Tuesday, November 3, 2020

ரன்னிங் டைரி - 124

 12-10-2020 08:35

தஞ்சோங் காத்தோங் ரோடு

ஓட ஆரம்பித்தவுடன் ஞாபகத்தில் வந்தது பீத்தோவனின் ஐந்தாவது சிம்பனிதான். நேற்று இரவு இருமுறை அதை கேட்டேன். என்னவொரு கோபம்! பல நேரங்களில் நான் இந்த இசைக் கோர்வையைக் கேட்டு பயந்திருக்கிறேன். ஆனால் ஓடும்போது எனக்கு பயம் வருவதில்லை மாறாக உற்சாகம் தான் வரும் . இன்றும் அப்படியே. சிம்பனி முடியும்வரை ஓடி வீடு திரும்பினேன்.


No comments: