Thursday, November 28, 2019

ரன்னிங் டைரி -41

27-11-2019 18:22
அலுவகத்திலிருந்து வீடுவரை

நேற்றுபோல் இன்றும் எந்த வழியில் ஓடுவது என்ற கேள்வியுடன் ஓட  ஆரம்பித்தேன்.ஊர் ஞாபகம் வந்தது. நல்ல மழையாம். அக்காமார்கள் இருக்கும் தெரு மிதந்து கொண்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். எந்த நோயும் பரவக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன். நேராக நூலகத்தில் நுழைந்தேன் இரண்டு நிமிடங்கள் அங்கு செலவழித்தேன். பிறகு மீண்டும் ஓட ஆரம்பித்தேன் .திடீரென்று ஒரு எண்ணம் வந்தது ஏன் புத்தகக்கடைக்கு சென்று "Mekong Review " வாங்கக்கூடாது .ஒடனே திரும்பி  112 கத்தோங்  ஷாப்பிங் மாலிற்கு ஓடினேன். அங்கு ஐந்து நிமிடம் அந்த புத்தகத்தைத் தேடினேன் ஆனால் அது கிடைக்கவில்லை.மீண்டும் ஓட ஆரம்பித்தேன். வெறெங்கு அந்த புத்தகம் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: