Saturday, May 30, 2020

ரன்னிங் டைரி - 87

30-05-2020 06:23
தஞ்சோங் காத்தோங் ரோடு

குளிர்ந்த காற்று மழை வரும் என்று எண்ணிக் கொண்டே ஓட ஆரம்பித்தேன். கடற்கரைக்கு செல்லும் பாதையிலிருந்து விலகி எங்கு செல்ல என்று தெரியாமல் ஓடினேன். ட்ராபிக் சிக்னல் வந்தவுடன் மீண்டும் தெரிந்த பாதைக்கே வந்தேன். பின் புறம் இருக்கும் மைதானத்தைச் சுற்றி ஓடலாம் என்று எண்ணி அந்த பக்கம் ஓட ஆரம்பித்தேன். மனதில் இந்திய சீன எல்லையில் என்ன நடக்கிறது என்று எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. நான் நின்று பாடலை மாற்றினேன். இளையராஜா வழக்கம்போல் தனது மேஜிக்கை நிகழ்த்த ஆரம்பித்தார். மனம் பாம்பன் பாலத்திற்கு சென்றது. அங்கு இந்நேரம் எப்படி இருக்கும் என்று எண்ணிக் கொண்டே ஓடி முடித்தேன்.

No comments: