Thursday, June 4, 2020

கொரோனா நாட்கள் - Series

இதுவும் வாட்சப்பில் தான் ஆரம்பித்தது. நண்பர்கள் பலர் இந்த தொடர் பார்த்தேன் அந்த தொடர் பார்த்தேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் இந்த கொரோனா நாட்களில் இரண்டே தொடர்தான் முழுதாக பார்த்தேன் ஒன்று நான் ஏற்கனவே பார்த்துக் கொண்டிருக்கும் "Homeland" தொடரின் புதிய சீசன். இரண்டாவது "Paatal Lok".பலர் என்னை "Money Heist" பார்க்கச் சொன்னார்கள். ஏனோ எனக்கு அதில் விருப்பமில்லை.

நான் பார்த்த முதல் ஆங்கில series "Breaking Bad" என்றுதான் நினைக்கின்றேன். முதல் இரண்டு எபிசோடுகளுக்கு பிறகு சர்ச் நண்பர் ஒருவர் "looks good ..you can watch" என்றார். பார்க்க ஆரம்பித்தேன்.அதன் பிறகு தேடி தேடி தொடர்களை பார்க்க ஆரம்பித்தேன். நான் மிகவும் ரசித்துப் பார்த்த தொடர்கள் :

1)Breadking Bad
2)True Detective Season 1
3)The Wire
4)Unbelievable
5)Mindhunter
6)The Man in the high Castle
7)Narcos
8)Berlin Station
9)Da Vinci's Demon
10)West World -Season 1 & 2
11)The Borgias
12)Chernobyl
13)Roots
14)Killing Eve
15)Silicon Valley
16)Sherlock
17)The Walking Dead - season 1 to 3
18)Fleabag
19)The Crown - Season 1
20)Game of Thrones
21)Zoo
22)The Newsroom
23)The Name of the Rose
24)Braindead 
25)Descendants of the Sun

மேலே உள்ள லிஸ்டில் பல த்ரில்லர் வகையைச் சார்ந்தது.  Narcos மற்றும் Game of Thrones விடிய விடிய பார்த்தேன். Silicon Valley மற்றும் Braindead காமெடி நான் பல தடவை வெடித்துச் சிரித்திருக்கிறேன். Blackish தொடரிலும் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.இந்த lockdown நாட்களுக்கு முன் "Friends" தொடரை முழுவதும் பார்த்தேன். அட்டகாசமான நகைச்சுவை .அவசியம் பார்க்க வேண்டிய தொடர்.

கண்டிப்பாக பார்க்க வேண்டிய விளையாட்டு தொடர்பான தொடர்கள் :
1) The Last Dance
2) The Losers
3) All or Nothing: Manchester City 
4) The Test :A New Era For Australian Team

முதல் இரண்டும் அனைத்து விளையாட்டு பிரியர்களும் பார்த்தே ஆக வேண்டுமென்று தான் சொல்வேன். அந்த இரண்டிலும் பல விமர்சனங்கள் இருந்தாலும் பல பாடங்களை விளையாட்டு வீரருக்கும் பார்வையாளர்களுக்கும் கற்றுக் கொடுக்கும்.

Wednesday, June 3, 2020

ரன்னிங் டைரி - 90

03-06-2020 05:32
தஞ்சோங் கத்தோங் ரோடு 

நல்ல குளிர். சிறிது தூரம் நடந்து விட்டு ஓட ஆரம்பித்தேன். மனதில் இளையராஜா வந்துகொண்டே இருந்தார். இன்று அவரின் பிறந்தநாள். எத்தனை எத்தனை பாடல்கள் .எல்லாவிதமான situationக்கும் அவரின் பாடல்கள் உண்டு.என் வாக்மேனில் "காதோரம் லோலாக்கு" ஓடிக் கொண்டிருந்தது.  என் மகளுக்கும் அவரின் பாடல்கள் பிடித்திருக்கிறது.விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல இளையராஜா. எனக்கும் அவர்மேல் பல விமர்சனங்கள் உண்டு ஆனால் அவரின் இசை எல்லாவற்றையும் சரிசெய்து விடுகிறது. பல தமிழர்கள் போல எனக்கும் வாழ்வின் மிக முக்கிய நேரத்தில் என்னை கைபிடித்து நடத்திச் சென்றது இளையராஜாவின் பாடல்கள் தான். மனதில் பல பாடல்கள் ஓடிக் கொண்டே இருந்தன. பலவிதமான உணர்வுகளோடு ஓடிக்கொண்டிருந்தேன்.  அண்ணன் இறந்த செய்தி கேட்டு பர்வின் டிராவல்ஸில் சென்றுகொண்டிருந்த போது இரண்டு பாடல்கள் என்னை கதறி அழவைத்தன. ஒன்று "சின்ன தாயவள் (தளபதி )" மற்றும்  "பூங்காற்றிலே(பாம்பே)". இன்றும் இந்த பாடல்கள் கேட்கும் போது கண்ணில் நீர் வரும். "கல்யாண மலை" படலைக் கேட்கும் போதெல்லாம் மறைந்த சித்தப்பா மனதில் தோன்றி அந்த பாடலை பாடுவார். "இளமை இதோ" கேட்கும் போதெல்லாம் அண்ணனின் முகம் என் முன் தோன்றும்.மகள் பிறந்தபோது "ராஜா ராஜா சோழன்". மகன் பிறந்தபோது "தாரை தப்பட்டை தீம் மியூசிக்". "பழமுதிர் சோலை " கேட்கும் போதெல்லாம் அக்காமார்களுடன் விளையாடியதுதான் மனதில் ஓடும். இப்படி எத்தனை பாடல்கள். இதை டைப் செய்து கொண்டிருக்கும் போது "இளையநிலா பொழிகிறது" கேட்டுக் கொண்டிருக்கிறேன்.ராஜா ராஜாதான் ! வாழ்க பல்லாண்டு என்று சொல்லிக் கொண்டே வீட்டை அடைந்தேன் கண்ணில் கண்ணீருடன்!


Tuesday, June 2, 2020

ரன்னிங் டைரி - 89

01-06-2020 06:10
தன்மன் ரோடு 

இன்றும் தன்மன் ரோட்டில் தான் ஓடினேன். ஓட ஆரம்பித்தபோதே பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பொனி ஞாபகத்தில் வந்தது. கடந்த இரண்டு மாதத்தில் கிட்டத்தட்ட ஒவ்வெரு நாளும் குறைந்தது ஒரு முறையாவது கேட்டிருப்பேன். ஏனோ கேட்கும் போதெல்லாம் என்னுள் பலவிதமான எண்ணங்கள் ஓடும். என் வாக்மேனில் அந்த சிம்பொனி இல்லை.  வேறொரு பாடல் ஓடிக்கொண்டிருந்தது ஆனால் மனதோ அந்த சிம்பொனியை சிந்தித்துக் கொண்டே இருந்தது. கடந்த வாரம் இந்த சிம்பொனியைப் பற்றி ஒரு புத்தகம் படித்தேன். கலையின் உச்சம் இந்த சிம்பொனி என்கிறார் அதன் ஆசிரியர். குழந்தைகளுக்கு இசை கற்றுக் கொடுக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

Monday, June 1, 2020

ரன்னிங் டைரி - 88

31-05-2020 05:20
தன்மன் ரோடு 

மார்கெட்டுக்கு செல்ல வேண்டுமென்று எண்ணி அந்த பக்கம் ஓட ஆரம்பித்தேன். ஆனால் சிக்னல் வந்தவுடன் திரும்பி தன்மன் ரோடு பக்கம் ஓடினேன். இந்த மாதம் எவ்வளவு சீக்கிரம் சென்றுவிட்டது என்று எண்ணிக் கொண்டே ஓடினேன். வழக்கத்திற்கு மாறாக இந்த மாதம் முகநூலில் அதிக நேரம் ஏன் செலவழித்தேன் என்று என்னையே கேட்டுக்கொண்டேன். திடீரென்று " i cant breathe" என்ற வாக்கியம் எண்ணத்தில் வந்தது. அமெரிக்காவில் நடப்பது கொடுமை. எவ்வளவு மாடர்னாகி என்ன பயன்? ஒரு மனிதனை மனிதனாக மதிக்க தெரியாவிட்டால்?!. திரும்பி மார்க்கெட் பக்கம் ஓடினேன். கடைகள் திறக்க ஆரம்பித்திருந்தது. ஓடுவதை நிறுத்தி விட்டு மார்கெட்டுக்குள் சென்றேன்.