Wednesday, March 17, 2021

ரன்னிங் டைரி - 189

17-03-2021 08:26

கிழக்கு கடற்கரை பூங்கா

ஓட ஆரம்பித்தவுடன் மனதில் வந்தது புக்கவோஸ்கி எழுதிய "The Laughing Heart" கவிதைதான் . வெகுநாட்களுக்குப் பிறகு நேற்று இந்த கவிதையை மீண்டும் வாசித்தேன். கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தவுடன் போனில் பாடல்களை ஓட விட்டேன். எழுத்தாளர் சரவணன் கார்த்திகேயன் அவர் இளையராஜாவின் பாடிய பாடல்களை "Voice of God" என்ற folder-ல் வைத்திருந்ததாக ஒரு பதிவில் எழுதி இருந்தார். நான் "என்னோட ராஜா" என்ற ஒரு playlist வைத்திருக்கிறேன். அதைத்தான் இன்று ஓடவிட்டேன்.  "அடி ஆத்தாடி .." என்று ஆரம்பித்தது. ராஜாவின் குரல் ஒரு தனி வகை. ஏனோ கவனம் முழுவதும் இசையில் தான் இருந்தது. மனதில் ஏதும் தோன்றவில்லை. வீட்டை அடையும்போது  "எம் பாட்டு எம் பட்டு .."  என்று ராஜா பாடிக்கொண்டிருந்தார்.

No comments: