Saturday, March 13, 2021

ரன்னிங் டைரி - 187

13-03-2021 06:05

கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட ஆரம்பித்தவுடன் எண்ணத்தில் தோன்றியது ராபெர்ட் ஜி இங்கர்ஸல் எழுதிய "The Creed Science" தான். எவ்வளவு உண்மை. இன்று இது எவ்வளவு அவசியம். மீண்டும் வரிகளை சொல்லிப் பார்த்தேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது போனில் playlist-ஐ shuffle-ல் போட்டுவிட்டு ஓடினேன். காந்தி  எழுதிய "The Ideal Bhangi" என்ற கட்டுரைதான் முதலில் எண்ணத்தில் வந்தது . நேற்று இரவு மனித கழுவுகளை அகற்றுவதைப்  பற்றிய தொடர் ஒன்றை பfirstpost இணையதளத்தில் படித்தேன். அதன் விளைவு இன்று ஓடும்போது இந்த கட்டுரை ஞாபகத்தில் வந்தது. என்னை முந்திக் கொண்டு இருவர் ஓடினர். நான் அவர்களைப் பின்தொடர முடிவு செய்தேன். அப்படியே அவர்களின் பின் ஏழு கிலோமீட்டர் ஓடினேன். அவர்கள் தொடர்ந்து ஓடினார்கள். நான் திரும்பி ஓடினேன். பாடலுக்கு கவனம் சென்றபோது "காதல் மகாராணி .." ஓடிக் கொண்டிருந்தது. என்ன beat ! .  ஒருவர் தனியாக நீந்திக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்த்துக் கொண்டே ஓடினேன். அவர் கடலில் மிதந்தார். ஒரு நாய் கரையில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தது. நான் playlist-ஐ நிறுத்திவிட்டு கடலைப் பார்த்துக் கொண்டே ஓடினேன். குளிர்ந்த காற்று. நான் பல போட்டிகளில் பார்த்த ஒருவர் என்னைக் முந்திச் சென்றார். நான் அவருடன் ஓட ஆரம்பித்தேன். அவர் ஒரு தமிழர். நான் பெயரைக் கேட்கவில்லை. ஆனால் அவர் தமிழில் கைபேசியில் பேசிக் கொண்டே ஓடினார். ஐந்து கிலோமீட்டர் அவருடன் ஓடினேன். அதன்பிறகு நான் திரும்பி முக்கிய சாலைக்கு ஓடினேன். அங்கிருந்து மளிகை கடைக்கு சென்று நின்றேன். கடைக்காரர் "இளையராஜா இல்லையென்றால் நமக்கு கஷ்டம்தான்" என்றார். நான்  "ஓடுவதற்கும் அவர் தேவை கடை திறப்பதற்கும் அவர் தேவை"  என்றேன். மளிகை பொருட்கள் வாங்கிக் கொண்டு வீட்டை அடைந்தேன்.

No comments: