Friday, February 21, 2020

ரன்னிங் டைரி -69

21-02-2020 08:20
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது எழுத்தாளர்களின்  சண்டை தான். ஒரு பக்கம் மனுஷ்யபுத்திரனின் கவிதை விமர்சனத்தின் சண்டையென்றால் மற்றொரு புறம் சாருநிவேதிதாவிற்கும் வாண்ணாதாசனிற்கும். என்னை கேட்டல் விமர்சனத்தை விமிர்சனமாக எடுத்துக் கொண்டு நகன்று செல்ல வேண்டும். புடிக்கவில்லையா அந்த விமர்சனத்தை எடுத்துக் கொள்ள தேவையில்லை. தனி நபர் தாக்குதல்கள் நல்லதல்ல.  நல்ல புத்தகம் எந்த genre-ல் இருந்தாலும் transagressive  ஆனாலும் கூட  மக்கள் வாங்கி படிக்கத்தான் செய்வார்கள் என்பது என் கருத்து. என்னை ஏன் எல்லோரும் படிக்கவில்லை என்ற கேள்வியே அபத்தமானது. நான் தேடிச் சென்றுதான் சாருநிவேதிதாவின் புத்தகங்களை படித்தேன். சில பிடித்திருந்தன சில பிடிக்கவில்லை. பலர் என்னிடம் அவரின் எழுத்தைப் பற்றிக் கேட்டபோது நான் சொன்னது "நீங்களே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்" என்பதுதான்.  ஒரு வாசகனை ஒரு புத்தகம் ஏதாவது செய்ய வேண்டும் அப்படி செய்யும் எழுத்திற்கு வாசகன் மீண்டும் மீண்டும் செல்வான். இன்று சண்டையில் என்ன நடக்குமோ என்று எண்ணிக் கொண்டே அலுவலகம் அடைந்தேன்.

No comments: