Saturday, September 26, 2020

ரன்னிங் டைரி - 116

26-09-2020 05:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

கிழக்கு கடற்கரை பூங்கா செல்லலாம் என்று எண்ணி அந்த பக்கம் ஓட ஆரம்பித்தேன். எண்ணம் முழுவதும் SPB-யின் பாடல்களில் தான் இருந்தது. நேற்று இரவு அவரின் புகைப் படத்தைக் காட்டி "He is one of the greatest Singers of all time" என்றேன். அவர் இறந்த செய்தி கேட்டவுடன் என்னை அறியாமல் கண்ணீர் வந்தது. அதுவே அவரின் வெற்றி. நம்மில் ஒருவர் . நம்மோடு ஒருவர். நமக்குள் ஒருவர். அவரின் இறந்த உடலை என்னால் பார்க்க முடியவில்லை. நல்ல வேளை எங்கள் வீட்டில் எந்த இந்திய டிவி சேனல்கள் இல்லை. திரும்ப திரும்ப அவரை அப்படி பார்ப்பது கொடுமை. நான் கிழக்கு கடற்கரை பூங்காவிற்குள் செல்லவில்லை கடலை சற்று தூரத்திலிருந்தே பார்த்து விட்டு வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தேன். என் காதில் Dvork-ன் "New World Symphony" ஒலித்துக் கொண்டிருந்தது. எனக்கு என்னவோ இந்த சூழ்நிலைக்கு இந்த சிம்பொனி தான் சரி என்று பட்டது. அதைக் கேட்டுக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Rest In  Peace Sir ! 


No comments: