Tuesday, February 25, 2020

ரன்னிங் டைரி -71

25-02-2020 08:13
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

கவனம் எல்லாம் கோவிலுக்கு சென்று நேற்று பார்த்த புத்தகங்களை எடுப்பதில் தான் இருந்தது . ஓட ஆரம்பித்த போது "Ariel by Sylvia Plath" ஞாபகம் வந்தது . இந்த புத்தகம் இருக்க வேண்டுமென்று கடவுளிடம் கேட்டுக் கொண்டேன். கோவிலை அடைந்ததும் என்னை அறியாமல் ஒரு பயம். கடவுள் கைவிடவில்லை. அந்த புத்தகம் இருந்தது. அதை எடுத்து பையில் வைத்துக் கொண்டு மீண்டும் ஓட ஆரம்பித்த போது இளையராஜா "ராஜா ராஜா சோழன்" என்ற மந்திரத்தை இயற்ற ஆரம்பித்தார். நானும் என்னுடைய வேகத்தைக் கூட்டினேன்.நல்ல வெய்யில் . திடீரென்று கொரோன வைரஸ் பற்றிய எண்ணம் வந்தது. சிங்கப்பூர் அரசைக் கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். நேற்று புதிதாக யாருக்கும் இந்த நோய் பரவவில்லை. இன்னும் கவனமாக இருக்க வேண்டும். நோய் பரவவில்லை என்று முன்னெச்சரிக்கையை கைவிடக் கூடாது என்று எண்ணிக் கொண்டே அலுவலகம் அடைந்தேன். அங்கு temperature எடுப்பதற்கு receptionist ரெடியாக எழுந்து நின்றார். 

No comments: