Tuesday, September 24, 2019

ரன்னிங் டைரி -8

23-09-2019 18:20
அலுவதிலிருந்து வீடுவரை

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சிங்கப்பூர் புகையால் சூழ்ந்துள்ளது. இந்தோனேசியாவில் எரியும் காட்டிலிருந்து வரும் புகை தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியுள்ளது. வெளிப்புற நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டுமென்று சிங்கப்பூர் அரசு அறிவித்திருக்கிறது.இன்று ஓடலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டே ஓட ஆரம்பித்தேன். புகை அப்படியொன்றும் மோசமில்லை ஆனால் நினைத்த தூரம் ஓடவில்லை.

ஓட ஆரம்பித்தவுடன் "Hawdy Modi!" தான். எங்க போய் முடியும்னு தெரியல. ஆனால் ஒரு விசயம் இந்திய அரசு எந்த காரணத்தைக் கொண்டும் டிரம்ப நம்பக்கூடாது. அவர்கள் அவர் சொல்வதையெல்லாம் சந்தோசமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.என்னத்த சொல்ல.  அப்படியே கிரேட்டா தன்பர்க் பக்கம் எண்ணம் சென்றது. இந்த பெண்ணை பாராட்டிதான் ஆக வேண்டும். அமெரிக்க குடியரசு கட்சி செனட்டர்கள் பலஇந்த சிறுமியைக் கண்டு அஞ்சுவதாக படித்த ஞாபகம். குழந்தைகள்தான் இயற்கையை அப்படியே ரசிப்பவர்கள். நூலகம் வந்தவுடன் ஓடுவதை நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.
                                                                                                                                    
எந்தெந்த பாடல்கள் ஒலித்தன என்று ஞாபகமே இல்லை.                                                                                                                                                                                                                                                                                                               


No comments: