Monday, November 6, 2017

கறுப்புக் கொடியின் கீழ் ( Under The Black Flag - Sami Moubayed)


நான் படித்த பத்திகள் ,கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் ISIS பற்றிய சிறந்த அறிமுகம் இந்த புத்தகம் தான். ஆசிரியர் ஒரு சிரியன் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார் . புத்தகத்தின் முன்னுரையில் ஆசிரியர் இந்த புத்தகமானது   IS மற்றும் caliphate-ன் சித்தாந்தம் என்ன  என்பதை  ஒட்டோமான் காலம் முதல் இன்று வரை உள்ள இஸ்லாமிய வரலாறு  கொண்டு விவரிக்கும் என்கிறார் . அவ்வாறே இந்த புத்தகம் உள்ளது.

caliphate எவ்வாறு உருவானது ? குர்ஆனில் caliph என்ற வார்த்தை மூன்று தடவை வருகிறது .முதலாவது Surat al -Baqara (Verse 30)  இதில் ஆதாமை முதல் khalifa என்று  கடவுள் கூறுகிறார்.   இரண்டாவது Surat Sad (Verse 26)இதில் தாவீது அரசனை இரண்டாவது khalifa என்று அழைக்கிறார்.மூன்றாவது   Surat al -Noor (Verse 55) இதில்
God has promised those of you who have attained to faith and do righteous deeds that, of a certainty, He will make them Khalifa on earth, even as He caused [some of ] those who lived before them to become Khalifa; and that , of a certainty, He will firmly establish for them the region which He has been pleased to bestow on them; and that, of a certainty, He will cause their erstwhile state of fear to be replaced by a sense of security [seeing that] the worship Me [alone]. not ascribing divine powers to aught beside Me. But all who, after [having understood] this, choose deny the truth -it is they, they who are truly iniquitous!
இதுவே caliphate-ன் அடித்தளம்.  தொடக்கம் முதலே caliphate குருதி கொட்டிய வரலாறு கொண்டது.  முதல் caliph-ஐ தவிர அடுத்து வந்த மூன்று caliph-களும் கொல்லப்பட்டனர்.   யார் caliph ஆக வேண்டும் என்பது மிக பெரிய பிரச்சன்னையாக மாறி ஒரு கட்டத்தில் அது இஸ்லாமை ஷியா ,சுன்னி  என்று  இரண்டாக பிரித்தது. இன்று வரை அந்த பிரிவு தொடர்கிறது.  அதன் பிறகு இஸ்லாம் பல பிரச்சன்னைகளை சந்தித்தது.

எவ்வாறு வஹ்ஹாபிசம் உருவானது அது எவ்வாறு  இன்றைய பல ஆயுதமேந்திய போராட்டக் குழுக்களுக்கு (அல் கொய்தா,ஜபாட் அல் நுஸ்ரா ,ISIS   )சித்தாந்த முறையில் உதவியது என்பதை ஆசிரியர் மிக தெளிவாக விளக்குகிறார்.  வஹ்ஹாபிசம் உருவானதற்கு முக்கிய காரணம் இபின் தய்மியா (Ibn Taymiya).இவர்தான் இஸ்லாமியர்களை caliph ஆள்வது  அவசியம் அதற்கு ஜிகாத் செய்ய வேண்டும் என்று தனது எழுத்துக்கள் மற்றும் பேச்சுக்கள் மூலம் அறைகூவல் விடுத்தார். அதாவது  " It is obligatory to know that the office in charge of commanding over the people (i.e the Khalifa) is one of the greatest obligations of religion. In fact there is no establishment of religion except by it. This is the opinion of the salaf (first Muslisms)." 

சிரியாவில்  2011-ல் இருந்து நடந்து கொண்டிருக்கும் போருக்கு பின்னாலிருக்கும்  அனைத்து போராட்ட குழுக்களும் தங்களது கொள்கைகள் ,சித்தாந்தம் அனைத்தும் முஸ்லீம் சகோதரத்துவம் (Muslim  Brotherhood ) என்ற சிரிய (syria ) அமைப்பிலிருந்துதான் வந்தது .1940-ல் இருந்து இந்த குழுக்களுக்கு இடையே  பல்வேறு  பிரச்சனைகள் இருந்தாலும் இரண்டு சம்பவங்கள் மிகவும் முக்கியமானது ஹமாவில்  (Hama ) 1964 (முஸ்லீம் சகோதரத்துவம், அளவிட்ஸ் (Alawites ) மற்றும் பாதிஸ்ட்ஸ்  (Baathists) மோதல்) மற்றும் 1982-ல் நடைபெற்ற வன்முறை. அதிலும் 1982-ல் நடந்து மிகக் கொடூரமானது .  இன்றைய ஜிஹாதி வன்முறைகளுக்கு இந்த சம்பவம் முக்கிய பங்கு வகிப்பதாக  ஆசிரியர் கூறுகிறார் . இந்நிகழ்வே ஜிகாதி குழுக்கள் சிரியாவின்  அசாத் குடும்பத்திற்கு எதிராக தீவிரமாக போராட வழிவகுத்தது.

அதற்கு பிறகு எவ்வாறு அல் கொய்தா உருவானது அதில் அல் சர்காவி (Al -Zarqawi ) எப்படி மற்றவர்களை விட வித்யாசமாக (சிரியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு இவன் தான் காரணம்)  செயல்பட்டு தன்னை இஸ்லாமிக் ஸ்டேட்டின் முதல் எமிர் என்று  அழைத்துக்கொள்ளும் அளவிற்கு உயர்ந்தான்  என்று ஆசிரியர் விளக்குகிறார் . அபு பாக்கர் அல் பாக்தாதியின்  (Abu Bakr al-Baghdadi) சிறு வயது வாழ்கை மற்றும் அவன் எவ்வாறு ஜிகாதி இயக்கத்தில் இணைந்தான் எனபதையும் ஆசிரியர் விளக்குகிறார். இந்த இருவரைப் பற்றி தெரிந்து கொள்வது இன்றைய ஜிகாதி இயக்கங்களைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.

ஷியா முஸ்லிம்களுக்கு ஒரு பெரும் தலைவர் இருந்துகொண்டே இருக்கிறார். அதாவது முதலில் ஈரானின் ருஹால்லாஹ் க்ஹோமெய்னி  (Ruhollah Khomeini) அவருக்கு பிறகு அலி காமேனி (Ali Khamenei) மற்றும் பல தலைவர்கள் ஷியா மக்களை வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள் .   ஆனால் சுன்னி முஸ்லிம்களுக்கு ஒருங்கிணைத்த தலைவர் இல்லை  இதை  மிக தெளிவாக பயன்படுத்திக்கொண்டு தன்னை caliph என்று அபு பாக்கர் அல் பாக்தாதி (Abu Bakr Baghdadi) அறிவித்துக்கொண்டு அதற்கேற்ப எல்லைகளை விரிவுபடுத்தியது  ISIS.

ISIS ஈராக் மற்றும் சிரியா நிலப்பரப்புகளை அக்கிரம்பித்த பிறகு நடந்த விஷயங்கள் நாம் அறிந்ததே. ISIS எவ்வாறு தனக்கென்று ஒரு மீடியா குழுவை  ஏற்படுத்தி அதை திறம்பட செயல்படுத்தியது  என்பதை  எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கிறார் . குறிப்பாக அது  எவ்வாறு  சமூக வலைத்தளங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஐரோப்பிய மற்றும் அமெரிக்க இளைஞர்களை போர்முனைக்கு அழைத்தது என்று விவரமாக கூறுகிறார் . ISIS-ன் "தஃபீக் (Dabiq)" என்ற டிஜிட்டல் இதழ் இஸ்லாமியரிடையே பெரும் வரவேற்பைப்  பெற்றது .

இரண்டு நாட்களுக்கு முன் (04-11-2017) செய்தித்தாளில் சிரிய படைகள் ISIS-ன் இறுதி நிலப்பரப்பை கைப்பற்றினர் என்ற செய்தி இருந்தது. ISIS இன்று தோற்றாலும் அது ஏற்படுத்திய தாக்கம் இன்னும் பல வருடங்களுக்கு நீளும்.  எவ்வாறு ஒரு சிறு அமைப்பு  இவ்வளவு பெரிய நிலப்பரப்பை இவ்வளவு நீண்ட காலம் அனைத்து எதிர்ப்பையும் மீறி ஆட்சி செய்தது என்பதை தெரிந்து கொள்ள இந்த புத்தகம் மிகவும் உதவும் .

அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம். 

ISIS பற்றி மேலும் தெரிந்து கொள்ள