Wednesday, October 25, 2017

சீன அரசின் சமூக நன்மதிப்பு திட்டம் ( China's Social Credit System)

எண்ணிப்பார்க்கவே பயமாக இருக்கிறது - நம்முடைய அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு அதற்கு மதிப்பெண் வழங்கி அம்மதிப்பெண்ணிற்கேற்றார் போல் ஒருவனுக்கு அரசின் சேவை அமையுமென்பது . இதுதான் சீனாவில் 2020-ல் நடக்கவுள்ளது. சீன அரசு மக்களின் நம்பகத்தன்மை மற்றும் நேர்மை இத்திட்டத்தின் மூலம் மேம்படும் என்கிறது.  இத்திட்டத்தின் கொள்கை "It will forge a public opinion environment where keeping trust is glorious. It will strengthen sincerity in government affairs, commercial sincerity, social sincerity and the construction of judicial credibility." -இவ்வாறு கூறுகிறது. ஆனால் இத்திட்டம் இதற்கு மட்டும்தான் பயன்படும் என்பது மிக பெரிய கேள்வி.

சிந்தித்து பார்த்தல் ஒருவன் எந்த புத்தகம் படிப்பது ,எந்த வீடியோ பார்ப்பது ,கடையில் என்ன வாங்குவது இப்படி அனைத்தையும் இத்திட்டம் தீர்மானிக்கும் . உண்மையில் அமேசான் ,கூகுள் மற்றும் பேஸ்புக் ஏற்கனேவே இதை செய்கின்றன ஆனால் அதை ஒரு அரசு ஒரு குடிமகனை மதிப்பிட பயன்படுத்துவதென்பது எண்ணி பார்க்கவே முடியாதது. சீன அரசு இத்திட்டத்தை(Pilot ) செயல்படுத்த எட்டு கம்பெனிகளுக்கு லைசென்ஸ் கொடுத்துள்ளது . இந்த எட்டு கம்பெனிகள் மிகப்பெரிய அளவில் தகவல்களை சேகரிக்க ஆரம்பித்துவிட்டன.

  • China Rapid Finance (Tencent , Wechat)
  • Sesame Credit ( Ant Financial Services Group, Alibaba, AliPay)
  • Didi Chuxing - raid hailing company like Uber
  • Baihe - China's largest Online matchmaking service
மேலே கூறியுள்ள கம்பெனிகளின் பயன்பாடு  கிட்டத்தட்ட ஒருவனின்  தினசரி  வாழ்க்கையில் இன்றியமையாதது. அதில் ஒன்று Sesame Credit  அது ஒரு அலிபாபாவின் கம்பெனி. Sesame Credit - எப்படி ஒருவனை மதிப்பிடப் போகிறது?  அலிபாபா  என்ன algorithm பயன்படுத்தப்போகிறது என்பதை இதுவரை சொல்லவில்லை ஆனால் அது ஐந்து காரணிகளை  பயன்படுத்தப்போகிறது. அதாவது 

  1. Credit History - ஒருவன் சரியாக சரியான நேரத்தில் அனைத்து பில்களையும் (bills ( Electricity .Phone  etc ) ) கட்டுகிறானா ? 
  2. Fulfilment Capacity - ஒருவன் சரியாக ஒப்பந்தங்களை கடைபிடிக்க்கிறானா ? (fulfil contract obligation ) 
  3. Personal Characteristics - ஒருவரின் தனிப்பட்ட தகவல்கள் சரியானதா ? மொபைல் எண் , விலாசம்  மற்றும் பல . 
  4. Behaviour and Preference - ஒருவன் என்ன பொருள் வாங்குகிறான் ? எவ்வளவு நேரம் இணையத்தில் செலவழிகிறான் மற்றும் பல.
  5. Interpersonal Relationship - யார் யார்  இணைய நண்பர்கள் . அவர்கள் எவ்வாறு ஒருவனை மதிப்பீடுகிறார்கள். 

Sesame  Credit 350 முதல் 950 வரை மதிப்பெண்கள் கொடுக்க உள்ளது.  நிறைய மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு சலுகைகள் பல உள்ளன. இத்திட்டம் 2020-ல் தான் வரவிருக்கிறது ஆனால் இப்போதே தன்னார்வலர்களுக்கு செயல்பட தொடங்கிவிட்டது. இப்போதே அதிக மதிப்பெண் பெறுபவர்கள் அதை ஒரு தனி அந்தஸ்தாக பார்க்க தொடங்கிவிட்டனர் . இத்திட்டத்தினால் யாரும் அரசை எதிர்த்து சமூக வலைத்தளங்களில் எழுத முடியுமா என்பது பெரிய கேள்விக்குறி. குறைய மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வங்கி கடன் , வேலைவாய்ப்பு மற்றும் பல சலுகைகள் கிடைப்பது கடினமாகும்.

செப்டெம்பர் 25, 2016-ல் வெளியான கொள்கை டாக்குமென்ட்டான  "Warning and Punishment Mechanisms for Persons Subject to Enforcement for Trust-Breaking" -ல் ஒரு முக்கியமான விசயம் ""If trust is broken in one place, restrictions are imposed everywhere".  அரசே  "Allow the trustworthy to roam everywhere under heaven while making it hard for the discredited to take a single step" - இதை சொல்கிறது. இவை இரண்டும்  மிகவும் அபாயகரமானது.  இந்த மாதிரி திட்டம் மேற்கத்திய நாடுகளில் பல  ஆண்டுகளுக்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டுவிட்டது ஆனால் அது இந்த அளவுக்கு ஆழமாக இல்லை. 

இந்த திட்டம் உண்மையிலேயே மக்களின் நேர்மையையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்துமா ? அல்லது மக்கள் ஒரு போலியான வாழ்க்கைக்கு தள்ளப் படுவார்களா ? . எனக்கென்னவோ இராண்டாவது தான் நடக்கும் என்று தோன்றுகிறது.  

Wednesday, October 18, 2017

19வது சீன தேசிய கம்யூனிச கட்சியின் கூட்டம்


உலக வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் சீனா இன்று இருக்கிறது. சீனாவின் இதே  வளர்ச்சி  தொடருமா? உலக அரசியலில் சீனாவின் பங்கு அடுத்த ஐந்து ஆண்டிற்கு எப்படிஇருக்கும் ? சீ  ஜின்பிங் (Xi Jinping) அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பாரா ? என்ற பல முக்கியமான விடைகளுக்கு நாளை  (18-10-2017) கூடும்  இந்த கூட்டம் ஓரளவு பதில் சொல்லும் .

இந்த கூட்டம் ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் கூட்டம். நம்ம தேர்தல் போல . இந்த கூட்டத்தில்தான்  புதிய தலைவர் , பொலிட்பீரோ  (Politburo Standing Committee (PSC)) மற்றும்  மத்திய இராணுவ கமிஷன்  உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவர். இந்த முறை பெரும் சிக்கலுக்கிடையே இந்த கூட்டம் கூடுகிறது. சீ  தலைவரானவுடன் செய்த முதல் காரியம் ஊழலுக்கு எதிரான பெரும் போராட்டம். நூறுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர் .விசாரணையில் உண்மையிருந்தாலும் சீ தனக்கு போட்டி எனக் கருதும் அனைத்து தலைவர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறார் என்று மேற்கத்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சீ தலைவரான பிறகு  சீன இராணுவத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டுவந்தார் . குறிப்பாக அனைத்து இராணுவத்துறையையும் ஒரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார் . அரசின் மிக முக்கிய பணியாக வறுமை ஒழிப்பை கொண்டு வந்து அதை ஓரளவு நடத்தியும் காட்டினார். மீண்டும் 'சீனர்களின் கனவு' (Chinese Dream)  என்ற  கொள்கையின்  கீழ் மேம்ப்பட்ட வாழ்வு என்பதை சீனர்களுக்கு எடுத்துரைத்தார் . வெளியுறவு கொள்கையில் வெகு அழுத்தமாக அனைத்து நாடுகளுடன் சீனா சீயின் கீழ் செயல்பட துவங்கியுள்ளது . தனது "ஒன்பது கோடு " எல்லைக்குள் எந்த ஒரு நாட்டையும் அனுமதிக்காமல் அந்த எல்லையை இராணுவ வலிமை கொண்டு பாதுகாக்கிறது.

சீ  அனைத்து முக்கியமான பொறுப்புக்களையும் தன் கீழ் வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் அடுத்த ஐந்து ஆண்டிற்கு பிறகு பதவியில் தொடர்வாரா? தொடர்வார் என்றுதான் எனக்குப்படுகிறது  . பொதுவாக சீன அதிபர்கள் பத்து வருடங்களுக்கு மேல் பதிவியில் இருக்க மாட்டார்கள். ஆனால் ஒருவர் கம்யூனிச கட்சியின் தலைவராக பத்து வருடங்களுக்கு மேல் பதவியில் இருக்கலாம் . சீ  தனது கனவான "பட்டு பாதை" நிறைவேறாமல் பதவியை விடமாட்டார்.   மாவோ மற்றும் டெங் ஜியோபிங்கிற்கு பிறகு சீயின் எழுத்துக்களும் பேச்சுக்களும் கம்யூனிச கட்சியின் அரசியலமைப்பில் இணைத்துக்கொள்ளபட இருக்கிறது .

வலுவான சீனா இவ்வுலகிற்கு அவசியம் ஆனால் அது எவ்வாறு இப்போது இருக்கும் உலக அமைப்பை மாற்றி அமைக்கும் என்பதே பெரிய கேள்வி. அமெரிக்காவும்  சீனாவும் "Thucydides's Trap"-ஐ தவிர்க்குமா? வியட்நாமை சீனா தன்னுடன் இணைத்து கொள்ளுமா? தெற்கு சீன கடல் பகுதியில் அமைதி நிலவுமா?  மற்றும் பல முக்கியமான கேள்விகளுக்கான பதில் கிடைக்காவிட்டாலும் சீனா அடுத்த ஐந்து வருடத்திற்கு எவ்வாறு இந்த கேள்விகளை எதிர்கொள்ளும் என்று இந்த கூட்டத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம் .

Wednesday, October 11, 2017

மனித தோற்றம் (Origin) - டான் பிரௌன் (Dan Brown)


It is in hearing the voice of the Devil that we can better appreciate the voice of God
நான் டான் பிரௌனின் ராபர்ட் லாங்டன் நாவல்களின் பெரிய ரசிகன்.  அதற்கு முக்கிய காரணம்  டான் பிரௌன்  எடுத்துக்கொள்ளும் கதைக்களம் -கிறிஸ்தவம் மற்றும்  புது புது ரகசிய அமைப்புகள். அனைத்து  ராபர்ட் லாங்டன் நாவல்களுமே ஒரே கதை வடிவத்தைக் (same template)கொண்டதே.  ஒரு ரகசியம் ,ஒரு கட்டிடம் (கிறிஸ்தவ ஆலயம் அல்லது அருங்கட்சியகம் அல்லது இரண்டும் ), வார்த்தை விளையாட்டு ,ஒரு அடியாள் மற்றும் ராபர்ட் லாங்டன் துணைக்கு ஒரு அழகான பெண்  இவை அனைத்தும் இப்புத்தகத்தில் உள்ளது.

1.நாம் எங்கிருந்து வந்தோம் ?
2.நாம் எங்கே செல்கிறோம் ?

இந்த கதை இந்த  இரண்டு முக்கியமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முயன்றுள்ளது.   ராபர்ட் லாங்டன் தனது நண்பனின் (எட்மண்ட் கிறிஸ்ச் அழைப்பை ஏற்று ஸ்பெயின் வருகிறான். எட்மண்ட் ஒரு முக்கியமான அறிவிப்பு  வெளியிட இருப்பதாகவும் அது மிக பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துமென்றும் அதற்கு லங்கிடனின் ஆலோசனை தேவையென்றும் கூறுகின்றான்.  அறிவிப்பை வெளியிடுவதற்கு சற்று முன் எட்மண்ட் கிறிஸ்ச் கொல்லப்படுகிறான் . யார் அவனைக் கொன்றது ?அந்த அறிவிப்பு வெளியானதா ?   இது தான் கதை.
We comfort our physical bodies in hopes our souls will follow.
இந்த கதையில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரம் வின்ஸ்டன் -இது ஒரு  செயற்கை கம்ப்யூட்டர் உதவியாளர் (Artificial Intelligence) . தற்போது வின்ஸ்டன் மாதரி எனக்கு தெரிந்து எந்த மென்பொருளும் ரோபோட்டும்  இல்லை ஆனால் விரைவில் உருவாக்கப்படும். என்னை கவர்ந்த மற்றொரு விசயம் கதை நடக்கும் இடமான பார்சிலோனா .  பார்சிலோனா கால்பந்து அணியின் பெரிய ரசிகன் நான் .அங்குள்ள புகழ்பெற்ற இடங்கள் அனைத்தும் எனக்கு தெரியும் அதனால் கதையை காட்சியாக காண்பதில் எந்த சிக்கலும் இல்லை.  காசா மிலா(Casa Mila), சக்ராட பெமிலியா (Sagrada Familia) , Guggenheim  museum , valley of the fallen மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் வருகிறது.
Remember death. Even for those who wield great power, life is brief. There is only one way to triumph over death, and that is by making our lives masterpieces. We must seize every opportunity to show kindness and to love fully.
இந்த கதையில் ராபர்ட் லாங்டனின் தனித்திறன் வெளிப்படுவது  மிக குறைவே. ஒரே ஒரு இடத்தில் நாம் vintage  ராபர்ட்  லாங்டனை பார்க்கலாம் அது அவர் 47 எழுத்துக்களுள்ள பாஸ்வேடை (password) கண்டுபிடிக்கும் போது. அவருக்கு உதவியாக வரும் வருங்கால ஸ்பெயினின் ராணி அம்ப்ரா விடால் (Ambra Vidal ) மூலம் ஸ்பெயினின் கத்தோலிக்க வரலாற்றையும் மாறும்  இளம் தலைமுறையையும் ஆசிரியர்  சிறப்பாக விளக்குகிறார். 
The most self-righteous in life become the most fearful in death.
மற்ற   ராபர்ட் லாங்டன் நாவல்களைவிட இது சற்று மாறுபட்டது - இதில் சஸ்பென்ஸ் மற்றும் புதிர்கள் குறைவு மாறாக அறிவுசார் விசயங்களை பேசுகிறார் ஆனால் மத எதிர்ப்பில் எந்த மாற்றமும் இல்லை சொல்லப்போனால்  மத எதிர்ப்பு அதிகமாகவே இந்த புத்தகத்தில் இருக்கிறது.  எழுத்து நடையில் எந்த சிறப்பும் இல்லை ஆனால் வாசிக்கலாம்.