Tuesday, October 1, 2019

The Empire And The Five Kings - Bernard Henri Levy


We are in a situation when our leader of the free world, Donald Trump, plays muscles, but the real strength is on the side, alas alas alas alas, of the five kings: Chinese, Arabs, Iranians, Ottomans (Turks) and Russians.
இந்த புத்தகம் எப்படி அமெரிக்கா தனது அதிகாரத்தை மெதுவாக இழந்து வருகிறது என்றும் இந்த சூழ்நிலையை மற்ற நாடுகள் அதிலும் குறிப்பாக சீனா, ரஷ்யா,ஈரான் ,துருக்கி மற்றும் அரபு நாடுகள் உபயோகப் படுத்திக்கொள்கிறார்கள் என்பதைப்  பற்றி விவரிக்கிறது. இப்புத்தகம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதி அமெரிக்கா எவ்வாறு வல்லரசானது என்றும் இரண்டாவது அது எப்படி பலவீனமாகி வருகிறதென்றும் பெர்னார்ட் விவரிக்கிறார்.
“A time is coming that is no longer the time that emerged from the death of communism, from the triumph of liberal values, and from the pronounced “end of history,” an ending to which I never subscribed but that was beginning to take on a truly sinister face.” 
எனக்கு இந்த எழுத்தாளரை இதற்கு முன் தெரியாது. யார் இவர்? கூகிளில் தேடியபோது இவர் ஒரு பன்முகம் கொண்டவர் என்பது தெரியவந்தது. Philosopher, டாக்குமெண்டரி இயக்குநர் ,activist மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர். இந்த புத்தகம் குர்து(kurd)  இன படுகொலையைத் தொடர்ந்து எழுதப்பட்டது. இவர் அந்த போராட்டத்தில் நேரடியாக பங்குபெற்றவர்.  பல அரபு நாடுகள் இவரைத் தடை செய்துள்ளனர்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஐரோப்பா கண்டமே புத்துயிர் பேர போராடிய சூழ்நிலையில் எந்த நாடு அதைக் காப்பாற்ற போகிறது என்பது பெரும் குழப்பமாக இருந்தது. பிரான்ஸ் ,ரஷ்யா மற்றும் இங்கிலாந்து தலைமை ஏற்க முடியவில்லை அதற்கு பெர்னார்ட் கூறும் காரணம் அவற்றின் வரலாறு. இந்த தலைமைப் பொறுப்பு அமெரிக்காவிடம் சென்றது. அதை அவர்கள் தேடிச் செல்லவில்லை("involuntary Romans "). ஆனால் பொறுப்பு வந்தவுடன் அதை இறுக்கிப் பிடித்து தங்களை முன்னிறுத்தி உலகையே ஆள ஆரம்பித்தனர் (Pax  Americana) . அமெரிக்கர்கள்  இந்த பொறுப்பு தங்களின் உரிமை (American Exceptionalism) என்று எண்ணினர் அது மட்டுமல்லாமல் அதற்கு அவர்கள் வரலாற்றைக்  காரணமாக எடுத்துக்கொண்டனர். அமெரிக்கா பல ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகளை தன் காலனி மாதிரி வைத்திருந்தது என்றால் மிகையாகாது.இருந்தாலும் தங்களின் "openness" மற்றும் "transparency" மூலம் ஒரு ஜனநாயக ஆட்சியைக் கொடுக்க முடியம் என்ற நம்பிக்கையை மற்ற நாடுகளிடம் விதைத்தனர். அடங்காத நாடுகளை இராணுவம் கொண்டு அடக்கினர். இப்படித்தான் அமெரிக்கா வல்லரசானது என்கிறார் பெர்னார்ட். சிரியாவில் ஒபாமா தலையீடாதது ,குர்திஸ்தானை டிரம்ப் கைவிட்டது இப்படி சில விஷயங்களால் அமெரிக்கா அதிகாரம் சரிந்து வருகிறது என்கிறார் பெர்னார்ட் . என்னை கேட்டல் ட்ரம்பின் தேர்தல் வெற்றியே சர்வதேச அளவில் அமெரிக்காவின் தோல்வி.

குர்து இன மக்களின் போராட்டத்தை எவ்வாறு அமெரிக்கா மற்றும் மேற்கூறிய மற்ற ஐந்து நாடுகள் எதிர்கொண்டனர் என்பதிலிருந்து அவர்களின் நோக்கம் என்ன என்பதை விவரிக்கிறார்.அல் கொய்தவிற்கு அனைத்து உதவிகளையும் சவுதி அரேபியா செய்தது என்று அவர்களே ஒத்துக்கொண்ட பின்னரும் அவர்களுடன் அமெரிக்கா நல்லுறவை நீடித்தது.துருக்கிக்கும் ,ரஷ்யாவிற்கும்  ஐரோப்பா நாடுகளுக்கும் பிரச்சன்னைதான். ஆனால் அமெரிக்க எதிர்ப்பு என்ற பேரில் துருக்கியும் ரஷ்யாவும் ஒன்று சேர்ந்தனர். ஈரான் புரட்சிக்கு பிறகு அமெரிக்காவை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. சீனா வேகமாக வளர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக அனைத்து துறைகளிலும் சவால்விடுகிறது.இந்த ஐந்து நாடுகளுக்குள் ஒரு ஒற்றுமை உண்டு. ஐந்துமே ஜனநாயகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் பிரதமர்களையும் ஜனாதிபதிகளையும் (autocratic) கொண்டுள்ளது. சீனா ஒரு கம்யூனிச நாடு ஆனால் சீ பிங்கை அந்த லிஸ்டில் சேர்க்கலாம் என்கிறார் பெர்னார்ட். இந்த ஐந்து நாடுகளையும் விவிலியத்தில் வரும் ஐந்து அரசர்களோடு (Joshua 10)ஒப்பிடுகிறார்.

மற்றொரு ஒற்றுமை இந்த ஐந்து நாடுகளுக்கும் உள்ளது. அது அவர்களின் வரலாறு. ஐந்துமே ஒரு காலத்தில் பலம்வாய்ந்த பேரரசாக இருந்தது. இந்த ஐந்து நாட்டு தலைவர்களும் பழம்பெருமை பேசுபவர்கள். மீண்டும் அந்த பழைய பெருமையை மீட்டெடுக்க வேண்டுமென்று மக்களிடம் சொல்பவர்கள். ஆனால் பெர்னார்ட் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை இன்றும் அமெரிக்காதான் வல்லரசு ஆனால் அது தனது அதிகாரத்தை மீட்டெடுக்கவில்லை(Western Civilization , liberty , Democracy ) என்றால் உலகமே மாறிவிடும் என்று கூறி இந்த புத்தகத்தை முடிக்கிறார் இடையில் ஏன் சமூக வலைத்தளங்கள் பற்றி எழுதினார் என்று தெரியவில்லை. May be, எனக்கு புரியாமல் இருக்கலாம்.

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

No comments: