Saturday, March 20, 2021

ரன்னிங் டைரி - 190

20-03-2021 06:25

கிழக்கு கடற்கரை பூங்கா

வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் எமிலி டிக்கின்ஸன் எழுதிய  "Because I could not stop for death.." கவிதை ஞாபகத்தில் வந்தது. நேற்று இரவு "Poetry for beginners -Margaret Chapman & Kathleen Welton" புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.அதில் இந்த கவிதை இருந்தது. வெகுநாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்த கவிதையை வாசித்தேன்.அற்புதமான கவிதை -இறப்புடன் ஒரு பயணம். சற்று தூரம் நடந்து விட்டு போனில் மொசார்டின் -Symphony 41 in C Minor" play செய்துவிட்டு ஓட ஆரம்பித்தேன். ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது மாநில உரிமைகள் பற்றிய "one nation .." இந்த கட்டுரைதான். இந்த தேர்தல் தமிழ் நாட்டிற்கு மிகவும் முக்கியமான ஒன்று. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்த சிறிது நேரத்திலேயே இருவர் என்னை முந்திச் சென்றனர். நான் அவர்களை பின்தொடர ஆரம்பித்தேன்.பதினெட்டு நிமிடங்களில் அவர்களுடன் நான் நான்கு கிலோமீட்டர்களுக்கு மேல் ஓடிருந்தேன். அதற்குமேல் என்னால் அந்த வேகத்தில் ஓட முடியவில்லை. வேகத்தை மிகவும் குறைத்தேன். கவனம் சிம்பனியில் சென்றபோது மொசார்ட் தனி உலகை படைத்துக் கொண்டிருந்தார். எனக்குப் பிடித்த சிம்பனிகளில் இதுவும் ஒன்று. சில நாட்களுக்குப் பிறகு இன்றுதான் கேட்டேன்."Amadeus" திரைப்படம் ஞாபகத்தில் வந்தது. இது மொசார்டின் இறுதி சிம்பனி.அவருடைய இறுதி மூன்று சிம்பனிகள் அடுத்தடுத்து வெகு குறைந்த நாட்களில் எழுதப்பட்டது. மூன்றும் அற்புதமானவை. மூன்றையும் ஒன்றன் பின் ஒன்றாகா கேட்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் .இந்த சிம்பனிகள் ..  One of the greatest artistic achievement.. என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: