Thursday, November 7, 2019

ரன்னிங் டைரி -28

07-11-2019 08:14
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

நல்ல வெய்யில்.ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது டெல்லியின் காற்று மாசு பற்றி படித்ததுதான். எம்மாடியோவ் ! என்னதான் அரசு பண்ணுகிச்சுனு தெரியல. இவ்வளவு மோசமா ?! நான் நான்கு முறை டெல்லி  சென்றிருக்கிறேன் நான்கு முறையும் அதை கவனித்திருக்கிறேன். விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தவுடன் மூக்கில் கைக்குட்டையை கட்டிவிடுவேன். டெல்லி மக்களின் துயரைப் படிக்கவே வருத்தமாக இருந்தது. அப்படியே சிங்கப்பூரைப் பற்றி யோசனை வந்தது. வருடாவருடம் இங்கும் haze பிரச்சனை. இந்த வருடம் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேல் வெளிப்புற நடவடிக்கைகள் ஏதும் செய்ய முடியவில்லை. ஒரு வாரத்திற்கே இப்படியென்றால் பாவம் டெல்லி மக்கள்.

ஏன் நம் மக்கள் இயற்கையை விட்டு பிரிந்து கொண்டே இருக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

No comments: