Friday, November 13, 2020

ரன்னிங் டைரி - 139

13-11-2020 09:10

உபியிலிருந்து தஞ்சோங் காத்தோங் ரோடு வரை 

மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன்.கடுமையான வெய்யில். ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது  இந்திய அரசு  அனைவரும் ஆராய்ச்சி கட்டுரைகளை இலவசமாக படித்துக் கொள்ள ஏதுவாக இந்தியா முழுவதும் ஒரே சந்தா என்ற முறையை செயல் படுத்த போதக முடிவு செய்திருப்பதை பற்றித்தான். எனக்கு இந்த மாதிரி கட்டுரைகளை படிப்பது மிகவும் பபிடிக்கும்.  அனைத்து துறைகள் பற்றியும் வாசிப்பேன். இந்த முடிவில் நல்லது கேட்டதென்று இரண்டுமே இருக்கிறது. எனக்கு இதில் நன்மையே அதிகம்.யூனுஸ் mrt வந்தபோது Toshio Saeki-ன் ஓவியங்கள் எண்ணத்தில் தோன்றின. என்ன ஒரு தனித்துவம். யோசிக்க முடியாத விசயங்களை மிக அழகாகவும் provocative - ஆகவும் வரைந்திருக்கிறார். எனக்கு ஜப்பான் ஓவியர்கள் மீது ஒருவிதமான ஈர்ப்பு உண்டு. அவரின் ஓவியங்களை எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: