Wednesday, June 19, 2019

Hector & The Search For Happiness - Francois Lelord


“Knowing and feeling are two different things, and feeling is what counts.” 
ஹெக்டர் ஒரு மனநல மருத்துவர். எல்லோரின் கவலைகளையும் பொறுமையுடன் கேட்பவர்.கேள்விகளைக் கேள்விகளால் எதிர் கொள்பவர்.  அவரிடம் வரும் அனைவருமே தாங்கள் மகிழ்ச்சியாகவில்லை என்றே கூறுகிறார்கள். அதனால் மகிழ்ச்சி என்றால் என்ன என்று அறிய ஒரு பயணம் செய்கிறார் அது தான் இந்த நாவலின் கதை.
“The basic mistake people make is to think that happiness is the goal!”
முதலில் சீனா செல்கிறான் அங்கு அவனது நண்போனோடு சுற்றுகிறான். அவன் நண்பன் வேலை வேலை என்று அலைபவன் . அதற்கு  அவன் கூறும் காரணங்கள் நம்மில் பலருக்கும் பொருந்தும். ஒரு பெண்ணோடு உறவு கொள்கிறான் அவளின் கதையைக் கேட்டு வருந்துகிறான். ஒரு புத்தத் துறவியை சந்திக்கிறான். அவர் பயணத்தின் இறுதியில் தன்னை வந்து சந்திக்குமாறு சொல்கிறார்.அடுத்து ஒரு ஆப்பிரிக்க நாட்டிற்கு செல்கிறன் அங்கு மற்றொரு நண்பனை சந்திக்கிறான். அவன் ஒரு மருத்துவர். மற்றொரு பெண்ணையும் அங்கு சந்திக்கிறான் ஏழ்மையில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அந்த நிகழ்வுகளை மகிழ்ச்சியா இல்லையா என்று எழுதிவைத்துக் கொள்கிறான்.
Making comparisons can spoil your happiness.Happiness often comes when least expected.Sometimes happiness is not knowing the whole story.Happiness is caring about the happiness of those you love.Happiness is feeling useful to others.Happiness is a certain way of seeing things.Many People see happiness only in their future.Many People think that happiness come from having more power and money.Happiness is knowing how to celebrate.
அமெரிக்கா செல்கிறான் அங்கு தனது முன்னாள் காதலியின் வீட்டில் தங்குகிறான். அவளை தான் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று எண்ணுகிறான். அவளது கணவன் மகிழ்ச்சியை கணக்கிட  ஒரு பார்முலா உருவாக்கலாம் என்று சொல்லி தான் எழுதிய பட்டியலைக் கேட்கிறான். இருவரும் சேர்ந்து ஒரு பார்முலா உருவாக்க முயல்கிறார்கள். ஹெக்டருக்கும் மகிழ்ச்சி பற்றி ஆராய்ச்சி செய்பவருக்கும் நடக்கும் உரையாடல் ஹெக்டரை தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. பயணம் முடிந்து அவன் புத்துயிர் பெற்று  மீண்டும் தனது மனநல மருத்துவத்தை தொடங்குகிறான். தனது காதலியுடன் வாழ்வை இனிதாக ஆரம்பிக்கிறான். பயணம் அவனை மாற்றியது . 

இந்த கதையில் எதையுமே ஆழமாக ஆராயவில்லை எல்லாமே மேலோட்டமாக சொல்லப்படுகிறது. அதுவே இப்புத்தகத்தை சிரமமில்லாமல் படிக்க முடிகிறது என்று நான் நினைக்கிறேன்.வாசிக்கும் போது  பல இடங்களில் சத்தமாக சிரித்தேன். இந்த புத்தகம் பிரெஞ்சில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .ஒரே அமர்வில் வாசிக்க கூடிய புத்தகம்.

வாசிக்கலாம்.

No comments: