Monday, February 22, 2021

ரன்னிங் டைரி - 176

22-02-2021 08:30

கிழக்கு கடற்கரை பூங்கா 

கடந்த இரண்டு வாரங்களில் ஐந்து தடவை ஓடினேன். ஆனால் அதைப் பற்றி எழுத முடியாமல் போய்விட்டது . இன்று ஓட ஆரம்பித்தவுடன் "கண்டா வரச் சொல்லுங்க" பாடலை play செய்தேன். அந்த அம்மாளின் குரல் வசீகரமானது.எனக்கு ஏனோ அந்த பாடலின் இசைப் பிடிக்கவில்லை. வீடியோ பார்த்தபோது இருந்த புல்லரிப்பு பாடல் கேட்கும்போது இல்லை.அந்த பாட்டு முடிந்தவுடன் சாருநிவேதிதாவின் தேகம் நாவலின் சிதரவதைக் காட்சிகள் வந்தது. திரும்ப திரும்ப வந்து கொண்டே இருந்தது. ச்சே என்ன இது என்று எண்ணி நின்றுவிட்டேன். பீத்தோவனிடம் சரணடைவது என்று முடிவு செய்து ஐந்தாவது சிம்பனியை play செய்து மீண்டும் ஓட ஆரம்பித்தேன். கவனம் முழுவதும் இசையிலேயே இருந்தது.பீத்தோவனுக்கு நன்றி சொல்லி ஓடி முடித்தேன்.

No comments: