்ல டிரஸ் பண்ணிருக்க " என்று கேட்டார். நான் சிரித்துக்கொண்டு கடந்து சென்றேன். நான் சிவப்பு கலர் டீ-ஷர்ட்டும் கருப்பு ஷார்ட்ஸும் சிவப்பு ஷூவும் அணிந்திருந்தேன் !

அலுவலகத்தை நெருங்கும்போது திடீரென்று "The Final Countdown" பாடல் நினைவில் வந்தது.அலுவலகத்தை அடைந்ததும் அதைப்  பற்றிய நினைப்பே. 1996 உலக கோப்பை கிரிக்கெட் கவுண்டன் நிகழ்ச்சி ஒன்று சன் டிவியில் ஒளிபரப்பானது. அந்த நிகழ்ச்சியின் டைட்டில் பாடல் இது. எங்கள் எல்லோருக்கும் மிகவும் பிடித்த beat song! 

Wednesday, September 11, 2019

ரன்னிங் டைரி -2

10-09-2019 18:20

அலுவகத்திலிருந்து வீடுவரை:

ஓட ஆரம்பித்தவுடன் ஒலித்த முதல் பாடல் " மொச்சக்கொட்ட பல்லழகி" இந்த பாட்டை எப்ப கேட்டாலும் பள்ளி நாட்கள்தான் ஞாபகத்தில் வரும் ஏனென்றால் நான் இந்த பாட்டிற்கு டான்ஸ்  ஆடி இருக்கேன். எங்களுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தவர் இலங்கை தமிழர். முகம் மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கிறது. எனக்கு முகம் முழுவதும் பெயிண்ட் அடிச்ச மாதிரி மேக்கப்! அப்படியே எண்ணம் மாறி இந்திய பிரதமர் மோடியின் "Chief of Defence" பற்றிய அறிவிப்பு வந்தது. ஒருவரின் கண்காணிப்பில் மொத்த பாதுகாப்பு துறை!அந்த பதவியை யாருக்கு கொடுப்பார்கள் என்று யோசித்துக்கொண்டே .சீமானிற்கு கொடுத்தால் ?? நானே சிரித்துக்கொண்டேன்!

நேற்றைவிட இன்று சற்று வேகமாக ஓடினேன். கவனம் மூச்சில் சென்று நின்றது. வழக்கம்போல எவ்வளவு நேரமென்று தெரியவில்லை. கவனம் திரும்பியபோது பாரதீய ஜனதா கட்சியின் தமிழிசை அவர்களின் முகம் வந்தது.இன்று மதியம் நண்பர் ஒருவர் தமிழிசை அவர்களின் புதிய புகைப்படத்தைக் காண்பித்தார். அவர்களின் தோற்றத்தை எவ்வளவு கீழ்த்தரமாக விமர்சித்தாலும் அவற்றை புன்னகையோடு எதிர்கொண்ட விதம் அருமை!  தமிழிசை அவர்களை பற்றி நினைக்கும்போது எப்போதும் கூட வரும் முகம் நிர்மலா சீத்தாராமன்! ஏன் என்று தெரியவில்லை.

திரும்பவும் கவனம் இசைக்கு திரும்பியபோது மலேசியா வாசுதேவனின் குரலில் "ஆசை நூறு வகை"  பாட்டு ஒலித்துக்கொண்டிருந்தது. இவரது குரலில் ஒரு விதமான ஈர்ப்பு!  இவரின் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் சுகாவின் இந்த கட்டுரையும் கூட வரும்.வீட்டை நெருங்கும்போது தயிர் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் திரும்பி சென்று வாங்கலாமா என்ற யோசனையுடன் வீட்டை அடைந்தேன்.