Thursday, September 6, 2018

Colorless Tsukuru Tazaki and His Years of Pilgrimage - Haruki Murakami


Everything has boundaries. The same holds true with thought. You shouldn't fear boundaries, but you should not be afraid of destroying them. That's what is most important if you want to be free: respect for and exasperation with boundaries.
அது என்னவோ தெரியல  ஹருகி முரகாமி புத்தகம் என்றால் என்னை அறியாமலே வாசிக்க ஒரு ஆர்வம் . அந்த ஆர்வத்தில்தான் இந்த புத்தகத்தைப்  பார்த்தவுடன் வாசிக்க ஆரம்பித்தேன். இவருடைய முக்கிய கதாபாத்திரங்களில் ஒரு விதமான dullness இருக்கும் இதிலும் அப்படித்தான். சுக்குரு ஒரு என்ஜினீயர் ரயில் நிலயம் வடிவமைப்பவன். முப்பத்தியாறு வயதானவன்.அவனது வாழ்கை ஒரேவிதமான வழக்கங்களை (monotonous routine ) கொண்டது. அவனது தற்போதைய காதலி அவனைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவனது கடந்த காலத்தைப் பற்றி கேட்கிறாள். சுக்குரு தனது நெருங்கிய நண்பர்கள் தன்னை திடீரென ஒதுக்கி வைத்துவிட்டார்கள் தானும் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை என்கிறான்.
As we go through life we gradually discover who we are, but the more we discover, the more we lose ourselves.
சுக்குரு தன்னிடம் எந்த தனித்திறமையும் கலையறிவும் இல்லை என்று நம்புபவன்.மற்றவர்களோடு சரியாக பழகாதவன். அவர்கள் ஐந்துபேர் மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள்.அவர்கள் ஒரு கட்சிதமான பென்டகன் (Pentagon )போல. அவர்களுக்குள் ஒரு எழுதப்படாத விதி தங்களுக்குள் யாரும் dating செய்யக்கூடாது.சுக்குருவை தவிர அனைவரின் பெயர்களிலும் வண்ணத்தின் பெயருள்ளது. அதுவே தன்னை அவர்களிடமிருந்து பிரித்துக்காட்டுகிறது என்று நினைக்கிறான். ஏன் அவர்கள் தன்னை திடீரென ஒதுக்கிவைகிறீர்கள் என்று கேட்க தைரியமில்லாதவன்.
Talent is like a container. You can work as hard as you want, but the size will never change. It'll only hold so much water and no more.
காதலியின் உந்துதலால் பதினாறு வருடங்களுக்கு பிறகு தனது பால்ய நண்பர்களை ஒவ்வொருவராக சென்று பார்க்கிறான்.ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் நடந்தவற்றை விளக்குகிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம் அவனுக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவர்களின் ஒற்றுமைக்காக அவன் பலிகடாக்கப்படுகிறான்.ஒன்றன்பின் ஒன்றாக தனது ஆழ்மனதில் இருந்த ரகசியங்களும் அவனுக்கு வெளிப்படுகிறது. தான் யார்? தனது கடந்த காலம் எத்தகையது ? என பல கேள்விகள் அவனுள் எழுகிறது.அவன் தன்னைப்பற்றி மேலும் பல விவரங்களை தெரிந்துகொள்கிறான்.
You can hide memories but you can't erase the history that produced them.
மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம் ஹைடா. நீச்சல் குளத்தில் சந்தித்து நண்பனானவன். அவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகுகிறார்கள். ஹைடவும் திடீரென அவனை விட்டுச் செல்கிறான். அவன் ஏன் அப்படி செய்தான்? அவனுக்கு இவன்மேல் காதலா? அல்லது சுக்குருவின் கனவு ஹைடாவிற்கு எவ்வகையிலோ தெரிந்தா? பல கேள்விகளுடன் அந்த உறவு முடிகிறது.ஹைடாவிற்கும் மற்ற நான்கு நண்பர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றபோது ஏன் இந்த ஹைடா கதாப்பாத்திரம் இடையில் வருகிறது?
No matter how honestly you open up to someone, there are still things you cannot reveal. 
முரகாமி தனக்கே உரிய பாணியில் பலவித உளவியல் விசயங்களை சுக்குரு மூலம் விவரித்துள்ளார். ஒருவனை அவன் யாரென்று எப்படி மற்றவர்கள் முடிவு செய்கிறார்கள் என்பதையும் அந்த நான்கு நண்பர்களின் முடிவுகொண்டு விவரித்துள்ளார்.கனவில் வரும் கற்பழிப்புகள் மற்றும்  தன் புதிய ஆண் நண்பருடன் உறவு பற்றிய விவரங்கள் ஏன் என்றே தெரியாமல் தவிக்கும் சுக்குரு. ஏன் இந்த கனவுகள் வந்துகொண்டே இருக்கிறது என்று அவனுக்கு புரியவே இல்லை. இந்த பயணம் மற்றும் சந்திப்புக்கள் அவனுக்கு அமைதி தந்ததா ?  என்ற கேள்வி தொங்கிக்கொண்டே இந்த நாவல் முடிகிறது. முரகாமிக்கே உரிய நடையில் முடிகிறது. என்னைப் பொறுத்தவரை சுக்குரு தனது மன அமைதியை கண்டுகொண்டான் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவன் தேடல் நிற்கவே நிற்காது. அவனுடைய குணம் அப்படிதான் அவன் அதை அறியாவிட்டாலும்.
The human heart is like a night bird. Silently waiting for something, and when the time comes, it flies straight toward it.
எல்லா முரகாமியின் நாவலிலுள்ளது போல இதிலும் இசை முக்கிய கதாப்பாத்திரம்.இந்த நாவலில் பிரான்ஸ் லிஸ்ஸ்ட்டின்  (Franz Liszt ) Le mal du pays என்ற இசைக்கோவை வந்து கொண்டே இருக்கிறது. இந்த இசைக்கோவை  "Years of Pilgrimage" என்ற தொகுப்பில் உள்ளது. அற்புதமான பியானோ இசை இந்த நாவலை வாசிக்கும்போது பெரும்பாலும் நான் இந்த இசையைக் கேட்டேன் . நாவலில் இரண்டு விசயங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது . முதலாவது சுக்குருவின் வேலை - இரயில் நிலையம் வடிவமைப்பது. ஜப்பானில் ஒவ்வொரு ரயில் நிலையமும் ஒரு குட்டி கவிதையைப் போல அதிலும் நாகனோவிற்கு செல்லும் வழியிலுள்ள நிலையங்கள் மேலும் அழகு.சுக்குரு தன் வேலையை விரும்பி செய்கிறான். இரண்டாவது அவன் வார இறுதியில் தவறாமல் செய்யும் நீச்சல். நீச்சல் அவனுக்கு ஒரு புது உலகத்தைக் காட்டுகிறது. நீச்சலைப் பற்றி முரகாமி மிகவும் அழகாக எழுதியுள்ளார்.
நாவலில் சில இடங்களில் தட்டையான எழுத்துநடை இருந்தாலும்  பல இடங்களில் கவித்துவமான எழுத்துநடை நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

No comments: