Friday, November 27, 2020

ரன்னிங் டைரி - 148

27-11-2020 09:06

உபியிலிருந்து வீடுவரை 

மழை மேகம். மழை வரும் என்று நினைத்துதான் ஓட ஆரம்பித்தேன். ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது  ஈட்ஸ் எழுதிய  "The Second Coming" என்ற கவிதைதான். எனக்கு பிடித்த கவிதை.மனதுக்குள் சொல்லி பார்த்தேன். என்னால் முழுவதையும் நினைவில் இருந்து சொல்ல முடியவில்லை.இந்த கவிதை எழுதி நூறு வருடங்கள் ஆகிவிட்டன. இரண்டு தினங்களுக்கு முன் அதைப் பற்றி ஒரு கட்டுரை வாசித்தேன் அதன் பாதிப்பு. யூனுஸ் வளைவில் சிறுவன் ஒருவன் அர்ஜென்டினா கால்பந்து அணியின் சட்டை அணிந்து எதிரில் வந்து கொண்டிருந்தான். அதில் "Messi " என்று எழுதியிருந்தது. பல தடவை இப்படி சட்டை அணிந்து ஓடுபவர்களை பார்த்திருக்கிறேன் ஆனால் இன்று அந்த சிறுவனை பார்த்தவுடன் மாரோடனா தான் எண்ணத்தில் தோன்றினார்.நான் அவர் விளையாடியதை யூடூபில் தான் பார்த்திருகிறேன். அவரைப் பற்றி பல புத்தகங்களில் படித்திருக்கிறேன் .அவருக்கு இரண்டு பக்கங்கள் உள்ளது .ஒன்று அற்புதமான கால்பந்தாட்டக்காரர். பந்திற்கும் அவருக்கும் ஒரு அற்புதமான உறவு உண்டு. அவர் சொல்வதையெல்லாம் அது கேட்டது. அது  சொல்வதையெல்லாம் அவர் கேட்டார். தனது அணிக்காக அனைத்தையும் கொடுத்தவர். களத்தில் அவரே எல்லாம். மற்றொன்று களத்திற்கு வெளிய ஆடிய மாரோடனா. அரசியல் போதை மருந்து மற்றும் பல விசயசங்களில் தன்னை ஈடுபத்தியவர். அவரைப் பற்றி சிந்தித்துக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: