Tuesday, November 3, 2020

ரன்னிங் டைரி - 125

 19-10-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு

மழை மேகம் மற்றும் குளிர்ந்த காற்று என்னை நீண்ட தூர ஓட்டத்திற்கு அழைத்து. இளையராஜா பாடல்களைப் போட்டு விட்டு ஓட ஆரம்பித்தேன். ஓடிய சற்று நேரத்தில் வாசித்துக் கொண்டிருக்கும் முக்கிய கதாப்பாத்திரம் எண்ணத்தில் வந்தார். அந்த பெரியவரைப்  போல் மனிதர்களைப் பார்ப்பது இந்த காலத்தில் அரிது. என்னால் எங்கள் ஊரிலிருந்த சில பெரியவர்களை மறக்க முடியாது. அனைவரும் என் சொந்தக்காரர்களே. ஒருவரை நாங்கள் ஜாண்டி ரோட்ஸ் என்று அழைப்போம். அவர்  எங்களை கம்பெடுத்து அடிக்க வருவார். நாங்கள் சிரித்துக் கொண்டே ஓடுவோம். மற்றொவர் எங்களிடம் நான்றாக பேசுவார் ஆனால் நாய்களைக் கண்டால் குடித்துக் கொண்டிருக்கும் பீடியை அதன் மேல் எரிவார். அவர்களை நினைத்துக் கொண்டே ஓடி வீட்டை அடைந்தேன்.

No comments: