Thursday, March 12, 2009

Tamil Kavithaigal

As Im reading so many Tamil blogs lately,i came across these 2 poems which i liked so much.

இரண்டாவது சூரிய உதயம்

அன்றைக்குக் காற்றே இல்லை
அலைகளும் எழாது செத்துப்போயிற்று
கடல்
மணலில் கால் புதைத்தல் என
நடந்து வருகையில்
மறுபடியும் ஒரு சூரிய உதயம்
இம்முறை தெற்கிலே

என்ன நிகழ்ந்தது?
எனது நகரம் எரிக்கப்பட்டது
எனது மக்கள் முகங்களை இழந்தனர்
எனது நிலம் எனது காற்று
எல்லாவற்றிலும்
அன்னியப் பதிவு.

கைகளை பின்புறம் இறுக்கிக்கட்டி
யாருக்காகக் காத்திருந்தீர்கள்?
முகில்களின் மீது நெருப்பு
தன் சேதியை எழுதியாயிற்று
இனியும் யார் காத்துள்ளனர்?

சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து
எழுந்து வருக

-- Cheran

-----------------------

அடையாளம்

பிறந்த வீட்டில்
கறுப்பி

அண்டைநாட்டில்
சிலோன் அகதிப்பொண்ணு

இலங்கையர் மத்தியில்
‘தெமள’

வடக்கில்
கிழக்கச்சி

மீன்பாடும் கிழக்கில்
நானொரு மலைக்காரி

மலையில்
மூதூர் காரியாக்கும்

ஆதிக்குடிகளிடம்
திருடப்பட்ட தீவாக இருக்கும்
என் புகுந்த நாட்டில்
அப்பாடா
பழையபடி நானொரு கறுப்பியானேன்.

--ஆழியாள் கவிதைகள்

-----------------------------------


No comments: