Wednesday, August 23, 2017

மறையும் கலை (The Art Of Invisibility - Kevin Mitnick)


எனது நண்பர் ஒருவர் "நீ IT-யில் தான இருக்கே அப்ப இந்த புத்தகத்த வாசி " என்று கூறி அந்த புத்தகத்தையும் கொடுத்தார். எப்போதும் செய்வதுபோல் உடனே வாசிக்க ஆரம்பித்தேன். எனக்கு எப்படி அமெரிக்கா தனது மக்களை கண்காணிக்கிறது என்பது ஓரளவு தெரியும்.  ஆனால் ஒருவனது ஈமெயில் மற்றும் மற்ற இணைய செயல்பாடுகள் இவ்வளவு எளிதாக ஒருவனால் திருடவும் கண்காணிக்கவும் முடியும் என்பது ஆச்சிரியமாகவும் அதே சமயம் பயமாகவும் இருக்கிறது.

நான் நினைத்தேன் எனது பாஸ்வேர்ட் கடினமான ஒன்று யாரும் கண்டுபுடிக்க முடியாதென்று  ஆனால்  இரண்டு வருடங்களுக்கு முன் என்னுடைய ஜீமெயில் hack செய்யப்பட்டது. என்னுடைய இமெயிலில்   இருந்து எனது address book-லிருந்த அனைவருக்கும் நான் எங்கோ ஐரோப்பாவில் பணமில்லாமல் தவிப்பதாகவும் உடனே பணம் அனுப்பவேண்டுமென்று மின்னஞசல் சென்றுள்ளது. மிக கஷ்டப்பட்டு  மீண்டும் எனது பாஸ்வேர்டை மீட்டேன். அதன் பிறகு நான் செய்த முதல் காரியம்  இரண்டு அடுக்கு அங்கீகாரத்தை  (Two Factor authentication(2FA) )  செயல்படுத்தியதுதான்.பல சமூகவலைத்தளங்களில்  சில முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் நாம் அதை பயன்படுத்துவதில்லை. அது hackers வேலையை எளிதாகக்கிறது. இந்த புத்தகம் இது போல நமது சோம்பேறித்தனத்தையும் அறியாமையையும் எவ்வாறு அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள்  மற்றும் hackers பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் சொல்கிறது. அதுமட்டுமால்லாமல் எவ்வாறு நாம் நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.
To become truly invisible in the digital world you will need to do more than encrypt your messages
ஆசிரியர் எவ்வாறு இணையம் வந்த காலம் முதல் இன்றுவரை  நமது தனியுரிமை பறிக்கப்படுகிறது என்று பல எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறார்.  நமது இணைய அனுபவத்தை பெருக்க என்ற பெயரில் எவ்வாறு நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்பதையும் ஆசிரியர் மிக அழகாக கூறியுள்ளார். இந்த புத்தகத்தில் ஆசிரியர் விவாதித்த சில விசயங்கள் :

  • எப்படி  மின்னஞ்சலை  பாதுகாப்பது (Pretty Good Privacy (PGP)
  • எப்படி  SSL மற்றும்   HTTPS  வலைத்தளங்களை மட்டும் பயன்படுத்துவது
  • Location-ஐ ஆன் செய்து வைத்திருந்தால் வரும் பிரச்சனைகள்
  • VPN-ஐ எவ்வாறு  பயன்படுத்துவது
  • TOR Onion browser-ஐ எவ்வாறு  பயன்படுத்துவது
  • பிட்காயின்களின் பிரச்சனைகள்


என்னை கவர்ந்த  இரண்டு சுவாரசியமான விசயங்கள் ஒன்று எட்வர்ட் ஸ்நோடன் எவ்வாறு அனைத்து கட்டுப்பாடுகளை மீறி கோப்புகளை வெளியிட்டார் எனபதையும் சில்க் ரோடு டார்க் வெப் (Silk Road Dark web) எவ்வாறு இயங்குகிறது என்பதையும் தெளிவாக விளக்குகிறார்.

கெவின் மிட்னிக் ஒரு hacker. FBI-யால் தேடப்பட்டவர் அவரது கைது ஒரு சர்ச்சைக்குரிய புத்தகமாக வெளிவந்தது.ஐந்து வருடம் சிறையில் இருந்தவர்.  முடிந்தவரை தொழில்நுட்ப விளக்கங்களை எளிய முறையில் விளக்கியிருக்கிறார். இந்த துறையில் அவரது அனுபவம் மிக தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது. மிட்னிக் கூறும்  சில இணைய பாதுகாப்பு  டிப்ஸ்:

  •  மின்னஞ்சலின்  பாஸ்வேர்ட் ஒரு சொல்லுக்கு பதிலாக ஒரு சொற்றொடராக இருக்க வேண்டும் .
  • பாஸ்வேர்ட்டை நிர்வகிக்க பாஸ்வேர்ட் மேனேஜர் உபயோகிக்க வேண்டும் .
  • பொது wi-fi-யை உபயோகிக்க கூடாது .
  • அடிக்கடி backup எடுக்கவேண்டும் 
  • தவறாமல் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்ய வேண்டும் 
  • USB உபயோகத்தை தவிர்க்க வேண்டும்   

ஜோனாதன் டப்ளின் தனது "Move Fast And Break Things" புத்தகத்தில் " நம்மிடம் இருந்து எவ்வளவு தனிப்பட்ட தகவல்கள் எவ்வளவு மலிவாக பெறமுடியுமோ அவ்வளவு பெற்று எவ்வளவு பெரிய லாபத்திற்கு விற்க முடியுமோ அவற்றை விற்பதுதான் அனைத்து சமூக வலைதளங்களின் நோக்கம்" என்று மிக தெளிவா கூறுகிறார். அவர் கூறுவதுபோல பெரிய நிறுவனங்களுக்கு நமது பாதுகாப்பு ஒரு பெரிய விசயமே அல்ல அதனால்  நாம்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த புத்தகம் சரியான நேரத்தில் வெளிவந்திருக்கிறது. யார்யார் இணையத்தை பயன்படுத்துகிறார்களோ அவர்கள் அனைவரும் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

மேலும் வாசிக்க 

Monday, August 21, 2017

அஜ்வா - சரவணன் சந்திரன் (Ajwaa - Saravanan Chandran)


விரும்பினதை விட்டால் பாவம். விரும்பாததைத் தொட்டால் பாவம்.
இந்த புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் தோன்றியது வணிகத் தன்மைகொண்ட எழுத்து. அணிந்துரையில் திரு.அப்பணசாமி கூறுவதுபோல சரவணன் சந்திரன் ஒரு தமிழ் சேட்டன் பகத். வாசிக்க தடையில்லை. கதைக்களம் மிகப்பெரியது ஆசிரியர் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் எனக்கு படுகிறது. நான் இவரது இரண்டாவது புத்தகமான "ஐந்து முதலைகளின் கதை " படித்துள்ளேன். அக்கதை பிடித்திருந்தது அப்போது அந்த எழுத்துநடை பெரிதாக என்னை பாதிக்கவில்லை .
எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாகப் பெருந்தன்மையுடன் இருப்பதும் பழி வாங்கும் உணர்ச்சிதான்
எனக்கு அஜ்வா பேரிச்சம்பழம் 2015-ல் தான் தெரியும். ரம்ஜான் மார்க்கெட்டில் ஒரு ஈரானியர் விற்றுக்கொண்டிருந்தார். அங்கிருந்த பேரீச்சம்பளங்களிலேயே மிகவும் விலை உயர்ந்தது  அஜ்வா வகை  பேரீச்சம்பளங்கள்தான். அவரிடம் கேட்டதற்கு ஒரு கதையை சொன்னார். நான் அந்த பழங்களை வாங்கவில்லை ஆனால் மற்ற விலைகுறைந்த  பழங்களை வாங்கியவுடன் ஒரே ஒரு அஜ்வா  பழம் தந்தார். அருமையான சுவை.  காலையில் ஏழு அஜ்வா பழங்கள் சாப்பிட்டால் மாலைவரை விஷம் மற்றும் மாந்த்ரீகம் ஒருவனை ஒன்றும் செய்யாது என்பது ஒரு நம்பிக்கை.
ஒரே நேரத்தில் ஒன்றைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே திரும்பத் திரும்ப சிந்திப்பவர்களைப் பைத்தியம் என்று வழக்கமாக இந்த உலகம் சொல்கிறது.
ஒரு வரியில் இக்கதையை சொல்லவேண்டுமானால் எப்படி ஒருவன் போதையில் இருந்து வெளிவருகிறான் என்பதுதான் .கதைசொல்லிதான் கதையின் நாயகன் அவனது  பார்வையில்தான் கதை விரிகிறது.அவனது தந்தை எப்படி எதற்கும் பயப்படுபவராக இருந்தாரோ அதேபோல அவனும் அனைத்திற்கும்  பயப்படுகிறான்.  அட்டையில்  "பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம்"   என்று எழுதப்பட்டுள்ளது அதுபோல நாயகன் எவ்வாறு தனது அனுபவங்களோடு பயத்திலிருந்து வெளிவருகிறான் என்பதுதான் கதை. அவனது குடும்பம் ஒரு அன்பான குடும்பமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. அவனது அத்தையின் கதைதான் சுவாரசியமான ஒன்று. அவனது  மாமன்தான்  அவர்கள் குடும்பத்து எதிரி. ஒரு தடவை மாமன் அவனை திருக்கை வாலால் அடிக்கிறான்.அது அவனது மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.

குடிபழக்கத்திற்கும் போதை மருந்து பழக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை ஆசிரியர் எளிமையாக விளக்குகிறார்.அவர்கள் குடும்பத்திற்குள்ளும் வெளியேயும் இருக்கிறார்கள். மாமாவை தவிர அவனை சுற்றி அனைவரும் அன்பானவர்களாக இருக்கிறார்கள் ஜார்ஜ் அந்தோணி மற்றும் அவனது அம்மா விஜி அண்ணன் ,சுந்தர் சிங் அண்ணன்... மற்றும் டெய்சி.  அவன் தன்  பயத்திலிருந்து வெளிவர இந்த போதையுலகிற்குள் நுழைகிறான்.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைபோல எழுதப்பட்டுள்ளது.கதையில் வரும் ஒவ்வொருவரும் ஒரு அனுபவத்தை சொல்லிச் செல்கிறார்கள். டெய்சி உறவுகளால் தன் சுதந்திரம் பறிபோய்விடும் என்று பயந்து வீட்டைவிட்டு வெளியேறி போதை உலகில் தஞ்சம் அடைகிறாள் .

இந்த கதையை சற்று வித்தியாசமாக்கியது போதை உலகின் அனைத்து சமாச்சாரங்களையும் நமக்கு காட்டுவதுதான்.ராஜபோதை ,காரின் கதவுகளை அடைத்துக்கொண்டு எடுத்துக்கொள்ளும் போதைப்பொருள் வெவ்வேறு உறுப்புகளில் குத்திக்கொள்ளும் பழக்கம் என அனைத்தையும் கதையோடு பேசிச் செல்கிறார் . போதைக்கு அடிமையானவர்களின்  பாலுணர்வு எப்படி இருக்கும் என்று நாயகன் கூறுவது எனக்கு தெரிந்து உண்மைதான் . அவர்கள் ஒருபோதும் ஆண்மையை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கதையில் இறப்பு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது . டெய்சியின் இறப்பு அவனை பெரிதும் பாதிக்கிறது . அதுவே அவனை போதையிலிருந்து மீள தூண்டுகிறது. அஜ்வா செடி துளிர்விடுவதுடன் கதை முடிகிறது.

 சாரு நிவேதிதாவின் தாக்கம் சரவணன் சந்திரனிடம் உள்ளது என்பது அவரது இரண்டாவது நாவலிலே தெரிந்தது இதிலும் அப்படியே. ஒரு முக்கிய வித்யாசம் சரவணன் சந்திரன் ஒரு முடிவை நோக்கி கதையை நகர்த்துகிறார். பல்வேறு மதங்களின் மாந்தர்கள் வருகிறார்கள்  அனைவரையும்  மிக அழகாக ஆசிரியர் கையாண்டுள்ளார் .  இந்த புத்தகத்தின் பெரிய குறை எதுவுமே என் மனதில் நிற்கவில்லை அதற்கு எழுத்துநடை ஒரு காரணமாக இருக்கலாம். அனைத்தையும் மிக எளிதாக கடந்து செல்ல முடிகிறது . திரைப்படங்களில் வருவதுபோல பல வசனங்கள் அங்கும் இங்குமாக வருகிறது. இக்கதையில் அனைவரும் ஒரு பயத்துடன் வருகிறார்கள் - அதுதானே வாழ்க்கை . பயம் இல்லாதவர் இவ்வுலகில் யார் ?

வாசிக்க வேண்டிய புத்தகம் .
  

Tuesday, August 15, 2017

ஒரு சுருக்கமான திருமணத்தின் கதை - அனுக் அருட்பிரகாசம் (The story Of A Brief Marriage - Anuk Arudpragasam)


Being close to someone meant more than being next to them after all, it meant more than simply having spent a lot of time with them. Being close to someone meant the entire rhythm of that person's life was synchronized with yours, it meant that each body had to learn how to respond to the other instinctually, to its gestures and mannerisms, to the subtle changes in the cadence of its speech and gait, so that all the movements of one person had gradually come to be in subconscious harmony with those of the other.
இந்த வருடம் நான் வாசித்த பூதங்களில்  என்னை மிகவும் பாதித்த புத்தகம்.  இந்த புத்தகத்தின் முதல் பத்தியை ஒருவன் அழாமல் வாசிப்பது கடினம். என் கண்ணிலும் கண்ணீர் வந்தது.  இதோ அந்த முதல் பத்தி  " MOST CHILDREN HAVE two whole legs and two whole arms but this little six-year-old that Dinesh was carrying had already lost one leg, the right one from the lower thigh down, and was now about to lose his right arm. Shrapnel had dissolved his hand and forearm into a soft, formless mass, spilling to the ground from some parts, congealing in others, and charred everywhere else. Three of the fingers had been fully detached, where they were now it was impossible to tell, and the two remaining still, the index finger and thumb, were dangling from the hand by very slender threads. " 

இக்கதை ஈழ இறுதிப்போரின் போது நடக்கிறது நூலின் தலைப்பைப் போல மிக சிறிய புத்தகம். இது தினேஷ் மற்றும் கங்காவின் சுருக்கமான திருமணத்தின் கதை.  நிலைமை மோசமாக கங்காவின் தந்தை அவளை எப்படியாவது யாருக்காவது திருமணம் செய்ய வேண்டுமென்று நினைப்புடன்  இருக்கையில் அவர் அந்த முகாமில் தினேஷை பார்க்கிறார் உடனே அவனிடம் அவர் விருப்பத்தையும் தெரிவிக்கிறார். அவனும் அதற்கு ஒப்புக்கொள்கிறான். திருமணமும் நடக்கிறது. அனைத்தும் ஒரே நாளில் நடந்து முடிகிறது.
What it would be like to be separated from all these things he did not know, he could not envision, but the more he dwelled on it the more he understood that it was not so much fear of being separated that he felt as sadness at the idea of parting.
தினேஷ்  தன் தாய் உட்பட அனைத்தையும் இழந்து வெகுதூரம் நடந்து இந்த முகாமிற்கு வந்தவன்.முகாமில் உள்ள மருத்துவமனையில் தன்னால் முடிந்ததை செய்து வருபவன். முகாமில் அவன்  செய்யும் அனைத்தையும் ஆசிரியர்  மிக நுட்பமாக விவரிக்கிறார் குறிப்பாக இரண்டு இடங்களில் ஒன்று அவன் கடற்கரையோரமாக மலம் கழிப்பதும்  மற்றும் குளிப்பதும். சாதாரணமாக செய்யும் இந்த இரண்டும் போர்க்காலங்களில் எவ்வளவு கடினமானது என்று ஆசிரியர் மிக நுணுக்கமாக துளித்துளியாக நாமே அதை செய்வதுபோல உணரச்செய்கிறார். இரண்டாவது திருமணத்திற்கு பிறகு கங்கா சமைத்த உணவை  தினேஷ்  ஒவ்வொரு பருக்கையின் சுவையை தனித்தனியாக  மிகவும்  ரசித்து  உண்ணும்போது. இதோ அந்த வரிகள் - "The food was hot in his mouth, and as he rolled it around with his tongue he savoured the shape and taste of the soft grains, his tongue cleaving the rice into separate sections of his mouth then goading it back into a single mass. His jaws moved of their own accord and his molars mushed the rice together, turning the separate grains into a single soft warm whole that slowly made its way to the back of his mouth and was then swallowed, something he became aware of only by the sensation of a warm substance slipping down his throat, past his bulging Adam’s apple, down into his gullet."

தினேஷ் அனைத்தையும் ஒரு தத்துவவாதி போல யோசிக்கிறான். தான் இறக்கப்போவது உறுதி என்று நம்புகிறான். அதனாலேயே அனைத்தையும்  மிக பெரிய நிகழ்வாக நினைக்கிறான். சுவாசிப்பதைக்கூட ஒருபெரும் நிகழ்வாக கருதுகிறான்.  எங்கே கங்கா தன்னை அழகில்லாதவன் என்று நினைப்பாளோ என்று அஞ்சுகிறான். அவளோடு பேசுவதற்கு தயங்குகிறான்.  அவர்களுக்கிடையே ஒரு விதமான அமைதி நிலவுகிறது. அந்த அமைதியான நேரம் எவ்வளவு முக்கியம் என்று இரண்டுபேருக்கும் தெரியும். அடிப்பட்ட காக்காவுடன் சிறிது நேரம் செலவழிக்கிறான். அவன் அதை கொள்ளவுமில்லை அதற்கு மருத்துவமும் பார்க்கவில்லை அவன் அப்பறவையோடு இருந்தான். இருத்தல் எவ்வளவு முக்கியம் என்பதை ஆசிரியர் இதன் மூலம் உணர்த்துகிறார்.அவளோடு தான் உறவுகொள்ள முடியாது என்ற போது கண்ணீர் சிந்துகிறான். அந்த இரவு அவனது முதல் இரவு வெகுநாட்களுக்கு பிறகு நன்றாக தூங்குகிறான். அந்த ஒரு நாளில் அவன் அனைத்தையும் வாழ்ந்து முடிக்கிறான்.

Dinesh felt an urge to say something, but hesitated. He wanted to respond to Ganga’s silence by accepting it somehow, by acknowledging what it contained, but at the same time the thought of disrupting it by speaking seemed in some way inappropriate. There had been silence between them before, of course, as they had stood transfixed after the marriage ceremony, as they had sat next to each other for the first time in the clearing, and as they had eaten together afterwards in the camp, but this silence felt different somehow. The earlier silence had been the silence that existed between people living in different worlds. It had been the silence that existed between everybody in the camp, the silence between two people separated by a sheer wall of polished stone. The silence that was present between them now on the other hand was one that connected them rather than separated them. It charged the air between them so completely that the slightest movement by either one of them could be sensed at once by the other, so that their bodies were as if suspended together in a medium that was outside time

எனக்கு  எப்போது தினேஷ் கொல்லப்படுவான்  என்ற கேள்வி எழுந்து கொண்டேயிருந்தது .  போர் ஒரு சாதாரண மனிதனை எவ்வாறு மாற்றுகிறது என்பதை மிக எளிய எழுத்துநடை மூலம் சொல்லியிருக்கிறார். இறப்பு கண்முன்னே இருந்தாலும் வாழவேண்டும் என்ற ஆவல் எல்லா மனிதனுக்குள்ளும் இருக்கும் என்று அழுத்தமாக ஆசிரியர் இக்கதையின் மூலம் சொல்லுகிறார் .
But if they couldn’t talk about their pasts, what could they say to each other at all, given that there was no future for them to speak of either?
இந்த புத்தகம் ஈழப் போரை வேறுவிதமாக பார்க்க உதவும். எந்த அரசியலும் இல்லாமல் மனித மரியாதையும் போரின் அவலத்தையும் மிக அழகாக நம் கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார் ஆசிரியர் .கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.  

Friday, August 11, 2017

ரோபோக்களின் எழுச்சி (The Rise Of Robots - Martin Ford)


இந்த புத்தகத்தைப் வசித்து முடித்தவுடன் ஒரு விதமான பயம் என்னை பற்றிக் கொண்டது.  எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்பது ஒரு மிக பெரிய கேள்விக்குறி. இந்த புத்தகத்தை வாசிக்கும்போது  நமது பள்ளிகளும் கல்லூரிகளும் நமது பிள்ளைகளை எதிர்காலத்திற்கு சரியாக தயார் செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது. இந்த கேள்விக்கு பதில் 100% இல்லை என்றுதான் ஆனால் எவ்வளவு தூரம் பின்னே இருக்கிறோம் என்பதுதான் பயமாக இருக்கிறது.
The astonishing wealth and comfort we have achieved in modern civilization are a direct result of the forward march of technology––and the relentless drive toward ever more efficient ways to economize on human labor has arguably been the single most important factor powering that progress. It’s easy to claim that you are against the idea of too much automation, while still not being anti-technology in the general sense. In practice, however, the two trends are inextricably tied together.
ரோபோக்கள் மற்றும் தொழில்நூட்ப வளர்ச்சியை எப்படி எதிர்கொள்வதென்றால் அடிப்படைகளை  மறுசீரமைத்தல் (fundamental restructuring) மூலம் என்கிறார் ஆசிரியர். எதிர்கால trends-ஐ கணிப்பது கடினமாகிக்கொண்டே  இருக்கிறது  ஏனெனில் அறிவியல் மற்றும் தொழில்நூட்ப வளர்ச்சி வெகுவிரைவாக மாறிவருகிறது என்று  சிங்கப்பூரில் நடந்த பிக் டேட்டா (Big Data) மாநாட்டில் பல அறிஞர்கள் கூறினார்கள். இது மிகவும் முக்கியமான விசயம் ஏனென்றால் அரசின் பல்வேறு செயல்திட்டம் இந்த கணிப்பை பொறுத்துதான் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை எனக்கு தெரிந்து கல்வியில் குறிப்பிடத்தக்க  (அவசிய) மாற்றம் வந்ததாக தெரியவில்லை .  அரசும் அரசியல்வாதிகளும் பழங்காலத்திலேயே தங்கிவிட்டார்கள்.

"வேலையில்லா எதிர்காலம்" உருவாகுமா ? என்ற கேள்விக்கு ஆசிரியர் கூறுவது அது  சாத்தியம் என்று அதை அவர் பல புள்ளிவிவரங்கள் மூலம் எடுத்துரைக்கிறார். அவர் கூறும்  புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்தது. ஆனால் வெகுவிரைவில் அது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். முதலில் அழிவது "routine" வேலைகள் அதாவது தினசரி ஒரே மாதிரி (same flow) பணிகள் செய்யும் வேலை. பல்லாயிரம் clerical வேலைகள் காணாமல் போகும். இப்போதே தொழிற்சாலைகளில் பல வேலைகளை இயந்திரங்கள்தான் பார்க்கின்றன இனி மேலும் இயந்திரங்களின் பங்கு அதிகரிக்கும்.  அதுபோல வழக்கறிஞர்கள் , ஆராய்ச்சியாளர்கள் , சாப்ட்வேர் டிசைனர்கள் மற்றும் பல மருத்துவ வல்லுநர்கள் வேலை குறையும். அது மட்டுமல்லால் இன்னும் பத்து வருடங்களில் 90% செய்தி கட்டுரைகள் சாப்ட்வேரால்  எழுதப்படும் என்று ஒரு ஆராய்ச்சி சொல்கிறது - இது நூற்றுக்கணக்கான  பத்திரிக்கையாளர்களுக்கு வேலையில்லாமல் செய்யும். ஓட்டுநரில்லா வண்டிகள் பல்லலாயிரம் ஓட்டுனர்களை பாதிக்கும்.

மனித இனம் இயந்திர வளர்ச்சிக்குகேற்ப தாங்கள் வேலை செய்யும் முறையை மாற்றி படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது அதுபோல் இந்த மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டு செயல்படுமா என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் மிக பெரிய கேள்வி  . ஏனென்றால் இந்த (ரோபோ ,செயற்கை நுண்ணறிவு ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிகவும் வேகமாக வளர்கின்றது.  கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் மாற்றங்கள் மிகவும் வேகமா நிகழ்ந்து வருகிறது. பெருளாதார வல்லுநர்கள் இந்த மற்றும் விவசாய புரட்சி போலத்தான் என்கிறார்கள். ஆனால் ஆசிரியர் இந்த தொழில்நுட்பப் புரட்சி சற்று வித்தியாசமானது  ஏனென்றால் இந்த மாற்றங்கள் அனைத்து தரப்பையும் பாதிக்கிறது என்கிறார்.  அதற்கு அவர் கூறும் சில புள்ளிகள் :
  • குறையும் வேலைவாய்ப்பு (New  job creation)
  • பெருகும் சமத்துவமின்மை 
  • சம்பள உயர்வில் தேக்கம் 
  • ஜிடிபியில்  (GDP) குறையும் தொழிலார்கள் பங்கு 
  • ஜிடிபியில்  (GDP) பெருகும் கார்பொரேட் லாபம் 
அனைத்து புள்ளிகளும் இன்றைய சூழ்நிலையில் உண்மையே. மனிதன் இயந்திரங்களுடன் போட்டிபோடுவதைவிட இயந்திரங்களுடன் சேர்ந்து வேலை செய்ய பழகிக்கொள்ளவும் . இன்றும் பல தொழிற்சாலைகளில் அப்படிதான் ஆனால் வருங்காலத்தில் தினம் செய்யும் செயல்களும் இயந்திரங்களுடன்தான் என்பதை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் . எப்படியானாலும் வேலைவாய்ப்பு குறையத்தான் செய்யும் என்கிறார் ஆசிரியர்.

இதனால் வரும் பிரச்சனைகளுக்குத் ஆசிரியர் கூறும் தீர்வு - (Guaranteed Basic Income) அனைவருக்கும் அடிப்படை வருமானம் அதாவது ஒருவர் வேலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அரசு அவருக்கு மாதம்தோறும் குறிப்பிட்ட பணம் கொடுப்பது. இதைப் பற்றி இப்போதே பல நாடுகள் ஆராய தொடங்கிவிட்டன. அனைவருக்கும் அடிப்படை வருமானம் தீர்வாகாது என்று பல பொருளாதார வல்லூநர்கள் கூறுகிறார்கள். காலம்தான் பதில் சொல்லும்.
The promise of education as the universal solution to unemployment and poverty has evolved hardly at all. The machines, however, have changed a great deal.
நமது தற்போதையக் கல்விமுறையைக்  கொண்டு எதிர் காலத்தில் வேலை கிடைப்பது என்பது மிகவும் கடினம். மதிப்பெண்களை பிரதானப்படுத்தும் முறை மாற வேண்டும். சிங்கப்பூரில் நடந்த கல்வியாளர்கள் கூட்டத்தில் எதிர்கால வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர்கள் கூறிய பதில்  தனித்திறன்தான்  ஒருவனுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் என்று. மாணவர்களின்  திறமையை அறிந்து அதற்கேற்ப அவர்களை வருங்காலத்திற்கு தயார் படுத்துவதே நமது பள்ளிகளும் கல்லூரிகளும் செய்ய வேண்டியவை.

ஐ டி துறையில் அடுத்த சில வருடங்களுக்கு கீழே குறிப்பிட்ட பகுதியில் அதிக வேலைவாய்ப்பு உள்ளது :

  • Data Scientist (Python, Hadoop, R, SQL)
  • Machine Learning & AI (Python, OpenAI )
  • Healthcare ( EMR, PACS, HL7 )
  • Security Analyst

 ஐ டி  துறையைப்  பொறுத்தவரை படித்துக்கொண்டே இருக்க வேண்டும் , இல்லையெனில் விரைவில் பின்னுக்குத் தள்ளப்படுவோம்.

மார்ட்டின் போர்ட் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயர் பல வருட அனுபவமுள்ளவர். பல கருத்துக்களை மிக எளிய முறையில் விளக்கியுள்ளார். இந்த புத்தகம் 2015-ம் ஆண்டிற்கான சிறந்த பிசினஸ்  புத்தகமாக தேர்வுசெய்யப்பட்டது . அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

March For Science India

மாணவர்களின் திறனைக் கூட்டுங்கள்

Friday, August 4, 2017

அவமதிப்பு (Disgrace - J.M. Coetzee)


நிறவெறி காலத்திற்கு பிறகு  தென்னாபிரிக்காவில் நடக்கும் கதை இது.  ஒரு metaphor -கறுப்பர்கள் கையில் அதிகாரம் கிடைத்தவுடன் அவர்கள் செய்யக்கூடியவை பற்றி ஆசிரியர் இந்த கதையின் மூலம் விவரிக்கிறார். கல்லூரி பேராசிரியரான டேவிட் லூரி தனது மாணவியுடன் தகாத உறவு கொண்டதாக புகார் கூறப்படுகிறது. அவர் அதை எதிர்க்கவில்லை ஆனால் விசாரணைக் குழு சொல்வதுபோல் ஏதும் செய்யப் போவதில்லை என்று கூறி அவர்கள் அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்கிறார்.இது அவருடைய முதல் அவமதிப்பு .
(I)f we are going to be kind, let it be out of simple generosity, not because we fear guilt or retribution.
சிறிது காலம் தனது மகளோடு செலவிட முடிவு செய்து ஈஸ்டர்ன் கேப் (Eastern Cape) செல்கிறார். மகள் லூசி ஒரு ஓரினச்சேர்க்கையாளர் தனியாக விவசாயம் செய்து வாழ்கிறார்.நாய்கள் பலவும் அவளுக்கு உண்டு . அவருக்கு உதவியாக பெட்ரஸ் ஒரு கறுப்பர் மற்றும் அவரது குடும்பம்.லூரிக்கு இந்த அமைப்பே முதலிலிருந்து பிடிக்கவில்லை. லூஸிதான் அவரை சமாதானம் செய்கிறாள். லூரி மற்றும் பெட்ரஸின் முதல் சந்திப்பு முக்கியமானது. பெட்ராஸ் தன்னை நாய் மனிதன் (dog-man ) என்று அறிமுகப்படுத்துகிறான் . இங்கு பெட்ராஸ் சொல்வதையெல்லாம் கேட்கிறார்.வரலாறு மெதுவாக திரும்புகிறது ஒரு வெள்ளையர் கறுப்பர் சொல்வதைக்  கேட்டு வேலை செய்வது.
Temperament is fixed, set. The skull, followed by the temperament: the two hardest parts of the body. Follow your temperament. It is not a philosophy, It is a rule, like the Rule of St Benedict.
பெட்ரஸ் அங்கு வேலை செய்தாலும் அவன் மெதுவாக லூசியின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்கிறான் . புது வீடு காட்டுகிறான். லூரிக்கு அவன்மேல் ஒரு புரியாத பயம் அதை லூசியிடமும் சொல்கிறான். அவள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு நாள் லூசி லூரியின் கண்முன்னே மூன்று கறுப்பர்களால் கற்பழிக்க படுகிறாள் .லூரியை அடித்து குளியலறையில் போட்டு விட்டு அனைத்து வன்முறையும் நிகழ்த்தப்படுகிறது.அவன் கதவின் ஓரமாக தனது மகளை பரிதாபமாக பார்க்கிறான்.   இந்த நிகழ்வில் முக்கியமான ஒன்று தந்தைக்கும் மகளுக்கும் நடக்கும் உரையாடல்
              Lucy :‘But why did they hate me so? I had never set eyes on them.’ 
              Lurie:‘It was history speaking through them'
இந்த உரையாடலே கதையின் ஜீவன்.இது ஒரு தனிப்பட்ட தாக்குதல் அல்ல. அந்த மூவரில் ஒருவன் பெட்ரஸ் உறவினன். அதை அறிந்து லூரி பெட்ரஸிடம் முறையிடுகிறான். ஆனால்  பெட்ரஸ் தனக்கு ஏதும் தெரியாது என்று மறுக்கிறான். லூஸியோ போலீஸிடம் புகார் செய்ய மறுக்கிறாள். ஆசிரியர் இந்த தருணத்தை இவ்வாறு விவரிக்கிறார் -
How humiliating,’ he says finally. ‘Such high hopes, and to end like this.’
‘Yes, I agree, it is humiliating. But perhaps that is a good point to start from again. Perhaps that is what I must learn to accept. To start at ground level. With nothing…No cards, no weapons, no property, no rights, no dignity.’
‘Like a dog.’
‘Yes, like a dog.’ 
இப்படித்தான் கறுப்பர்களை வெள்ளையர்கள் பல காலமாக வைத்திருந்தனர். இப்போது அது வெள்ளையர்களுக்கு நடக்கிறது. இந்த மாற்றத்தை ஆசிரியர் மிக அழகாக பெட்ரஸ் மற்றும் லூரியின்  'role reversal' மூலம் சொல்கிறார். "டாக் மேனகா (dog man) இருந்த பெட்ராஸ் லூசியின் அனைத்து நாய்களும் கொல்லப்பட்டவுடன் 'free man" ஆகிறான் லூரியோ தன்னார்வத்தில் நாய்கள் உறைவிடத்தில் வேலை செய்கிறான். அங்கு அவன் யாருமற்ற நாய்களை வலியில்லாமல் கொல்லும் மருத்துவருக்கு உதவுகிறான்.இந்த மருத்துவமனையில் மிகவும் காயப்பட்ட நாய்களை கவனித்துக் கொள்கிறான். அவைகளின் வலியை புரிந்து கொள்கிறான். தான் லூசிக்கு ஏதும் செய்ய இயலாது அவள் தனித்து செயல்படுவது சரிதான் என்று புரிந்து கொள்கிறான். தான் மிகவும் நேசித்த நாயின் வலியைப்போக்க அதை மருத்துவரிடம் ஊசிபோட்டு கொல்லக் கொடுப்பதுடன் கதை முடிகிறது.      

லூரி நினைத்திருந்தால் அவன் மீண்டும் கேப் டவுனிற்கே சென்றிருக்கலாம் அவனுக்கு தெரியும் அவன் அங்கு வாழ முடியாதென்று.இதுவும் ஒரு குறியீடு தான். ஆசிரியர் கதை முழுதும் விலங்குகள் வதை பற்றி பேசுகிறார். ஒரு விதத்தில் இந்த கதைக்கு அது பொருந்தும் - "Yes we eat up a lot of animals in this country…It doesn’t seem to do us much good. I’m not sure how we will justify it to them." 

இந்த கதைக்கு இந்த பெயர் சரியாக பொருந்தும்.பலரும் பலவிதத்தில் அவமதிப்புக்குள்ளாகிறார்கள் லூரிதான் மிகவும்.எழுத்துநடை நேரடியான  எளிய  நடை ஆனால் அந்த எளிய நடைக்குப் பின் பல உணர்வுபூர்வமான  கருத்துக்கள் உள்ளன. பல குறியீடுகள் நமக்கு தென்னாப்பிரிக்க வரலாறு கொஞ்சம் தெரிந்திருந்தால் அதை புரிந்துகொள்ளலாம். இந்த நாவல்  ஒரு இருண்ட நிகழ்காலத்தை பிரதிபலிக்கிறதா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது.

நல்ல புத்தகம்.

Wednesday, August 2, 2017

மெதுத்தன்மை ....Slowness - Milan Kundera


இந்த சிறிய புத்தகத்தில் குந்தேரா பல விசயங்களைப் பற்றி பேசுகிறார். மெதுத்தன்மைக்கும் நினைவாற்றலுக்கும் உள்ள சம்பந்தம், தொழில்நுட்ப வளர்ச்சியால் வரும் இன்ப துன்பம் மற்றும் பல விசயங்களை ஆசிரியரே இந்த கதையின் கதைசொல்லியாக வந்து சொல்லுகிறார்.தொடக்கத்திலேயே ஆசிரியர் "வேகம் என்பது தொழில்நுட்பம் மனிதனுக்கு  வழங்கிய ஒரு வகையான இன்பம்" (Speed is the form of ecstasy the technical  revolution has bestowed on man) என்று கூறுவதோடு  "மெதுத்தன்மையின் மகிழ்ச்சி எங்கே சென்றது ?" என்று வாசகர்களைப் பார்த்துக் கேட்கிறார் .
The degree of slowness is directly proportional to the intensity of memory; the degree of speed is directly proportional to the intensity of forgetting.

ஆசிரியர் ஒரு நாட்டுப்புற வீட்டிற்கு செல்கிறார் .அங்கு அவர் ஒரு புத்தகத்தை  ( ''Point de Lendemain'' (''No Tomorrow''), by Vivant Denon) நினைவு கூறுகிறா ர்.கதை முன்னும் பின்னுமாக செல்கிறது . அது 200 வருடங்களுக்கு முன்னாள் அதே வீட்டில் நடந்த காதல் கதை. அதில் ஒரு குதிரை வீரன் அந்த வீட்டின்  முதலாளி அம்மாவால் தனது காதலுக்கு உபயோகப்படுத்தப்படுகிறன்.  ஆசிரியர்  தனது நண்பன் வின்சென்டை இந்நாள்  குதிரை வீரன் போல சித்தரிக்கிறார். வின்சென்டிற்கும் ஜூலிக்கும் உள்ள உறவு மிக வேகமாக ஒரே நாளில் வளர்கிறது.  குந்தேரா இந்த வேகமான காதலை விட அந்த பழைய காதலே  அது   ஒரு நாடகமாக இருந்தால் கூட சிறந்தது போல சித்தரிக்கிறார் . அதை இவ்வாறு விவரிக்கிறார்  ''Everything is composed, connected, artificial, everything is staged, nothing is straightforward, or in other words, everything is art; in this case: the art of prolonging the suspense, better yet: the art of staying as long as possible in a state of arousal.

 அது ஒரு பக்கமிருக்க மற்றொரு பக்கம் ஆசிரியர்  பிரெஞ்சு  அறிவுஜீவிகளை "dancers" என்று அழைக்கிறார்.அவர்கள் தங்கள் அரசியலுக்காக ஒழுக்க நெறிகளை பின்பற்றுபவர்கள், அவர்கள் தங்கள் வாழ்நாளில் எதையும் சாதிக்கப் போவதில்லை என்கிறார்.   புகழ் என்பது எவ்வாறு கேமராவின் கண்டுபிடிப்பால் மாறியது என்று எடுத்துக்காட்டுடன் விவரிக்கிறார்.இந்த கதையின் இறுதியில் அந்த குதிரை வீரனும் வின்செண்டும் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள் ஆனால் எதுவும் பெரிதாக நிகழவில்லை. வின்சென்ட் வேகமா அந்த சந்திப்பை கடந்து விடுகிறான் .
Because beyond their practical function, all gestures have a meaning that exceeds the intention of those who make them; when people in bathing suits fling themselves into the water, it is joy itself that shows in the gesture, notwithstanding any sadness the divers may actually feel. When someone jumps into the water fully clothed, it is another thing entirely: the only person who jumps into the water fully clothed is a person trying to drown; and a person trying to drown does not dive headfirst; he lets himself fall: thus speaks the immemorial language of gestures.” 
இதுவே குந்தேராவின் முதல் பிரெஞ்சு நாவல் ஆங்கில மொழியாக்கம் எளிய நடையில் மிகவும் நன்றாகவுள்ளது .சில இடங்களில் குழப்பமாக இருந்தாலும் கதையின் கருப்பொருள் வாசகனை முன்னே நகர்த்துகிறது .என்னை மிகவும் பாதித்து ஆசிரியரின் மெதுத்தன்மையைக் குறித்த கருத்துக்கள்தான். இந்த 'selfie' உலகில் எவருக்கும் எதையும் நின்று நிதானமாக செய்யும் பழக்கம் இல்லாமல் போய்விட்டது.நான் இந்த புத்தகத்தை தாய்லாந்திற்கு செல்லும் விமானத்தில் வாசித்தேன். என்னவோ தெரியவில்லை தாய்லாந்தில் சென்ற இடங்களில் எல்லாம் நிதானமாக நின்று ரசித்தேன் புகைப்படம் எடுப்பதைவிட.  என்னைப் பொறுத்தவரை  இதுவே இந்த புத்தகத்தின் வெற்றி.

வாசிக்க வேண்டிய புத்தகம். 

Tuesday, August 1, 2017

காதல் கலை ( The Art Of Love - Ovid)


கிறிஸ்து பிறப்பிற்கு  முன் எழுதப்பட்ட இந்த புத்தகத்தைத் படித்தவுடன் நினைத்தது   இந்நூலில் ஆசிரியர் கூறும் பெரும்பாலான கருத்துகள் இன்றும் பொருந்தும் என்றுதான். இந்த புத்தகம் பெண்கள் எவ்வாறு ஆண்களை கவருவது மற்றும் ஆண்கள் எவ்வாறு பெண்களை காதல் கொள்ள வைப்பது என்று கூறுகிறது.  இந்நூலை எழுதிய ஆசிரியர் கண்டிப்பாக நிறைய படித்தவராகத்தான் இருப்பார் .
"If you want to be loved, be lovable."
"உங்களில் யாராவது  காதல் கலை அறியாதவர்களென்றால்  , அவன் இந்த நூலை படித்து இந்த ஞானத்தைப் பெற்றுக்கொள்ளட்டும் " இப்படித்தான் இந்த நூல் தொடங்குகிறது. ஒரு ஆண் பெண்களிருக்கும் இடத்தில்  எப்படி பேச வேண்டும் , எப்படி மது அருந்த வேண்டும் , எப்படி காதலியின் சேவகியை நடத்த வேண்டும். அது போல பெண்களுக்கும் பல ஆலோசனைகளை ஆசிரியர் கூறுகிறார்.

ஏன் ஓவிட் இந்த நூலை எழுதினார் என்பதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.பேரரசர் அகஸ்டஸின் திருமண சட்டத்திற்கு எதிராக எழுதப்பட்டது என்று பெரும்பாலோரால் நம்மப்படுகிறது. இந்த புத்தகம்
"The Art of Love" மற்றும் "The Cure For Love" என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நூலிலுள்ள சில "quotes" :

Yield to the opposer, by yielding you will obtain the victory.
Love is a kind of warfare.
A field becomes exhausted by constant tillage.
Chance is always powerful. Let your hook always be cast; in the pool where you least expect it, there will be fish.
Let who does not wish to be idle fall in love.
Who is allowed to sin, sins less.
Love yields to business. If you seek a way out of love, be busy; you'll be safe then.

 படித்து ரசிக்கலாம்.