Monday, March 1, 2021

ரன்னிங் டைரி - 180

01-03-2021 08:32

கிழக்கு கடற்கரை பூங்கா 

இன்றிலிருந்து ஓடும்போதெல்லாம் ஒரு கவிதை நினைவில் இருந்து சொல்லவேண்டுமென்று நேற்று இரவு முடிவு செய்தேன். அதென்ன படியே இன்று காலையில் எழுந்தவுடன் HW  Longfellow  எழுதிய  "A  Psalm of Life " என்ற கவிதையை வாசித்தேன். வாக்மேனில் பாடல் ஏதும் போடாமல் ஓட ஆரம்பித்தேன் . வாசித்த கவிதையைச் சொல்லிப் பார்த்தேன். என்னால் முழுவதையும் ஞாபகத்தில் இருந்து சொல்ல முடியவில்லை. முதல் இருவரிகள் மற்றும் இரண்டு stanzaகளும் மட்டும் தான் நினைவில் இருந்தது.

Life is real! Life is earnest

   And the grave is not its goal.

Dust thou art, to dust returnest,

   Was not spoken of the soul.


Lives of great men all remind us

   We can make our lives sublime,

And, departing, leave behind us

   Footprints on the sands of time;

ஓடிக் கொண்டே தொலைபேசியை எடுத்து Poetry Foundation வலைத்தளத்தில் இந்த கவிதையை மீண்டும் வாசித்தேன். முழுவதும் வாசித்து முடித்தவுடன் இளையராஜா பாடல்களை shuffle-லில் போட்டுவிட்டு ஓடினேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது வெய்யில் முகத்தில் அறைந்தது. இன்று வழக்கத்திற்கு மாறாக தண்ணீர் பாட்டில் எடுத்து சென்றது மிகவும் உதவியாய் இருந்தது. தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும் போது "Metanoia" என்ற வார்த்தை மனதில் தோன்றியது. எங்கு படித்தது ? யாரவது சொல்லிய வார்த்தையா? என்று யோசித்துக் கொண்டே ஓடினேன். ஆறு கிலோமீட்டர் ஓடிய பிறகு திடீரென்று ஞாபகத்தில் வந்தது Father Raniero Cantalamessa அவர்களின் உரையில் படித்தது. இந்த தவக்காலத்தில் தெரிந்துக் கொள்ளவேண்டிய வார்த்தைதான். திரும்பி ஓடிவரும் போதுதான் கவனம் ஓடிக் கொண்டிருந்த பாடலில் சென்றது மனோவும் சித்ராவும்  "குடகு மலை .." பாடிக் கொண்டிருந்தனர். ஏனோ நேற்றுப் பார்த்த மௌனராகம் திரைப்படம் ஞாபகத்தில் வந்தது. ஜானகி அம்மாவிற்கும் சுவர்ணலதாவிற்கும் இடைப்பட்ட வசீகரக் குரல் சித்ராவிற்கு. என் playlist-ல் சித்ராவின் பாடல்கள்தான் அதிகம். மலையாளம் தெலுங்கு உட்பட.எதிரே ஓடி வந்தவரால் கவனம் பாடலில் இருந்து அவரிடம் சென்றது. பல தடவை பார்த்த அந்த தாத்தா என்னைப் பார்த்து கைகாட்டி சிரித்தார். நானும் அவ்வாறே செய்தேன்.இன்று செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன் .

No comments: