Wednesday, February 24, 2021

ரன்னிங் டைரி - 178

24-02-2021 08:30

கிழக்கு கடற்கரை பூங்கா 

ஆறு கிலோமீட்டர் வரை கவனம் முழுவதும் மூச்சிலே இருந்தது. ஒரே சீரான வேகத்தில் ஓடினேன். திரும்பி ஓடியபோது அப்படி அமையவில்லை. திரும்பியவுடன் எண்ணத்தில் தோன்றியது எப்போது மீண்டும் running events நடக்கும் என்ற கேள்விதான். கடைசியாக ரேஸில் ஓடியது எப்போது என்று யோசித்துக் பார்த்தேன். எனக்கு ஞாபகத்தில் வரவில்லை.என்னை முந்திக் கொண்டு  ஆறு பேர் அடங்கிய  ஒரு குழு ஓடிச் சென்றது. எனக்கு இப்படி குழுக்களைப் பார்த்தால் அவர்களுடன் சேர்ந்து ஓட ஆசைப் பாடுவேன். இன்றும் அப்படித்தான். அவர்களுக்கு இணையாக வேகத்தைக் கூட்டினேன். அவர்களோடு மூன்று கிலோமீட்டர்கள் ஓடினேன்.மெயின் ரோட்டிற்கு வந்த பிறகு மார்ஸல் ப்ரௌஸ்ட் எண்ணத்தில் தோன்றினார். அவரின் Swann's Way புத்தகத்தைப் பற்றி ஒரு புத்தகம் நேற்று பார்த்தேன்.Swann's Way படிக்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டே வீட்டை அடைந்தேன்.

No comments: