Wednesday, March 18, 2020

ரன்னிங் டைரி -82

18-03-2020 08:15
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தான். நேற்று தான் அதை முழுவதும் படித்தேன். என்ன நடக்கும் என்று பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டேன். திடீரென்று சாரு நிவேதா ஞாபகம் வந்ததது. என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த கட்டுரையாளர். அவரைப் போல தைரியமாக எழுதுபவர்கள் வெகு சிலரே. அதற்காக மற்றொரு எழுத்தாளரை குறை சொல்வது சரியல்ல. விமர்சனம் செய்வது வேறு ஒருவரின் புகழைப் பற்றி பொறாமைப் படுவது வேறு.பெருமாள் முருகனின் எழுத்து வேறு வகையானது. சாரு நிவேதா இப்படி செய்வதற்கு பதிலாய் இன்னும் எழுதினால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

No comments: