Thursday, December 10, 2020

ரன்னிங் டைரி - 156

 10-12-2020 8:40

வீட்டிலிருந்து கிழக்குக்கடற்கரை 

இதமான வெய்யில். இன்று காலை எழுந்தவுடனே முடிவு செய்துவிட்டேன் கிழக்குகடற்கரைக்கு செல்ல வேண்டுமென்று. ஓட ஆரம்பித்தவுடன் எதிரே ஒரு பாடி சாக்லேடை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.எனக்கு அதைப் பார்த்தவுடன் நான் எப்படி சிறு சிறு நிகழ்வுகளையும் கொண்டாட  முடிவு செய்து அதைச் செய்ய ஆரம்பித்தேன் என்ற யோசிக்க ஆரம்பித்தேன். Aljunied -ல் இருந்த போது சின்ன சின்ன விசயங்களுக்கு அருகில் இருந்த Cheers கடைக்கு சென்று ஏதாவது பிடித்ததை வாங்கிச் சாப்பிடுவேன். அதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி. இந்த லாக்கடவுனில் அப்படி செய்ய முடியவில்லை. அப்போது சாப்பிட்டதெல்லாம் மனதில் வந்தது. கிழக்குக்கடற்கரை சிக்னல் வந்தது.என்னை அறியாமலேயே வேகம் அதிகரித்தது. கடலை பார்த்தவுடன் கண்ணில் கண்ணீர் வந்தது. ஓடுவதை நிறுத்தி விட்டு நின்று இரண்டு கைகளையும் நீட்டி கடல் காற்றை சுவாசித்தேன். கடல் ஒரு அதிசயம். கடல் ஒரு உணர்வு .. எப்படி ஏதேதோ மனதில் வந்து கொண்டே இருந்தது. கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு இன்று கடலைப் பார்த்தேன். என்ன ஒரு ஆனந்தம்! கடலை விட்டு பிரிய மனமில்லாமல் வீட்டிற்கு திரும்பினேன்.

No comments: