Monday, September 14, 2020

ரன்னிங் டைரி - 111

 14-09-2020 08:20

தஞ்சோங் காத்தோங் ரோடு

இதமான வெய்யில்.ஓட ஆரம்பித்தவுடன் இளையராஜாதான் எண்ணத்தில் வந்தார்.அவரின் மலேசிய கச்சேரியை நேற்று இரவு பார்த்தேன். அதன் பாதிப்பு. திரும்ப திரும்ப அவரின் இசைக்கே நான் செல்கிறேன்.நான் அவரின் தெலுங்கு பாடல்களை கேட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறேன்.மௌண்ட்பேட்டன் ரோட்டில் ஒருவர் கையில் லேப்டாப் பையுடன் வேகமாக நடந்து கொண்டிருந்தார் அவரைப் பார்த்தவுடன் எனக்கு நேற்று படித்த ஒரு கட்டுரை தான் ஞாபகத்தில் வந்தது.   அதில் கூறப்பட்டுள்ளது போல எதற்காக வேலை செய்கிறோம் என்பதை சரியாக தெரிந்திருந்தால் அந்த வேலை மகிழ்ச்சியாக இருக்கும்  எனபது என்னை பொறுத்தவரை உண்மை. நான் பலபேரிடம் அதை சொல்லியுள்ளேன்.இன்று என்னென்ன செய்ய வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: