Wednesday, August 19, 2020

ரன்னிங் டைரி - 93

19-08-2020 08:45

உபியிலிருந்து (Ubi) வீடுவரை 

மகனை பள்ளியில் விட்டுவிட்டு ஓட ஆரம்பித்தேன். அவனை விட்டுவிட்டு வரும்போதெல்லாம் எனக்கு கண்ணீர் வரும். இன்றும் அப்படியே கண்ணீரைத்  துடைத்துக் கொண்டு ஓட ஆரம்பித்தேன். நேற்று பல பாடல்களை வாக்மேனில் ஏற்றினேன். ஓட ஆரம்பித்தவுடன் "சங்கீத மேகம்" எஸ் பி பியின் குரலில் ஆரம்பித்தது.சிலரை நாம் நம் வீட்டில் ஒருவர்போல் நினைத்துக் கொள்வோம் அதில் ஒருவர்தான் எஸ் பி பி. அவருக்கு உடல்நலம் சரியில்லை என்றதும் எனக்கு ஒருவிதமான பயம் ஏற்பட்டது. அவர் நலமாக வேண்டுமென்று எண்ணிக் கொண்டே ஓடினேன்.யூனுஸ் பஸ் ஸ்டாப் அருகில் வந்தவுடன் நான் மிகவும் விரும்பி சாப்பிடும் சூப் நூடுல்ஸ் ஞாபகம் வந்தது. அதைச் சாப்பிட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.வாயில் எச்சி ஊறியது. என்ன செய்ய என்று  என்னை நானே கேட்டுக் கொண்டேன். வீட்டை அடையும் வரை  எண்ணம் முழுவதும் சாப்பிட்டிலேயே இருந்தது. 

No comments: