Thursday, February 28, 2019

War On Peace - Ronan Farrow


I know that war is the failure of diplomacy and the failure of leaders to make alternative decisions.
அமெரிக்க வெளியுறவு மற்றும் ராஜதந்திரம் எப்படி படிப்படியாக சரிந்து கொண்டிருக்கிறது என்று எடுத்துக்கூறும் புத்தகம் இது. ரொனன் பார்ரோவ் எனக்கு பரிச்சியமான எழுத்தாளர். அவரின் பல கட்டுரைகளை வாசித்திருக்கிறேன்.இவரின் Harvey Weinstein பற்றிய கட்டுரை #Me Too  இயக்கத்தில் பெரும் தாகத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது. ரொனன் ஒரு முன்னாள் வெளியுறவுத் துறை அதிகாரி. அமெரிக்க ராஜதந்திர உத்திகளை உள்ளிருந்து அறிந்தவர் இது அவரின் முதல் புத்தகம்.
If you don’t fund the State Department fully, then I need to buy more ammunition ultimately.
புத்தகம் "Mahogany Row Massacre" என்னும் ட்ரும்பின்  வெளியுறவு  துறை அதிகாரிகளின் வேலைநீக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது. State Department-ன் சரிவு ட்ரும்பிற்கு முன்பே ஆரம்பித்துவிட்டது என்கிறார். அது உண்மையும் கூட. வியட்நாம் போருக்கு பின் வந்த அனைத்து ஜனாதிபதிகளும் பேச்சுவார்த்தையை விட இராணுவதையே அதிகம் நம்பினார்கள். படிப்படியாக ஒவ்வொரு ஜனாதிபதியும் மேலும் மேலுமென்று தங்களைச் சுற்றி இராணுவ அதிகாரிகளையே வைத்துக்கொண்டார்கள். தற்போதைய ஜனாதிபதி டிரம்ப்தான் State Department-ன் பட்ஜெட்டை மிக அதிகமாக குறைத்து. பல முக்கியமான பொறுப்புக்களுக்கு இன்னும் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. தாமஸ் கண்ட்ரிமேன் என்னும் ஆயுதங்கள் கட்டுப்படுத்தும் துறையின் நிபுணர் மூன்றே நாட்களில் நீக்கப்பட்டார். கொடுமை என்னவென்றால் அவர் ஒருவரே அந்த துறையில் அமெரிக்க நிபுணர்.
American leadership no longer valued diplomats, which led to the kind of cuts that made diplomats less valuable. Rinse, repeat.
'70 மற்றும் 80-களில் கூட எதிரி நாடுகளோடு நேரடியாக பேச்சுவார்த்தை செய்து கொண்டிருந்தது. பல முக்கியமான முடிவுகள் இரவு பகலாக வெளியுறவு அதிகாரிகள் உழைத்ததின் விளைவாக கிடைத்ததுதான். போஸ்னிய போர் நிறுத்தம் , ஆப்கான் போர் மற்றும் பல.  ஆப்கான் போர் அமெரிக்காவிற்கு பெரிய பாடம் ஆனால் அதன் இராணுவமோ அதிலிருந்து இன்னும் பாடம் கற்றதாக தெரியவில்லை.  இராணுவ அணுகுமுறையே சிறந்தது என்று திரும்ப திரும்ப சொல்லி பேச்சுவார்த்தை என்னும் அம்சத்தையே வெளியுறவு கொள்கையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கொண்டுவந்து கொண்டிருக்கிறார்கள் அமெரிக்கர்கள். இந்த அணுகுமுறையே அமெரிக்காவின் சரிவுக்கு காரணமென்று ரொனன் கூறுகிறார்.

புத்தகத்தில் திரும்ப திரும்ப வரும் ஒரு நாடு பாகிஸ்தான். அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள உறவு ஒரு வினோதமானது. முதலில் கம்யூனிசியத்தை எதிர்க்க பின்னர் தீவிரவாத ஒழிப்பில் அமெரிக்காவிற்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்புத் தேவைப்பட்டது இன்னும் தேவைப்படுகிறது இந்த சூழ்நிலையை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக மிகவும் சாதுரியமாக பயன் படுத்திக்கொண்டது. அமெரிக்காவிடமிருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பாகிஸ்தான் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறது. எப்படி அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் உறவு ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக எழுதியுள்ளார். பாகிஸ்தானுடன் இராணுவ உறவுவை மட்டுமே அனைத்து ஜனாதிபதிகளும் மேற்கொண்டனர். மக்களுடன் பேசுவதற்கு எந்த அமெரிக்க அரசும் அதிகாரிகளை நியமிக்கவில்லை. இதுவே இந்த உறவின் பிரச்சனை என்கிறார் ரொனன்.

State Department-ல் எந்த தவறே இல்லையென்று ரொனன் சொல்லவில்லை  மாறாக அதற்கும் மற்றும்  USAID-விற்குள்ளும் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்றே கூறுகிறார்.  ஆனால் இன்று நடப்பதோ அந்த அமைப்புகளையே முழுவதும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் அதைத்தான் அவர் எதிர்கிறார் . அரசியல் காரணங்களுக்காக அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பலரை தற்போதைய அமெரிக்க அரசு வேலையிலிருந்து நீக்கிக் கொண்டே இருக்கிறது.

ரொனன் இருநூறுக்கும் மேற்பட்ட அதிகாரிகளையும் அமைச்சர்களையும் இந்த புத்தகத்திற்காக பேட்டி கண்டுள்ளார். அதில் சிலர் சொல்வது அப்பட்டமான பொய். அதையும் ரொனன் ஆதாரங்களோடு நிரூபிக்கிறார். புத்தகம் முழுவதும் பல ஆச்சிரியமூட்டும் விசயங்கள் உள்ளன. பேச்சுவார்த்தையும் இராணுவ வியூகமே சரியான வெளியுறவு துறை அணுகுமுறை .

வாசிக்க வேண்டிய கட்டுரை :
The Machine  That Fails 

கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

Tuesday, February 26, 2019

Being Mortal - Atul Gawande


We know less and less about our patients but more and more about science.
இந்த வருடத்தில் நான் வாசித்த முதல் புத்தகம். மருத்துவம் முதுமை மற்றும் இறப்பை பற்றி பேசும் புத்தகம்.அதுல் கவாண்டே ஒரு மருத்துவர். அவரின் அப்பாவின் நோய் பற்றி தெரிந்த பின்பு அவருடைய எண்ணங்களை இந்த நூலில் எழுதியுள்ளார் . குணப்படுத்த முடியாத நோய் வந்தால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் நோயாளியிடம் அவரின் விருப்பதைக் கேட்கிறோமா மருத்துவர் அதை ஏற்றுக்கொள்வாரா  இப்படி பல முக்கியமான கேள்விகளைக் கேட்கிறார்.
For human beings, life is meaningful because it is a story. A story has a sense of a whole, and its arc is determined by the significant moments, the ones where something happens.
 முன்பு கிராமங்களில் வயதானவர்களை அதிலும் நோய்வாய்ப்பட்டவர்களை எப்படி குடும்பங்கள் பார்த்துக்கொண்டன என அவர் மிகவும் அழகாக விவரிக்கிறார். அவரின் தாத்தா தனது இறுதிவரை தனக்கு பிடித்ததை செய்துக் கொண்டிருந்தார் என்கிறார் அதுல் அதற்கு முக்கிய காரணமென கருதுவது அவரின் குடும்பத்தாருக்கு அவருக்கு என்ன பிடிக்கும் என்று தெரியும் அவர்களும் அவரை அவரின் விருப்பத்திற்கு விட்டதுதான். காலங்கள் மாற குடும்ப அமைப்பும் மாறின நாம் எப்படி நோய்களையும் வயதானவர்களையும் நடத்துகிறோம் என்பதும் மாறிக்கொண்டே வருகிறது.
Our ultimate goal, after all, is not a good death but a good life to the very end.
Life is choices, and they are relentless. No sooner have you made one choice than another is upon you. 
இறப்பைப் பற்றி பேசுவதே தவறென கருதும் சூழலில்  எத்தனை மருத்துவர்கள் இறப்பைப் பற்றி தங்களின் நோயாளிகளுக்கு விவரித்து கூறுகிறார்கள். பெரும்பாலும் எந்த மருத்துவரும் அதை பற்றி பேசுவதில்லை ஏனென்றால் அவர்களுக்கு எப்படி நோயை குணப்படுத்த வேண்டுமென்று மட்டும்தான் சொல்லிக் கொடுக்கப்பட்டுள்ளது.அதுல் மருத்துவர்களை மூன்று விதமாகப் பிரிக்கிறார் :
1.Paternalistic - தந்தைப் போல நோயாளி என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் கூறுபவர்.
2.Informative  - மேலே கூறியவருக்கு எதிர் இவர். அனைத்து விவரங்களையும் நோயாளியிடம் சொல்பவர். இறுதி முடிவை நோயாளியிடம் விட்டுவிடுவார்.
3.Interpretive - இவர் மேலே கூறிய இருவரின் கலப்பு. நோயாளியிடம் எடுத்துக் கூறி அவரிடம் அவருக்கு முக்கியமானது எது என்று கேட்பவர்.
ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு விதமான நோய்களுக்கு பொருந்தும். குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மூன்றாவது வகை மருத்துவர்கள் தான் பொருந்தும் ஏனென்றால் அவர்கள் வாழப்போகும் காலம் குறுகியது.  அதுல் இந்த மூன்று வகையையும் தனது தந்தையின் சிகிச்சையின் போது எதிர்கொள்கிறார்.
Courage is strength in the face of knowledge of what is to be feared or hoped. Wisdom is prudent strength.
Your chances of avoiding the nursing home are directly related to the number of children you have. 
எப்படி முதியவர்களைப்  பரமரிக்கும் நிறுவனங்கள் தோன்றின  மற்றும் அது எப்படி  சேவையிலிருந்து தொழிலாக மாறியது என்பதையும் விரிவாக எழுதியுள்ளார். முதுமை என்றவுடன் பணம் செலவழிப்பு என்று சொல்லும் அளவுக்கு அது வியாபாரமானது  என்றால் மிகையாகாது. இறுதி காலத்தைப் பற்றி  நோயாளிகள் மற்றும் முதியவர்களுடன் உரையாடுவதே சிறந்தது என்கிறார் அதுல். அது கடினம் தான் ஆனால் அதுவே அனைவருக்கும் சிறந்தது.
We’ve been wrong about what our job is in medicine. We think our job is to ensure health and survival. But really it is larger than that. It is to enable well-being.
இந்த புத்தகத்தை நான் ஏன் கீழே வைக்காமல் படித்தேன் என்று எனக்கே தெரியவேயில்லை இதில் எனக்கு முன்னரே தெரியாத விசயங்கள் பெரிதும் ஏதும் இல்லை ஆசிரியரின் வாதங்களும் புதிதல்ல ஆனால் அவர் கூறிய முறை . மிகவும் எளிய முறையில் எடுத்துக்காட்டுகளுடன் கூறியதுதான். ஒவ்வொன்றையும் ஒரு கதையின் மூலம் சொல்கிறார். முதலில் அவரின் தந்தையின் நோய் பற்றி இரண்டாவது குணப்படுத்த முடியாத நோயாளிகளின் வாழ்க்கை அவர்களின் எதிர்பார்ப்பு மற்றும் அவர்களை கவனித்துக் கொள்பவர்கள் பற்றி மூன்றாவது இறப்பை பற்றி நான்காவது மருத்துவர்களை பற்றி ஐந்தாவது மருத்துவச் செய்திகள். மருத்துவத்தை இவ்வளவு அழகாக கதையினுடன் சொல்வது மிகவும் கடினம் ஆனால் அதுல் அதை மிக அற்புதமாக செய்துள்ளார்.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Monday, February 25, 2019

Letters To A Young Poet - Rainer Maria Rilke


ரில்கே புகழ்ப்பெற்ற ஜெர்மனிய கவிஞர். நான் அவரின் சில கவிதைகளை படித்திருக்கிறேன். இந்த புத்தகம் அவர் ஒரு வளரும் கவிஞருக்கு எழுதிய பத்து கடிதங்களை கொண்டது. பிரான்ஸ் சேவேர் கப்புஸ் தனது கவிதைகளை ரில்கேவிடம் அனுப்பி அவரின் எண்ணத்தைக் கேட்கிறார். அவர்களுக்கிடையே நடந்த அந்த எழுத்துப் பரிமாற்றமே இந்த புத்தகம்.
There is only one thing you should do. Go into yourself. Find out the reason that commands you to write; see whether it has spread its roots into the very depths of your heart; confess to yourself whether you would have to die if you were forbidden to write. This most of all: ask yourself in the most silent hour of your night: must I write? Dig into yourself for a deep answer. And if this answer rings out in assent, if you meet this solemn question with a strong, simple "I must", then build your life in accordance with this necessity; your whole life, even into its humblest and most indifferent hour, must become a sign and witness to this impulse. Then come close to Nature. 
கடிதங்கள் ஒவ்வொன்றும் வெவ்வெறு ஐரோப்பிய நகரங்களில் இருந்து எழுதியது.
Perhaps all the dragons in our lives are princesses who are only waiting to see us act, just once, with beauty and courage. Perhaps everything that frightens us is, in its deepest essence, something helpless that wants our love.
ஒரு கலைஞன் தனது வளர்ச்சியை எப்படி பார்க்க வேண்டுமென்று ரில்கே இவ்வாறு கூறுகிறார் -
To be an artist means not to compute or count; it means to ripen as the tree, which does not force its sap, but stands unshaken in the storms of spring with no fear that summer might no follow. It will come regardless. But it comes only to those who live as though eternity stretches before them, carefree, silent and endless. I learn it daily, learn it with many pains, for which I am grateful: Patience is all.
புத்தகம் முழுவதையுமே மேற்கோள் காட்டலாம். பல்வேறு இடங்களில் "அட சரிதான " என்ற எண்ணம் என்னுள் ஏற்பட்டது.
love your solitude and try to sing out with the pain it causes you. For those who are near you are far away... and this shows that the space around you is beginning to grow vast.... be happy about your growth, in which of course you can't take anyone with you, and be gentle with those who stay behind; be confident and calm in front of them and don't torment them with your doubts and don't frighten them with your faith or joy, which they wouldn't be able to comprehend. Seek out some simple and true feeling of what you have in common with them, which doesn't necessarily have to alter when you yourself change again and again; when you see them, love life in a form that is not your own and be indulgent toward those who are growing old, who are afraid of the aloneness that you trust.. and don't expect any understanding; but believe in a love that is being stored up for you like an inheritance, and have faith that in this love there is a strength and a blessing so large that you can travel as far as you wish without having to step outside it.
கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

கடிதங்களைப் படிக்க  

Thursday, February 14, 2019

காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்


 கட்டாயங்களை விருப்பங்களாகக் காட்டிக்கொள்வது குடும்பத்தின் வலிமைகளில் ஒன்று.
இந்தப் புத்தகத்தைப் பற்றி பலபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். சென்ற வாரம் நூலகத்தில் இந்த புத்தகத்தைப் பார்த்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். ஒரே நாளில் வாசித்து முடித்த சிறிய புத்தகம் . பல முறை கேள்விப்பட்ட கதைதான். ஆனால் அதை வாசிக்கும்போது தற்போதைய குடும்ப கட்டமைப்புகளைப் பற்றி கேள்விகள் எழுந்தது. இது ஒரு கன்னட புத்தகம் . தமிழில் கே நல்லதம்பி மொழிப்பெயர்த்துள்ளார்.

ஒரு கீழ் நடுத்தரக் குடும்பம் அதில்  வேலையில்லாத அப்பா ,வீடே எல்லாமென்று எண்ணும் அம்மா  கணவனை விட்டுத்  தனியாக வாழும் தங்கை மாலதி  ,குடும்பத்தின் பொருளாதார மய்யம் சித்தப்பா மற்றும் கதைச்சொல்லி .இந்த குடும்பம் மேல்தட்டுக்கு முன்னேறும் பொது அவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதுதான் கதை. கதைச்சொல்லி திருமணம் முடிக்கிறான் அவனின் மனைவி அனிதா. அனிதா அக்குடும்பத்தில் புதிதாக வந்தவள் அவள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறாள். புதிய வசதியும்  பொருட்களும் அவர்களை புது உறவுகளை ஏற்க மறுக்கிறது. இது ஒரு புரியாத புதிர் அதுவரை மகிழ்ச்சியாக இருந்த குடும்பம் மற்றொருவர் வந்தவுடன் அதை இழக்கிறது.
பணம் நம்மை ஆட்டிவைக்கும் என்ற பேச்சு  பொய்யல்ல.அதற்கும் ஒரு இயல்பு,பலம் இருக்குமோ என்னமோ.குறைவாக இருக்கும்போது நம் கட்டுப்பாட்டிலிருந்து,அதிகமானதும் அதன் வலு பெருகி நம்மையே ஆட்டிப் படைக்கும் என்று தோன்றுகிறது.
கதைச்சொல்லி படிக்கும் போது எப்படியாவது நல்ல வேலையில் சேரவேண்டுமென்று நினைத்ததும் தான் பணக்காரனாக பிறகு அது அப்படியே தலைகீழாக மாறியதும்  தற்கால புது பணக்காரர்களை கண்முன் காட்டுகிறது. மாதம் மாதம் சம்பளம் வரும்போது தான் ஏன் வேலைக்கு செல்லவேணுடுமென்று கூட நினைக்கிறான். அம்மா மருமகளிடம் சமையலை விடுவதாக இல்லை. மகளும் தன் பங்கிற்கு தனது அதிகாரத்தை விடுவதாக இல்லை. அவர்கள் மூவருக்கும் அப்பா வேறுயாருக்காவது சொத்தை எழுதிவிடுவார் என்ற பயம் .மருமகள் அனைவரையும் கேள்வி கேட்கிறாள். அவளால் அக்குடும்பத்தின் சமநிலை தடுமாறுவதாக கதைசொல்லி நினைக்கிறான். 

சித்தப்பா ஒரு புரியாத புதிர் யாரும் அவரைக் கேள்வி கேட்பதில்லை. அவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதே  அக்குடும்பத்தின் ஒரே நோக்கம் .அதற்க்காக எதுவும் செய்ய அவர்கள் தயார்.அவரைத் தேடி பெண் ஒருத்தி வருகிறாள் அங்கு பெரும் குழப்பம் நிலவுகிறது ஆனால் சித்தப்பாவோ எதுவும் பேசாமல் தன் அறையிலேயே இருக்கிறார். அவர் தொழிலின் பொருட்டு வன்முறையையும் பயன்படுத்தினார். அவர் அதைப் பற்றி பேசும்போது யாரும் எதுவும் சொல்லவில்லை. அப்பா ஒருவரே சிறிது தயங்கினார்.  அப்பா அவரை யாரும் மதிப்பதில்லை அவர் அவரின் சொந்த ஜோக்குகளுக்கு சிரித்து கொள்கிறார்.

அப்பா ஏன் யாரிடமும் தைரியமாக பேசுவதில்லை ? சித்தப்பா ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை? மாலதி ஏன் கணவன் வீட்டிலிருந்தே அதிகாரம் செய்யாமல் மீண்டும் இவ்வீட்டிற்கே வந்தாள் ? கதைச்சொல்லி ஏன் தனது மனைவியிடம் அனைத்தையும் மறைக்கிறான் ? இப்படி பல கேள்விகள் எழுகிறது .அவர்கள் ஒருவரையொருவர் அன்பு செய்கிறார்களா என்பதே ஒரு பெரிய கேள்விக்குறிதான்.  குடும்பம் என்ற ஒன்றிற்காக சேர்ந்து வாழ்கிறார்கள் வேறுவழியின்றி . அறம் இல்லாத வாழ்வு. இறுதியில் அனிதா வீடு திரும்பினாளா இல்லையா என்று சொல்லாமலேயே கதை முடிகிறது.

இக்கதையில் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம் அந்த காபி கடையும் அங்கு வேலை செய்யும் வின்செண்டும். காலையிலும் மாலையிலும் கதைச்சொல்லி அங்குதான் தன் நேரத்தை செலவிடுகிறான். அவ்வப்போது வின்சென்ட் ஒரு வரி செய்திகளையும் பழமொழிகளையும் அவனிடம் சொல்கிறான். கதைச்சொல்லிக்கோ அந்த ஒரு வரிகள் பல சிந்தனைகளுக்கு இட்டுச்செல்கிறது. கதை தொடங்குவதும் முடிவதும் அங்குதான். காச்சர் கோச்சர் என்றால் விடுவிக்கமுடியாத சிக்கல் எனலாம்.

இப்புத்தகம் 103 பக்கங்கள்தான் ஆனால் அது உருவாக்கிய குடும்ப சித்திரம் நம் கண்முன்னே நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.வறுமை தந்த மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வணிக செல்வம் தரவில்லை. மனிதர்கள் ஏன் செல்வம் வந்தவுடன் அப்படி மாறுகிறார்கள் என்பதுவும் ஒரு கேள்விக்குறிதான் .
கே நல்லதம்பி மிக அருமையாக மொழிப்பெயர்த்துள்ளார்.சரளமான மொழி நடை.
அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். 

Wednesday, February 13, 2019

ரோமா


சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்தப் படம் இதுதான். படம் பார்த்து மூன்று வாரங்களுக்கு மேல் இந்த படத்தின் பல காட்சிகள் என்னுள் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த கதை  இயக்குநர் அலோன்ஸோ cuaron-னின்  வாழ்க்கையைத் தழுவியது . இவர் ஆஸ்கார் விருது பெற்றவர்.

கதை 1970-ல் மெக்ஸிகோவில் நடக்கிறது. அது மெக்ஸிகோவின் இருண்ட காலம். மக்களிடையே ஒரு விதமான பதட்டம் எப்போது என்ன நடக்குமென்று. மாணவர்களின் போராட்டத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிக்கொண்டிருந்தது. அந்த வருடத்தின் கால்பந்து உலகக்கோப்பையின் போஸ்டர்கள் அறையில் தெரிகின்றது. இந்த படத்தின் பெயர் ரோமா என்பது முந்தை காலனிய ரோமா மாவட்டத்தைக் குறிக்கிறது.

கிளியோ (Cleo) மிஸ்ட்டக்கோ இனத்தை சேர்ந்தவள். அவள் ஒரு மத்திய மேல்தட்டு குடும்பத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறாள். அவள் வேலை துணிதுவைப்பதும் நாய்களை பார்த்துக்கொள்வதும் . அந்த குடும்பத்து குழந்தைகள் அவள் மேல் பாசமாக இருக்கிறார்கள் அவளும் தான்.எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தபோது அவள் கர்ப்பமாகிறாள். அவளது காதலனை தேடுகிறாள் ஆனால் அவனோ போராட்டத்தில் பங்கேற்கிறான். கிளியோ தனித்து விடப்படுகிறாள் ஆனால் அந்த குடும்பம் அவளை நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறது.

மற்றொரு பக்கம் அக்குடும்பத்தலைவி சோபியாவின்  மனப் போராட்டம் - அவளது கணவன் அன்டோனியோ கியூபெக் செல்வதாகச் சொல்லி அங்கே மெக்ஸிக்கோவிலேயே மற்றொரு பெண்ணுடன் வாழ்கிறான். கிளியோ மற்றும் சோபியாவின் வாழ்க்கை ஒரே நேரத்தில் வேறு விதமாக மாறுகிறது.அவர்களுக்கிடையே நடக்கும் அந்த ஒரு வரி வசனம் மிகவும் முக்கியமானது. படத்தில் கிளியோ மிகச்  சில இடங்களில்தான் பேசுகிறாள். ஏன் அப்படி?  ஏன் அவளுடைய குடும்பத்தைப் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை? இப்படி பல கேள்விகளுக்கு விடை இல்லை.

மேலே கூறியது போல இது இயக்குநரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது . கிளியோ யாருமல்ல இயக்குநரின் செவிலித்தாய். அவரின் உண்மையான பெயர் லிபோரியா ரோட்ரிகெஸ் (Liboria Rodriguez). அலோன்ஸோ ஒன்பது மாதக் குழந்தையாக  இருந்தபோது லிபோரியா அங்கு வேலைக்கு வருகிறாள். படப்பிடிப்பைப் பார்க்க வந்த லிபோரியா பல தடவை அழுத்ததாக அலோன்ஸோ ஒரு பேட்டியில் கூறியுள்ளார் . படத்தின் கதையை நடிகர்களிடம் கூட அலோன்ஸோ சொல்லவில்லை அன்றன்றைக்குத் தேவையான வசனங்களை மட்டும்தான் சொன்னாராம்.

படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் அதிலும் குறிப்பாக கிளியோவாக நடித்த புதுமுக நடிகை Yalitza Aparicio. அந்த முகத்தை மறக்கவே முடியாது அதும் அந்த கடலில் குழந்தையைத்  தேடும்போது .கதையில் பெரிதாக ஏதுமில்லை. ஆனால் அதை எடுத்த விதம்தான் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. படம் முழுவதும் கறுப்பு வெள்ளையில். அதுவே ஒரு mesmerising effect-ஐ கொடுக்கிறது. ஒவ்வொரு frame-லும் அனைத்தும் (மனிதர்களும் பொருட்களும்) துல்லியமாக உள்ளது .Long takes லாம் பலதடவை பயிற்சி செய்து எடுத்துள்ளனர்.ஒளிப்பதிவும் இயக்கமுமு அலோன்ஸோ தான்.படம் மெதுவாக நகர்ந்தாலும் அழுத்தம் குறையாமல் இறுதிவரை செல்கிறது.

அவசியம் பார்க்க வேண்டிய படம்.