Tuesday, March 17, 2020

ரன்னிங் டைரி -81

15-03-2020 05:05
வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை அங்கிருந்து கேலாங் மார்க்கெட் வரை

சாலையில் ஒருவரும் இல்லை. பெரும் அமைதி. எனக்கு திடீரென்று பயம் வந்தது. பல தடவை இந்நேரத்தில் ஓடி இருக்கிறேன் ஆனால் இன்று ஏதோ ஒன்று வித்தியாசமாக தெரிந்தது. கவனத்தை மூச்சில் நிறுத்தி ஓட ஆரம்பித்தேன். மிகவும் வேகமாக ஓடினேன். எதுவும் மனதில் ஓடவில்லை. கிழக்கு கடற்கரையை அடைந்தேன். சற்று நேரம் கடல் அருகில் சென்று நின்றுவிட்டு கரையில் சில நிமிடங்கள் நடந்தேன். என்ன ஒரு புத்துணர்வு. கடல் என்றும் என்னை ஆச்சிரியப்படுத்த தவறியதில்லை. இன்றும் அப்படியே அரை நிலவில் கடல் மேலும் அழகாக இருந்தது. இந்த வாரமும் சர்ச்சில் பூசை இல்லை என்று தோன்றியவுடன் மீண்டும் ஓட ஆரம்பித்தேன். நேராக மார்கெட்டிற்கு ஓடினேன். மனதில் என்னென்ன வாங்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன். கனவாய் வாங்கவா வேண்டாமா என்ற கேள்வியுடன் மார்க்கெட்டை அடைந்தேன்.

No comments: