Monday, January 6, 2020

ரன்னிங் டைரி -47

04-01-2020 14:25
கிழக்கு கடற்கரை பூங்கா

இன்று மழை மோகத்துடன் இருந்ததால் மதியம் ஓடினேன். வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன் மழை தூரியது . இதமாக இருந்தது. வாக்மேனை எடுத்துச் செல்லவில்லை. கடற்கரையை அடைந்தபோது மழை சுத்தமாக நின்றிருந்தது. வெய்யில் வேகமாக அடித்தது.பூங்காவில் கூட்டமில்லை. சமீபத்தில் மீண்டும் பார்த்த "Tokyo Story" திரைப்படம் மனதில் தோன்றியது. எவ்வாறு குழந்தைகள் பெற்றோர்களைவிட்டு பிரிகிறார்கள் என்பதை மிகவும் அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் யசுஜிரோ ஓஸு. என்ன ஒரு அற்புதமான திரைப்படம். அவரின் மற்ற திரைப்படங்களையும் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தேன். இந்த படத்தின் காட்சிகள் மனதில் ஓடியபடியே ஓடி முடித்தேன்.


No comments: