Tuesday, January 21, 2020

If Cats Disappeared From The World - Genki Kawamura


In order to gain something, you have to lose something.

சில திரைப்படங்களை "feel good movie"-னு சொல்வோம். அந்த மாதிரி இந்த புத்தகம்ஒரு "feel good" வாசிப்பு. ஆனால் நம்மை பெரிதும் சிந்திக்க வைக்கிறது. ஒரு இளம் தபால்காரர் தனக்கு மூளை கேன்சர்  இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறார்.இன்னும் சில நாட்களே உள்ளன அதனால் தான் விருப்புவதை செய்யாலாம் என்று எண்ணி ஒரு பட்டியலை(bucket list) போடுகிறார். திடீரென்று அவனை போலவே உருவமுள்ள ஒரு பேய் தோன்றுகிறது. அது அவனிடம் பேரம் பேசுகிறது அதாவது தான் அவனுக்கு இருக்கும் வாழ் நாட்களில் மேலும் ஒரு நாள் தருவதாகவும் அதற்கு அவன் பேய் ஏதாவது ஒன்றை மறைய ஒப்புக் கொள்ளவேண்டும் என்கிறது. ஒவ்வொரு முறை மறையவைக்கும் போது ஒரு நாள் கூடும்.அவனுக்கு அது என்றும் பெரிதாக தெரியவில்லை அதனால் சம்மதிக்கிறான். அந்த பேயை அலோஹா என்று அழைக்கிறான்.
Like love, life is beautiful because it has to end.
முதலில் உலகளிலுள்ள அனைத்து தொலைபேசிகளும் மறைய வைக்கப் போவதாக சொல்லி அதற்கு முன் யாருக்காவது ஒரு தடவை அழைத்துக் கொள்ளலாம்  என்கிறது அலோஹா. அவன் அவனது முன்னாள் காதலியை  அழைக்கிறான்.அவர்கள் அவர்களின் உறவைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். அவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கு அவர்கள் இருவரும் முக்கியமான நேரத்தில் பேசிக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் அவன் அதை இப்போது தான் உணர்கிறான்.
With freedom comes uncertainty, insecurity, and anxiety. Human beings exchanged their freedom for the sense of security that comes from living by set rules and routines—despite knowing that they pay the cost of these rules and regulations with their freedom.
இரண்டாவது அனைத்து திரைப்படங்களும்  மறைய வைக்கப் போவதாக சொல்லி அதற்கு முன் அவன் விரும்பிய படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்கிறது. அவன் "Limelight" என்கிற சார்லி சாப்ளின் படத்தை தேர்வு செய்து முன்னாள் காதலி வேலை செய்யும் திரை அரங்கிற்கு செல்கிறான். ஆனால் அங்கு சென்றபின் தான் தெரிகிறது. அந்த dvd கவரில் ஒன்றும் இல்லையென்று. அப்போது தன் அப்பாவோடு பார்த்த திரைப்படம் ஞாபகத்தில் வருகிறது. அவனுக்கு கண்ணீர் வழிந்தோடுகிறது.

மூன்றாவதாக அனைத்து கடிகாரங்களையும்  மறையவைக்கிறது அலோஹா. அவன் நேரமே ஒன்று இல்லாததாக உணர்கிறான். நேரம் என்பதை மனிதன் இயற்கைக்கு எதிராக ஏற்றுக் கொண்டுவிட்டான் என்று எண்ணுகிறான்.  அவனது அப்பா கடிகாரங்கள் சரி செய்பவர். அவருக்கு என்ன ஆகும்?நான்காவதாக அனைத்து பூனைகளையும் மறையவைக்கிறது அலோஹா. அப்போது அவன் அவனுக்கும் பூனைகளுக்குமான உறவைப் பற்றி சிந்திக்கிறான். அவனது தாய் இறந்த பிறகு அவனோடு இருப்பது ஒரு பூனை மட்டும்தான் . அவனது தாய் ஒரு பூனை வந்த பிறகே மீண்டும் புத்துயிர் பெற்றாள். அவன் வாழ்க்கையில் பூனைகள் பெரும் பங்கு வகிக்கிறது. அவனுக்கு தனது பூனையின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கதையின் இடையில் அவனின் பூனை அவனோடு பேசுகிறது.
Love has to end. That’s all. And even though everyone knows it they still fall in love. I guess it’s the same with life. We all know it has to end someday, but even so we act as if we’re going to live forever.
இறுதியாக அவன் இந்த உலகைவிட்டு மறைவதற்கு முன் தன் அப்பாவிற்கு கடிதம் எழுத ஆரம்பிப்பதோடு கதை முடிகிறது. அப்பா நான்கு தெரு தாண்டிதான் இருக்கிறார் ஆனால் கடந்த நான்கு வருடங்களில் ஒருமுறை கூட அவரை சென்று பார்க்கவில்லை . எப்பவோமே நாம் நம் அருகில் இருப்பதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவே மாட்டோம்  ஆனால் அது அல்லது அவர்கள் இல்லாமல் போகும்போது தான் அதன்/அவர்களின் சிறப்பை நாம் உணர்வோம். நாம் வாழ்வில் எது முக்கியம் என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும். சிறந்த உறவுகள்தான் வாழ்க்கை மிகவும் முக்கியம் இக்கதையும் அதையே சொல்கிறது .

வாசிக்கலாம்.