Monday, March 9, 2020

ரன்னிங் டைரி -78

07-03-2020 14:30
கிழக்கு கடற்கரை பூங்கா

மழை மேகம். வாக்மேனில் "மாசி மாசம்" ஆரம்பித்தது.  ஓட ஆரம்பித்தவுடன் ஹார்ஸ் மந்தர் (Harsh Mander)தான் நினைவில் வந்தார். அவருடைய பல கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். தற்போது அவர் மேல்  இந்திய அரசு கேஸ் பதிவு செய்துள்ளது. பார்ப்போம். அப்படியே படித்து கொண்டிருக்கும் "கரமுண்டார் வூடு" நாவலின் கதை ஞாபகம் வந்தது. பெண்கள் இல்லையென்றால் குடும்பம் இல்லை. ஆனால் ஆண்கள் அவர்களை எப்போதும் புரிந்துகொள்வதே இல்லை. "Gardens By The Bay" பக்கமாக ஓடினேன். லேசாக மழை தூர ஆரம்பித்தது. மழை வேகமாக பெய்ய ஆரம்பிக்க முன் வீடு திரும்ப வேண்டுமென்று வேகமாக ஓட ஆரம்பித்தேன். மழைதான் எவ்வளவு மகிழ்ச்சியானது. மழையில் நனைந்து கொண்டே வீடை அடைந்தேன்.

No comments: