Wednesday, February 19, 2020

ரன்னிங் டைரி -68

19-02-2020 08:17
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது நேற்று இரவுநடந்த  ஒரு நிகழ்வுதான் .என் மகள் என்னிடம் "எனக்கு ஒரு தமிழ் பாட்டு சொல்லிதங்கப்பா?" என்று கேட்டாள் . உடனே நான் "ராஜா ராஜா சோழன் நான்" பாட ஆரம்பித்தேன். பல முறை பாடிய பிறகு அவள் முதல் இரு வரிகளை பாடினாள். ஏன் நான் இந்த படலைத் தேர்வு செய்து பாடினேன் என்பதையே எண்ணிக் கொண்டு ஓடினேன். என் வாக்மேனில் இந்த பாடல் இருக்கிறது .தினமும் ஒரு முறையாவது இந்த பாடலைக் கேட்பேன். ஆனால் மற்ற சில பாடல்களையும்  நான் தினமும் கேட்கிறேன். திரும்ப திரும்ப ஏன் இந்த பாடலை தேர்வு செய்து பாடினேன் என்று கேட்டுக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

No comments: