Monday, November 25, 2019

ரன்னிங் டைரி -38

23-11-2019 05:04
வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட ஆரம்பித்தவுடன் கவனித்து இருளைத்தான்.கும்மிருட்டு. "காட்டுக்குயிலு.." பாடல் ஆரம்பித்தது. மிகவும் மெதுவாக ஓடினேன். கடற்கரையை நெருங்கியவுடன் உறவினர் ஒருவரின் இறப்புதான். நான் அவருடன் நெருங்கி பழகியதில்லை. அவரின் சொத்து பிரச்சனைகளைப்  பற்றி நண்பர்கள் கூறியதுதான். பணம் தான் எல்லாம். நான் வெளுத்ததெல்லாம் பால் என்று எண்ணுபவன் ஆனால் கடந்த பத்து வருடங்களில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளைக் கேட்கும் போது மக்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள் என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.

கிழக்கு கடற்கரை பூங்காவில்  புது சைக்கிள் பார்க் திறக்கப்பட்டுள்ளது. எதார்த்தமாக திரும்பியபோது கவனித்தேன். புதிது புதிதாக எதையாவது செய்து கொண்டே இருக்கிறது சிங்கப்பூர் அரசு. கிழக்கு கடற்கரை பூங்காவில் எவ்வளவு மாற்றம். காலையில் இந்த பூங்காவின் அழகே தனி. ஏனோ தனியாக ஓடிக் கொண்டிருப்பதாக ஒரு உணர்வு. அடுத்த வாரம் 21 கிலோமீட்டர் பந்தயம் உள்ளது அதனால் இந்த வாரம் கண்டிப்பாக பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். அதைப் பற்றி யோசித்துக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: