Tuesday, March 9, 2021

ரன்னிங் டைரி - 185

 08-03-2021 18:25

கிழக்கு கடற்கரை பூங்கா 

மழை மேகம். playlist-ஐ ஆரம்பித்து விட்டு ஓடத் தொடங்கினேன்."என்ன சத்தம் இந்த நேரம் .."  ஆரம்பித்தது. பல நாட்களுக்குப் பிறகு இன்றுதான் சாயங்காலம் ஓடினேன். உடம்பு இந்த சூழலுக்கு சரிசெய்ய பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது. கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தபோது ஒரு சீரான வேகத்தை அடைந்தேன்.எக்கச்சக்கமான இந்தியர்கள் நடந்து கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்தனர். பெரும்பாலோர் பேசிக் கொண்டே நடந்தனர். ஆறு கிலோமீட்டருக்குப் பிறகு பீத்தோவனின் ஒன்பதாவது சிம்பனியை ஓடவவிட்டேன். ஏனோ இந்த சிம்பனியை கேட்கும்போதெல்லாம் வேறெந்த நினைப்பும் வருவதில்லை. கவனம் முழுவதும் இசையில் மட்டுமே இருந்தது. பீதோவனோடு வீட்டை அடைந்தேன்.

No comments: