Monday, December 14, 2020

ரன்னிங் டைரி - 158

 12-12-2020 5:35

கிழக்கு கடற்கரை பூங்கா 

குளிர் காற்று.கிழக்கு கடற்கரை பூங்காவை அடைந்தவுடன் என்னை அறையாமலேயே ஒரு புத்துணர்வு வந்தது. ஓட்டத்தில் வேகம் கூடியது. கடலைப் பார்த்துக் கொண்டே ஓடினேன்.இன்று வயதானவர்கள் அதிகம் இல்லை. ஆட்களே அதிகம் இல்லை. நேற்று மரங்களைப் பற்றி ஒரு கட்டுரைப் படித்தேன். ஏனோ அது மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. மரங்கள் ஒரு அதிசயம். எனக்கு மரங்களையும் ,நிலவையும் பார்க்க ரொம்ப பிடிக்கும் . கடற்கரையில் நிலவைப் பார்ப்பது ஒரு பெரும் அனுபவம். இன்று நிலவில்லை இருந்திருந்தால் நான்றாக இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டே  வீட்டை அடைந்தேன்.

No comments: