Monday, November 9, 2020

ரன்னிங் டைரி - 136

 09-11-2020 08:40

தஞ்சோங் காத்தோங் ரோடு 

மழை மேகம். ஓட ஆரம்பித்தவுடன் காதில் எஸ்.பி.பி இளையநிலா பொழிகிறது என்று ஆரம்பித்தார். யாராவது இளையராஜா எஸ்.பி.பி கங்கை அமரன் அவர்களின் நட்பை திரைப்படமாக எடுக்க மாட்டார்களா என்று மனதில் தோன்றியது. மற்றொரு பாக்கம் எடுக்காமல் இருப்பதே நல்லது என்றும் தோன்றியது.திடீரென்று கடைக்கு சென்று வாங்க வேண்டிய பொருட்கள் பற்றிய எண்ணம் மனதில் தோன்றியது. இந்த கொரோனா நாட்களில் வீட்டுச் செலவு மிகவும் கூடி விட்டது. வீணாக எதுவும் வாங்குவதாக தெரியவில்லை ஆனாலும் கூடிக் கொண்டே போகிறது. அப்படியே கொரோனா தடிப்பு மருந்தைப் பற்றி வாசித்த கட்டுரை எண்ணத்தில் வந்தது. எப்போதும் போல இந்த தடவையும் ஏழை எளிய மக்களுக்குத்தான் இறுதியில் கிடைக்கும். என்னத்த சொல்ல என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: