Saturday, November 14, 2020

ரன்னிங் டைரி - 140

 14-11-2020 07:05

வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை வரை - மீண்டும் வீடுவரை 

இன்று தீபாவளி சற்று தூரம் ஓடுவோம் என்று முடிவு செய்து ஓடினேன்.ஓடி சற்று நேரத்திலேயே  தமிழர் ஒருவர் குடித்துவிட்டு நடைபாதையில் படுத்திருந்தார். என்னத்த சொல்ல. அவரை பார்த்தவுடன் ஊரில் எப்படி தீபாவளி நாள் இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன்.பண்டாரி அய்யா மற்றும் பக்கத்து வீட்டிலிருந்து வரும் பலகாரங்களுடன் நாள் தொடங்கும். தீபாவளி அன்று ஊரில் இருந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டது. பட்டிமன்றம் புதுப்பாடல்கள் புதுப்படங்கள் அறிமுகம் மற்றும் ஸ்பெஷல் படங்கள் இப்படி பல நிகழ்ச்சிகள் பார்ப்பதற்கு போட்ட போட்டி நடக்கும். ஆனால் இன்றோ வீட்டில் முறுக்கு கூட இல்லை .நேற்று கடைக்கு சென்றபோது தீர்ந்து விட்டது என்றார். பலகாரம் இல்லாத தீபாவளி தீபாவளியா என்று எண்ணிக் கொண்டேன். வீட்டிற்கு திரும்பி ஓடிவரும்போதும் அவர் அங்கேயே கிடந்தார். அவரை எழுப்ப வேண்டும் என்று எண்ணம் வந்தது . நான் நின்று அவரை எழுப்பி அறைக்கு சென்று தூங்குங்கள் சென்று சொன்னேன். அவர் எழுந்து நின்றார். கை காட்டிவிட்டு வீட்டை அடைந்தேன்.


No comments: