Saturday, February 29, 2020

ரன்னிங் டைரி -75

29-02-2020 05:38
வீட்டிலிருந்து ஸ்டேடியம் வரை 

ஐந்து மணிக்கே முழித்துவிட்டேன் ஓடவா வேணாமா என்று யோசித்துக் கொண்டே எழுந்து உடை மாற்றி சுக்கு காபி குடித்து விட்டு ஓட ஆரம்பித்தேன். வெளியே நல்ல குளிர். மிக மெதுவாக ஓடினேன். வாக்மேனில் "Kiss from rose" ஆரம்பித்தது. எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் . வசீகரக் குரல். நானும் பாட ஆரம்பித்தேன்.காலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் பாடிக் கொண்டே ஓடுவது ஒரு தனி சுகம். சர்ச் திறந்திருந்தது ஆனால் ஒருவரும் இல்லை. நின்று "அருள் நிறைந்த மரியே" சொல்லிவிட்டு மீண்டும் ஓட ஆரம்பித்தேன். திடீரென்று குஜராத் நீதி மன்றத்தின் தீர்ப்பு மனதில் வந்தது.பல விதமான கேள்விகள் என்னுள் எழுந்தது. என்னிடம் அனைத்து டாக்குமெண்ட்ஸ் இருக்கிறதா என்று எண்ணிக் கொண்டே ஸ்டேடியத்தை அடைந்தேன்.

No comments: