Thursday, May 21, 2020

ரன்னிங் டைரி - 86

21-05-2020 06:40
தஞ்சோங் காத்தோங் ரோடு

இன்று வாக்மேன் இல்லாமல் ஓடினேன். குளிர்ந்த காற்று என்னை உற்சாகப்படுத்தியது. இன்றும் மிக மெதுவாகவே ஓடினேன். ஓட ஆரம்பித்தபோது ஞாபகத்தில் வந்தது அம்பேத்கரின் "Annihilation of Caste". முக்கியமான இந்த நூல் (உரை ) வந்து மே பதினைந்தோடு 84 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சாதி தனது ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டுதான் இருக்கிறது. நான் "Annihilation of Caste" உரையை சென்ற வருடம்தான் முதன் முதலில் படித்தேன். படித்து முடித்தபோது தோன்றியது இவ்வளவு தெளிவாக சாதியைப் பற்றி ஒருவரால் எழுத முடியுமா என்றுதான். "மனுஷன் பின்னிடாரு"-னு தான் தோணுச்சு. அம்பேத்கர் எழுதிய அனைத்தும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. அம்பேத்கரின் புத்தகங்களை மேலும் படிக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

அம்பேத்கர் எழுதியது தமிழில் 

No comments: