Wednesday, February 12, 2020

ரன்னிங் டைரி -62

12-02-2020 08:20
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் மனதில் தோன்றியது இந்த "பாய் பெஸ்டி" கவிதைதான். நான் தினமும் ஒரு கவிதை மட்டுமாவது படிக்கவேண்டும் என்று ஒவ்வொரு மாதமும் நினைப்பேன். ஆனால் அதை பின்பற்றவே முடியவில்லை. நேற்று வாசித்தால் இன்று இந்த கவிதை ஞாபகத்தில் வந்ததென்று நினைக்கிறன். சமீபத்தில் வாசித்த கவிதைகளில் எனக்கு பிடித்தது
=====
இளைய பாரதம்
  -குமரி அமுதன்
===
வானொலிப் பெட்டி
வழங்கியது செய்தி :
'மறைந்த மகாத்மா
காந்தி அடிகளின்
முப்பதாவது நினைவு தினத்தில்
ஐ.நா.சபை
அஞ்சலி செலுத்தியது.'
செய்தி கேட்ட என்
தம்பி கேட்டான்:
"ஐ.நா. தெரியும்
யாரந்த காந்தி?|"
==
நிறைய கவிதைகள் வாசிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன் .

No comments: