Sunday, September 13, 2020

ரன்னிங் டைரி - 110

13-09-2020 05:25

தஞ்சோங் காத்தோங் ரோடு

குளிர்ந்த காற்று.மழை வருமோ என்று எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன்.சில நிமிடங்களிலேயே ஒரு சீரான வேகத்தை அடைந்தேன். மிக உற்சாகத்துடன் ஓடினேன். ஞாயிறு காலை எப்போதுமே என்னையறியாமல் ஒரு உற்சாகம் ஒட்டிக் கொள்ளும்.இன்றும் அப்படியே. எதிரே  ஒரு வெளிநாட்டவர்நடந்து வந்தார். என்னைப் பார்த்து சிரித்தார். நானும் "hi" என்று சொன்னேன். இரண்டாம் உலகப் போர் ஞாபகத்தில் வந்தது. நேற்று ஒரு டாக்குமெண்ட்ரி பார்த்தேன். நான்கு மணி நேரம் ஓடியது. பல இடங்களில் கண்ணில் கண்ணீர் வந்தது.ஒரு மனிதன் எவ்வளவு மோசமாக இருக்கக் கூடும் என்பதற்கு ஹிட்லர் மற்றும் அவரின் சகாக்களே உதாரணம். மேலும் இப்போரைப் பற்றி படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன். எதிரே ஒரு முதிய ஜோடிகள் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் "hi" என்றார்கள் நானும் "hi" என்றேன். முக்கில் திரும்பும் போது பாரதியார் எண்ணத்தில் தோன்றினார்.  அவரைப் பற்றி இன்னும் நிறைய வாசிக்க வேண்டும். அதற்கென்றே ஒரு புத்தகப் பட்டியலை தயார் செய்திருந்தேன்.அடுத்த தடவை இந்தியா செல்லும் போது வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.மெயின் ரோட்டிற்கு வந்தபோது இன்று மார்க்கெட்டில் என்ன வாங்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே மார்க்கெட்டை அடைந்தேன்.

பாரதியார் பற்றிய புத்தக பட்டியல் :

1.பாரதி விஜயம்: மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் (தொகுதி 1) -- பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம். (சந்தியா பதிப்பகம்)

2.பாரதி விஜயம்: மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் (தொகுதி 2) -- பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம்.(சந்தியா பதிப்பகம்)

3.பாரதியியல்: கவனம் பெறாத உண்மைகள் -- முனைவர் ய. மணிகண்டன்.(பாரதி புத்தகாலயம்)

4.மகாகவி பாரதியும் சங்க இலக்கியமும் -- முனைவர் ய. மணிகண்டன். (பாரதி புத்தகாலயம்)

5.பாரதியின் இறுதிக் காலம்: 'கோவில் யானை' சொல்லும் கதை -- ஆய்வும் பதிப்பும் முனைவர் ய. மணிகண்டன்.  (காலச்சுவடு)

6.பாரதியைப் பற்றி நண்பர்கள் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். (காலச்சுவடு)

7.பாரதியின் கடிதங்கள் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன். (காலச்சுவடு)

8.பாரதியார் கவிநயம் -- தொகுப்பாசிரியர் ரா.அ.பத்மநாபன்.

9. பாரதி -கவிஞனும் காப்புரிமையும்: பாரதி படைப்புகள் நாட்டுமையான வரலாறு -- அ.இரா.வேங்கடாசலபதி

10. பாரதி கருவூலம்: 'ஹிந்து' நாளிதழில் பாரதியின் எழுத்துகள் (முதல் முறையாக நூல் வடிவில்) -- அ.இரா.வேங்கடாசலபதி

11.பாரதி: 'விஜயா' கட்டுரைகள் (முதன்முறையாக நூல்வடிவில்) -- தொகுப்பு அ.இரா.வேங்கடாசலபதி

12.எழுக, நீ புலவன்! : பாரதி பற்றிய கட்டுரைகள் --தொகுப்பு அ.இரா.வேங்கடாசலபதி 

13. என் குருநாதர் பாரதியார் - ரா. கனகலிங்கம்

14.மகாகவி பாரதியார் - வ.ரா

15.பாரதி நினைவுகள்: ம.கோ.யதுகிரி அம்மாள் -- மீள் பதிப்பாசிரியர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் (சந்தியா பதிப்பகம்)

16.பாரதியார் சரித்திரம் -- செல்லம்மாள் பாரதி (பாரதி புத்தகாலயம்)

17. மகாகவி பாரதியார் கட்டுரைகள் -- தொகுப்பாசிரியர்கள் ஜெயகாந்தன் & சிற்பி பாலசுப்பிரமணியம் (சாகித்ய அகாதெமி )

18.பாரதியார் கட்டுரைகள் -- பூம்புகார் வெளியீடு

மேலும் பல நூல்களுக்கு இங்கே சொல்லவும் 

No comments: