Monday, February 3, 2020

ரன்னிங் டைரி -58

25-01-2020 05:12
வீட்டிலிருந்து முஸ்தபா வரை

வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் எங்கு ஓடுவதென்று ஒரு கேள்வி. எப்போதும் கிழக்கு கடற்கரைதான் முதல் சாய்ஸ் ஆனால் இன்று அங்கு ஓட தோன்றவில்லை. சரி ஸ்டேடியம் பக்கம் ஓடலாம் என்று எண்ணி அந்த பக்கம் ஓட ஆரம்பித்தேன். வாக்மேனில் இளையராஜா தனது மாயாஜாலத்தை நிகழ்த்த ஆரம்பித்திருந்தார். அந்த மனுஷனுக்கு எப்படித்தான் நமது சூழ்நிலை தெரிகிறதோ! சீரான வேகத்தில் ஓடினேன். இருள் குளிர்ந்த காற்று ஓட்டத்தை மேலும் இனிதாக்கியது. ஸ்டேடியத்தை தாண்டி ஓடிக்கொண்டிருந்தேன். திடீர்ரென்று ஏன் முஸ்தபா வரை ஓடக்கூடாது என்று எண்ணி அந்த பக்கம் வளைந்து ஓடினேன். மனதில் எதுவுமே எண்ணவில்லை . ஏன் முஸ்தபாவிற்கு  ஓடினேன் என்று எனக்கு தெரியாது. யோசித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

No comments: