Thursday, January 9, 2020

ரன்னிங் டைரி -49

08-01-2020 18:16
அலுவகத்திலிருந்து வீடுவரை

ஓட ஆரம்பித்ததிலிருந்து ஒரே ஒரு சிந்தனைதான் மனதில் ஓடியது. ஒரு வாட்சப் குரூப்பில் நண்பன் ஒருவன் இனிமேல் குரூப்பில் அரசியல் பதிவுகள் அனுப்பக் கூடாது என்று பதிவிட்டிருந்தான். ஏனோ அது என்னை உறித்திக் கொண்டே இருந்தது. தற்பொழுது நாட்டில் நடப்பதைப் பார்த்தல் அரசியல் பேசாமல் இருப்பது மிகவும் கடினம், நம்மையும் அறியாமல் பேசத்தான் செய்கிறோம். எதையும் ஆராயாமலும்  படிக்கமாலும் பதிவுகள் இடுகிறோம். யாராவது அதைப் பற்றிக் கேட்டல் நமக்கு கோபம் வருகிறது.முடிவில் உறவில் விரிசல் ஏற்படுகிறது.என்னத்த சொல்ல ... என்று எண்ணிக் கொண்டே ஓடி முடித்தேன்.

No comments: