Tuesday, November 12, 2019

ரன்னிங் டைரி -30

12-11-2019 18:21
அலுவகளத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்தவுடன் மனதில் தோன்றியது அயோத்தி தீர்ப்புதான் . தீர்ப்பை முழுவதுமாக இன்னும் படிக்கவில்லை.படிக்க வேண்டும்."A People's Constitution - Rohit De" என்ற புத்தகம்தான்  ஞாபகத்தில் வந்தது. இன்னும் முழுவதும் படிக்கவில்லை. சிக்னலில் நின்றிருக்கும் போது ஒரு பெண் சிவப்பு விளக்கு வந்த பிறகு வேகமாக ஓடிக் கடந்தார். நான் திருத்திரு என்று பார்த்துக் கொண்டிருந்தேன். சிக்னல் மாறிய பிறகு நான் அவரைக் கடந்து சென்றேன். அவர் என்னைப் பார்த்து கைகட்டிச் சிரித்தார். எதற்கு சிரித்தார் என்றே தெரியவில்லை. டிராபிக் விதியை மதித்ததற்கா என்று எண்ணிக்கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: