Tuesday, May 19, 2020

ரன்னிங் டைரி -85

19-05-2020 05:35
தஞ்சோங் காத்தோங் ரோடு

நாற்பது நாட்களுக்குப் பிறகு இன்று ஓடினேன். ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. மிகக் குறைந்த தூரமே ஓடினேன். மிக மெதுவாக ஓடினேன். வாக்மேனில் இளையராஜா தனது மேஜிக்கை நிகழ்த்த ஆரம்பித்தார். என் எண்ணம் முழுவதும் எதையும் தொடக் கூடாது என்று சொல்லிக் கொண்டே இருந்தது. ஐந்து நிமிடத்தில் நேற்று என் அலுவலக நண்பர்களிடம் பேசிய விசயம்தான் ஞாபகத்தில் வந்தது.  எனக்கு தெரிந்த சில சிறு IT கம்பெனிகள் இந்த பொருளாதார தாக்கத்தை சமாளிக்க அரசின் சலுகைகளுக்காக எதிர் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசின் தற்போதைய அறிக்கையில் அவர்களுக்கு ஏதும் இல்லை என்று நேற்று இரவு என்னிடம் புலம்பினார்கள். எனக்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை. நாங்கள் யாரையும் வேலையை விட்டு தூக்கவில்லை மாறாக எங்கள் பாஸ் அனைவருக்கும்  சம்பளத்தோடு ஒரு fixed தொகையையும் நெருக்கடியை சமாளிக்க இந்த மாத தொடக்கத்தில் கொடுத்தார். வரும் மாதங்கள் எப்படி இருக்கும் எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன் .

No comments: