Monday, September 30, 2019

ரன்னிங் டைரி -9

29-09-2019 (05:30)
The Straits Times Run


காலை 3:50 மணிக்கே கண் முழித்துவிட்டேன்.ஒரு black காபி போட்டு குடித்துவிட்டு ஓட்டத்திற்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தேன். ஓட்டம் நடக்கும் இடத்திற்கு நடந்தே சென்றேன்.குளிர்ந்த காற்று காற்றில் புகை இல்லை. ஓடுவதற்கு ஏற்ற climate.

ஓட்டம்  சற்று தாமதமாக துவங்கியது. வாக்மேனை on செய்தபோது "கல்யாண மாலை" பாட ஆரம்பித்தது. முன்னாள் ஓடியவரின் கால்களைத் தவிர எதையும் பார்க்காமலும் யோசிக்காமலும் ஒரு சீரான வேகத்தில் ஓட ஆரம்பித்தேன்.கிட்டத்தட்ட 10 கி மீ  அப்படியே ஓடினேன் .  அப்புறம் சற்று வேகத்தை கூட்டினேன் ஆனால் வெகுதூரம் அந்த வேகத்தில் ஓட முடியவில்லை. பயிற்சி போதாது. திடீரென்று என்னை தாண்டி ஒரு பெண் ஓடினார்.அவருக்கு ஒரு கால் நீளம் சற்றுக் குறைவு. நான் அவரை அடுத்த 4 கி மீ பின் தொடர்ந்தேன். நானும் அவரும் ஒரே வேகத்தில் ஓடினோம். வேறு எதையும் எண்ணவில்லை. ஒரு கிலோமீட்டர் மீதம் இருக்கையில் நான் அவரை கடந்த சென்றேன். வழக்கத்தைவிட மெதுவாகத்தான் இந்த போட்டியை முடித்தேன். போட்டியை முடித்துவிட்டு வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அதே பெண் என்னை கடந்து நடந்து சென்றார். அப்போதுதான் முகத்தைப் பார்த்தேன். எப்படியும் ஐம்பதிற்கும் மேல் இருக்கும். ஓட்டத்திற்கு வயது ஒரு தடை இல்லை.

நான் எதிர்பார்த்த மாதிரி இந்த ஓட்டம் அமையவில்லை. இருந்தாலும் இவ்வளவு பேருடன் ஓடியது ஒரு பெரும் அனுபவம். எடுத்து சென்ற energy gel-ஐ தொடவே இல்லை. எந்தெந்த பாடல்கள் ஒலித்தன என்றும் தெரியவில்லை ஆனால் ஓட்டம்  முடிந்து வாக்மேனை off செய்யும்போது கவனித்தேன் "கண்ணே கலைமானே " ஓடிக்கொண்டிருந்தது.

No comments: